எனது பக்கத்தை
படிக்காமல் போய்விடு...!
எவரும் சொல்லாததை
நான் சொல்லிட போவதில்லை .
ஆகவே ...
என் பக்கங்களை படிக்காமல்
போய்விடு.
ஒவ்வொரு முறையும் சொல்கிறாய்
உன்னை ...
எழுத்தாலும் ,வார்த்தையாலும் ,
வசப்படுத்துவதாய் .
அது நானல்ல ... தமிழ் ..!
தமிழை மூச்சு என்றவர்கள்,
காதலையே ...
சுவாசித்து இருக்கிறார்கள்.
அதனால் ...
எவர் தொட்டாலும் ,ஒட்டிக்கொள்ளும் ,
மகரந்தம் தூவிவிட்டார்கள் .
கிழிந்த பனையோலைகளும் ,
சிதைந்து போன செப்பேடுகளும்,
எப்பொழுதும் கனன்றுகொண்டு..
கவிதையொடு...
காதல் கட்டுண்டு கிடக்கிறது .
எரித்து தொலைக்கட்டும்,
யாழ்ப்பாண நூலகம் போல் ...
இனி வரும் காதலர்களுக்கு,
வசீகரமான வார்த்தை கிடைக்காமல் ,
வாடி தொலைந்து போகட்டும் ...!
படிக்காமல் போய்விடு...!
எவரும் சொல்லாததை
நான் சொல்லிட போவதில்லை .
ஆகவே ...
என் பக்கங்களை படிக்காமல்
போய்விடு.
ஒவ்வொரு முறையும் சொல்கிறாய்
உன்னை ...
எழுத்தாலும் ,வார்த்தையாலும் ,
வசப்படுத்துவதாய் .
அது நானல்ல ... தமிழ் ..!
தமிழை மூச்சு என்றவர்கள்,
காதலையே ...
சுவாசித்து இருக்கிறார்கள்.
அதனால் ...
எவர் தொட்டாலும் ,ஒட்டிக்கொள்ளும் ,
மகரந்தம் தூவிவிட்டார்கள் .
கிழிந்த பனையோலைகளும் ,
சிதைந்து போன செப்பேடுகளும்,
எப்பொழுதும் கனன்றுகொண்டு..
கவிதையொடு...
காதல் கட்டுண்டு கிடக்கிறது .
எரித்து தொலைக்கட்டும்,
யாழ்ப்பாண நூலகம் போல் ...
இனி வரும் காதலர்களுக்கு,
வசீகரமான வார்த்தை கிடைக்காமல் ,
வாடி தொலைந்து போகட்டும் ...!