Wednesday 12 June 2019

முட்டாள்தனமாக ...திருமாவளவன்...!

#முட்டாள்தனமாக #பேசுகிறாரா #திருமாவளவன்...?

நாடு தழுவிய விவாதமாக சமூக வலைதளம் பற்றி விவாதம் எழுந்துள்ளது. அதில் பதிவு செய்வோரை தண்டிக்கப்படுவதும் சமூக வலைதளத்தின் சுதந்திரத்தை பறிக்க வேண்டும் என்பதை பற்றியும் மத்திய அரசு
விவாதித்து வருகிறது.

 சமூகவலைதளத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ்ஸின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதன் வழியில் உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடமிருந்து
வருவது புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் அதே குரல் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்களிடமிருந்தும் வருவதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆகவேதான் முட்டாள்தனமாக திருமாவளவன் அவர்கள் சிந்திக்கிறாறோ ? என்ற ஐயம் எழுகிறது.

 கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் அடுத்த குறவன் குப்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ராதிகாவின்
படத்தை பிரேம்குமார் என்பவர் ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் வெளியிட்ட தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதைக் கேள்விப்பட்ட அவருடைய மாமன் மகன் விக்னேஷ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட பிரேம்குமார் என்பவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

இந்த செய்தியை கண்டித்து அறிக்கை விட்ட திருமாவளவன் அவர்கள் சமூக வலைதளத்தின் மீது மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க
சட்டம் கொண்டு  வேண்டும் என்று சொல்வதோடு , நிற்காமல் அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைகள் போல சமூகவலைதளத்தில் தவறு செய்பவர் மீது விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது ஒரு முட்டாள் தனமான சிந்தனையாகவே சமூகத்தால் பார்க்கப்படுகிறது.

 தொடர்ந்து பிஜேபி அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பு சமூக வலைதளத்தை முடக்குவதும் அதற்கான செயலில் ஈடுபட்டு வருவதும் நாடு அறிந்ததே..

கடந்த காலத்தில் பால்தாக்கரே சம்பந்தமான சமூகவலைதள பதிவுக்கு கைது நடவடிக்கையை மேற்கொண்ட போது அதை உச்சநீதிமன்றம் தலையிட்டு தடுத்து நிறுத்தி இருப்பதை மறந்திருக்க முடியாது.

உத்திரப்பிரதேச முதலமைச்சர்
#ஆதித்யநாத்தை பத்திரிக்கையாளர்கள் சந்திக்கும்போது ஒரு பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் யோகியை பார்த்து "தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா..? "என்று கேட்பது போன்ற ஒரு வீடியோவை டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்
#பிரசாந்த்கனோஜியா சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
முதல்வர் யோகிக்கு அவதூறு ஏற்படுத்தியதாக
கனோஜியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லியில் அவருடைய வீட்டில் இருந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உத்திர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் அமலாகும்அதே பின்னணியில் திருமாவளவனும் பேசுவது சுதந்திரத்திற்கு பேச்சுரிமைக்கு எதிரானது.

காங்கிரஸ் கட்சி தலைவர் #ராகுல்காந்தி அவர்கள் "என்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வரை சிறையில் அடைப்பதாக இருந்தால் பல நாளிதழ்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கும். உத்தரபிரதேச முதல்வர் முட்டாள்தனமாக செயல்படுகிறார்" என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதை விசாரணை செய்த நீதிபதி இந்திரா பானர்ஜி அஜய் ரஸ்தோகி அடங்கிய உச்ச நீதிமன்ற
அமர்வு வழங்கியிருக்கின்ற உத்தரவு பெரிதும் உற்று நோக்கி கவனிக்க வேண்டியது.

"சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது அதனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் #பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதே நேரத்தில் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சுதந்திரம் என்ற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் " அவர்கள் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

 இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் திருமாவளவன் அவர்கள் தங்களுடைய பேச்சில் பொறுப்பற்ற தனமாகவும் சுதந்திரத்திற்கு எதிராகவும் பேச்சுரிமைக்கு எதிராகவும் மூர்க்கத்தனமான முட்டாள்தனமாக பேசி இருப்பதாகவே கருத வேண்டி இருக்கிறது.

 கடலூரில் ஏற்பட்டிருக்கின்ற அந்த பாதிப்பு உண்மையிலேயே வருந்தத்தக்கது இனி நடக்க கூடாது அதற்காக பேச்சுரிமையை எழுத்துரிமையை கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் திருமாவளவன் பேசுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல...!

 அதே நேரத்தில் அவர் குறிப்பிடும் அரபு நாடுகள் உடைய தண்டனை இங்கு வேண்டும் என்பதும் மீண்டும் காட்டுமிராண்டிகள் காலத்திற்கு இழுத்து செல்வதை திருமாவளவன் அவர்கள் ஏற்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது.

உத்தரபிரதேச நிகழ்வும் கடலூர் நிகழ்வும் சமூகவலைதளம் சம்பந்தமாக எழுந்துள்ள சர்ச்சையாக இருந்தாலும் அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் ஜனநாயக உரிமை எழுத்துரிமை பேச்சுரிமை பாதிக்கப்படாமல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
என்பதையே யோசிக்க வேண்டும் .

இன்றைக்கு இருக்கின்ற இந்திய தண்டனைச் சட்டம் போதுமானது அதைப் பயன்படுத்தியே சமூக வலைதள குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்பதையும் திருமாவளவன் அவர்கள் நம்ப வேண்டும்.

திருமாவளவன் அவர்கள் மதுரை மாவட்டம் #சந்தையூரில்அருந்ததிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் பற்றியும் எழுப்பப்பட்ட அவமான சுவர் பற்றியும் ஒரே ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
என்ற வகையில் கருத்து சொல்வதில் எந்த வித சமரசமும் கூடாது ஆனால் #ராஜாவைமிஞ்சிய #விசுவாசியை போல அவருடைய அறிக்கை அர்த்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய பேச்சில் எதிர்காலம் பற்றி சிந்தித்து பேசவேண்டும்.

 "#யாகாவராயினும்நா #காக்க வேண்டும்" என்பதே தமிழ் பொதுமறை.





Sunday 2 June 2019

மாடுகளை கட்டி போடுங்கள்...!

அடியேய் ...!
பெண்ணே...

உன் மூடிய மார்பகத்தை துப்பட்டாவைப் போட்டு இன்னும் மூடிக்கொள்...! என்று சொல்லும் வன்மம் உனக்கு புரியவில்லையா...?

பெண்கள் மட்டுமே மூடிக்கொள்ள வேண்டும்
ஆபாசத்தை பாதுகாக்க...

எப்பொழுதும் மூடப்படாத ஆண்களின் மேனி ஆபாசத்தை தடுத்துவிடுமோ...?

கற்பு பற்றி பேச வந்தால் அஃது இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்..! என்றான் பாரதி.

கடிவாளமற்ற ஆண்களின் குரூர பார்வையை செருப்பால் அடித்து முடக்கிப்போடாமல் ...
சின்ன துப்பட்டா எதை மறைத்து விடும்...?
எப்படி தடுத்துவிடும்...?

அழகும் , ஆபாசமும்
பார்வையில் இருக்கிறது..!
எல்லாமே ஆணுக்கானது என்ற ஆணாதிக்க சிந்தனையில் இருக்கிறது

வேலி தாண்டி மேயாமல் இருக்க மாடுகளை கட்டி போடுங்கள்...!
பயிர்கள் பாதுகாப்பாய் இருக்கும்...! என்று துணிந்து சொல் .
... மணிவண்ணன் மணி...