Friday 25 November 2016

அன்பை தவிர....



முகநூல் நண்பர்களுக்கு .......!
வணக்கம் ......
உங்களுடைய அபிமானத்திற்கு உரியவனாக
இருப்பது கண்டு மகிழ்ந்தேன் ....!

ஒரு நண்பரிடம் உள்ள நல்ல குணத்தை
பாராட்டுவது ஒரு நல்ல குணாம்சம் !
இப்படி ஒருவரையொருவர் பாராட்டுவது கூட
ஒருசில நண்பர்களுக்கு பிடிப்பதிலை ....!
என்ன ஒரே புகழ் பாடலா இருக்கே என்று கூட
கேட்கிறார்கள் .....! கேட்டுவிட்டு போகட்டும் .....
இருந்தாலும் அவர்களிடம் ஒரு கேள்வி ....!
ஒருவரின் நல்ல குணங்களை அவர் உயிரோடு
இருக்கும்போது மனம் திறந்து பாரட்ட முடியாத
நீங்கள் ....அவர் திடீரென்று போய்விட்டால் ....
பக்கம்பக்கமாக .....படம் போட்டு அஞ்சலி
செலுத்துவதால் என்ன பயன் ? என்ற
கேள்விக்கான பதில் மட்டும் தெரிவதே இல்லை ....!

ஒருவருடைய வறுமையும் ,இயலாமையும் ,
உடல்நலக்குறைவு,ஒருவருடைய நட்பை
பாதிக்கிறது என்பது உண்மைதான் ......!
ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தாது
என்பதை என்னுடைய நண்பர்கள்
உணர வேண்டும் ....!ஏனென்றால் ..?
அதையும் தாண்டி ஒருசிலர்
இருக்கத்தான் செய்கின்றனர் .....?
அதை தேடுவதுதான் சிரமம் ..!

தன்னுடைய வலியையும் ,
மன்னிப்பையும் ,புரிந்துகொண்டவர்களிடம்
மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.
என்பது மட்டும் எல்லோருக்கும்
தெரிந்த உண்மை ...!

ஆகவே. ............
உங்களை புரிந்துகொண்டவர்களை மட்டுமே
மனம். திறந்து பாராட்டுங்கள் !
உங்களிடம் முடிவாய் ஒன்றை சொல்ல
விரும்புகிறேன் ......!
நான் நட்பாக கைகோர்த்து காலங்களில்

உங்களுக்காக எதையும் செய்யாமல் ,
எதையாவது உங்களிடமிருந்து பெறவேண்டும்
என்று நினைப்பது எந்த வகையில் நியாயம் ?
ஆகவே அன்பை தவிர மற்றதெல்லாம்
பின்னுக்கு தள்ளி வைக்கவேண்டியவையே ....!
-----உங்கள் நட்பை தொடர முயற்சிக்கும்
தோழன் .....மணிவண்ணன்.புதுச்சேரி.


No comments:

Post a Comment