Friday 6 September 2019

சிதைக்கப்படுகிறதா...?

சிதைக்கப்படுகிறதா...?
கம்யூனிஸ்டுகளின்
ஜனநாயக மத்தியத்துவ
கோட்பாடு...

இந்த கேள்வியை இடதுசாரி
இளைஞர்கள் சமூக வலைதளத்தில் கேட்டுக்கொண்டே
இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் ‌சரியான
வழிகாட்டுதலும்
திட்டமிடலும் இல்லையென்றால்
தோழர்களின் தியாகம் வீணடிக்கப்படும்.
இல்லையென்றால்
சந்தர்ப்பவாதிகள்
பயன்படுத்திக்கொள்வார்கள்.

இவைகள் எல்லா
காலத்திலும்
எல்லா
இடங்களிலும்
நடந்து கொண்டே
இருக்கிறது.

உலகமயத்தால்
இன்னும் படுமோசமாகி
போனது. அது இடதுசாரி இயக்கத்தையும்
விட்டு வைக்கவில்லை.
அதனால்
அன்னிய வர்க்க சித்தாந்தம்
வேகமாக ஊடுருவி விட்டன.

யாரும் தியாகம் செய்ய
தயாராகவில்லை.
எல்லோரும் தலைவராகவே
ஆசைப்படுகிறார்கள்.
அதனால்...
பதவி சண்டை ,
சாதிய கண்ணோட்டம்,
கோஷ்டி போக்கு,
பாராளுமன்ற
சந்தர்ப்பவாதம்.
என நீண்டு போனதால்...?
இடதுசாரி இயக்கத்தில் மாபெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை எதிர்த்த
போராட்டத்தை
இடதுசாரி இயக்கங்கள் நடத்திக்
கொண்டு இருக்கிறது.

இன்னும்
குறிப்பாக சொல்லப் போனால்...
இடதுசாரி இயக்கங்கள்
வளர முடியாத இன்றைய சூழலில்
அதை எதிர்த்த போராட்டத்தை இன்றைய இளைஞர்கள்
நடத்திக்கொண்டே
இருப்பதால் தான் வேகமாக வளர முடியாவிட்டாலும்...
அழிந்து போகாமல்
இன்னும் இருக்கிறது.

அதற்கு மேலும் வலுசேர்க்கும்
வேலையை சமூக வலைதளம்
செய்து கொண்டு
இருக்கிறது. அதனால் தான்
ஜனநாயக மத்தியத்துவ
கோட்பாடு சிதைந்த போகாமல்
மாபெரும் விவாதங்களை
நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.