Tuesday 2 June 2015

எனது பக்கத்தை படிக்காமல் போய்விடு....

எனது பக்கத்தை 
படிக்காமல் போய்விடு...!

எவரும் சொல்லாததை
நான் சொல்லிட போவதில்லை .
ஆகவே ...
என் பக்கங்களை படிக்காமல்
போய்விடு.

ஒவ்வொரு முறையும் சொல்கிறாய்
உன்னை ...
எழுத்தாலும் ,வார்த்தையாலும் ,
வசப்படுத்துவதாய் .
அது நானல்ல ... தமிழ் ..!

தமிழை மூச்சு என்றவர்கள்,
காதலையே ...
சுவாசித்து இருக்கிறார்கள்.
அதனால் ...
எவர் தொட்டாலும் ,ஒட்டிக்கொள்ளும் ,
மகரந்தம் தூவிவிட்டார்கள் .

கிழிந்த பனையோலைகளும்  ,
சிதைந்து போன செப்பேடுகளும்,
எப்பொழுதும் கனன்றுகொண்டு..
கவிதையொடு...
காதல் கட்டுண்டு கிடக்கிறது .

 எரித்து தொலைக்கட்டும்,
யாழ்ப்பாண நூலகம் போல் ...
இனி வரும் காதலர்களுக்கு,
வசீகரமான வார்த்தை கிடைக்காமல் ,
வாடி தொலைந்து போகட்டும் ...!