Saturday 12 November 2016

. நட்பு தொடரும் ...




12 - 11-2016 மறக்க முடியாத இந்த நாள் ...!
என்னோடு 19 வயதில் அதாவது 1983 - 84 - களில்
நெருங்கி பழகிய என்னுடைய பள்ளி தோழியை
இன்று சந்தித்து பேசினேன் .

கடந்த 33 ஆண்டுகள் சந்திக்க முடியாதவர் .
இன்று சந்தித்ததும் உண்மையிலே ஏதும்
பேச முடியவில்லை . முகம் ,குரல் ,உருவம்
எல்லாமே மாறிப்போய் இருந்தது .

என்னுடைய மகன் திருமணத்திற்கு எப்படியோ
தேடி கண்டுபிடித்து அவருடைய வீட்டில் பத்திரிகை
வைக்க சென்றேன் . அப்போது கூட அவரை சந்திக்க
முடியாமல் அவருடைய கணவரிடம் கொடுத்துவிட்டு
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்துவிட்டேன் .

அவர் வரவில்லை என்பது கூட நினைவில் நிற்கவில்லை .
இன்று அவரை சந்தித்தபோது... வர முடியாமைக்கு
வருத்தம் தெரிவித்துக்கொண்ட போதுதான் மீண்டும்
அவரின் நினைவு மனதில் நின்றது .

ஏதும் அறியாத அந்த பருவத்தில் ... தன்னோடு படித்தவரை
மனதில் நிறுத்திக்கொள்ள முடிந்ததேயொழிய ...
அதற்கு எந்த அர்த்தத்தையும் கொடுக்க முடியவில்லை .

இன்று ....
இருவருமே இரண்டு குடும்பத்தின் பொறுப்புள்ள தலைவர்கள் .
காலம் கடந்த அந்த தோழமை ஒரு அர்த்தத்தை இருவருக்கும்
பொதுவில் வைத்தது . நட்பின் இலக்கணம் இன்னும் தொடரும் என்று ...


No comments:

Post a Comment