Thursday 24 December 2015

இந்திய வம்சாவளி எனும் அடிமை சொல்...!



இலங்கை மலையக
முகநூல் நண்பர்களே ...!
வணக்கம் .

,இலங்கையில் வாழும் மலையக மக்கள் பல நூறு
ஆண்டுகளாய் மூன்றாம் தர மக்களாய் வாழ்ந்து
வருகிறார்கள் .

அவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு
பஞ்சம் பிழைக்கவே இந்தியாவிலிருந்து
குறிப்பாக தமிழகத்திலிருந்து போனவர்கள்
என்பது மறுக்கமுடியாது .

கடந்த ஐந்து தலைமுறையாக
இலங்கையில் மலையக பகுதியில் தேயிலைத்தோட்டத்.தொழிலாளியாக
வாழ்ந்து வருகிறார்கள் .

 இலங்கை அரசும்  இதுவரை
எந்தவித அடிப்படை உரிமையும்
செய்து கொடுக்காத்தது மட்டுமல்ல ...

தனியார் தேயிலை எஸ்டேட்  நிர்வாகமும்
லயன்கள் என்ற கொட்டடையில்
மலையக மக்களை எந்தவித அடிப்படை
வாழ்வுரிமையும் கொடுக்காமல் உழைப்பை
சுரண்டுவதையும் கண்டுகொள்வதே இல்லை .

பல பிரதேசங்களில் பிரஜா உரிமை கூட
இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள் .
வெளி உலகிற்கே தெரியாது .

மலையக மக்களுக்காக குரல் கொடுப்போம்
என்று சொன்னவர்கள் எல்லாம்
மலையக மக்களின் வாக்குகளை
வாங்கி சென்று ஆளும் அரசுக்கு அடிபணிந்து அவர்களின் செருப்பை நக்கியே பிழைத்து போனார்கள் .

இலங்கை பேரினவாத அரசோடு போராடிய
ஈழ போராளிகளில் சக போராளியாக போராட
வந்த இளைஞர்களையும் பெரியண்ணன்
மனோபாவத்தில் இருந்த போராளி குழுக்கள்
தீண்ட தகாதவர்களாக மலையக இளைஞர்களை
வெறுத்து ஒதுக்கினார்கள் .

ஒடுக்கப்பட்டவர்களில் மலையக மக்கள் தான்
அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக
அழிந்து போனவர்கள் . இவர்களுக்கான
விடுதலை பற்றிபேசுவர்களும்
இந்திய வம்சாவளியினர் என்று சொல்வதன் மூலம்
வந்தேரிகள் நாங்கள் என்று. தாங்களாகவே    தம்பட்டம் அடித்துக்கொண்டு வருகிறார்கள் .

நீண்டகாலமாக என் நெஞ்சில் இந்திய வம்சாவளி
என்று கதை அடிப்போர் பற்றி எழுந்த கேள்விகளை கிழே தொகுத்துள்ளேன் .

விளக்கம் சொல்லும் தகுதி உள்ளவர்கள்
விளக்கலாம் .

 1. இந்திய வம்சாவளியினர் என்று சொல்வது சரியா.?

 2. அப்படி தொடர்ந்து மலையக மக்கள் சொல்வதால்
அவர்களுக்கு அது நன்மையா ...? தீமையா...?

"3. இந்திய வம்சாவளி " என்ற. சொற்றொடர் சரியா...?

4. இல்லை ,"இந்திய வம்சாவழியினர் " அல்லது
"இந்திய வழித்தோன்றல் " என்பது சரியா...?

5. அடிப்படையான வாழ்வுரிமை இல்லாமல் அல்லாடும் மலையக மக்களை இந்திய வம்சாவழியினர் என்று தொடர்ந்து சொல்வது மூலம். அவைகளை பெறமுடியுமா ...?

இந்த கேள்விக்கெல்லம் விடை காணமுடியாமல்
இருந்து வருகிறேன் .
தங்களால் முடிந்தால். எவர் வேண்டுமானாலும் விளக்கவும் .


Thursday 1 October 2015

தலைக்கவசம்....?,

தலைக்கவசம் அணிவது தொடர்பாக ..
போராடிய மதுரை கிளை வழக்குரைஞர்கள்
சங்கத்தலைவர் .பி.தர்மராஜ் , செயலாலர் .
ஏகே.ராமசாமி மீது நீதி மன்ற அவமதிப்பு
வழக்கு ..!
--------------------------------------------------

பொதுவாக இந்த பிரச்சனையை அணுகினால்
சட்டத்தை நிலை நாட்டக்கூடிய வழக்குரைஞர்களே
இப்படி போராடலாமா..?

மேதமை பொருந்திய நீதிபதிகளையும் , நீதிமன்ற
தீர்ப்பின் மீதும். வழக்குரைஞர்களே  விமர்சனம் வைக்கலாமா ...?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் ,
அதற்கு வழக்கறிஞர்கள் விதிவிலக்கா...?

வழக்கு விசாரணையை வெளிப்படைத்தன்மையில்
உலகமே பார்க்கும் வகையில் ஊடக துணையோடு விசாரணை நடத்தியது சரியானதுதானே...?

இப்படிப்பட்ட கேள்விகள் உலகம் முழுவதும்
பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு எழுந்தது ....!

ஆனால் ...
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ,
கீழ் கண்ட கேள்விக்கான விடை தெரியாமல்       மக்கள் மனம் குழம்பியும் கிடக்கிறது ....!

1)  வழக்குரைஞர்களும் இந்திய நாட்டின்
குடிமக்களாக இருக்கும் போது எழுத்துரிமை,
பேச்சுரிமை ,போராடும் உரிமை என்று இந்திய அரசியல் சாசனம் கொடுத்துள்ள அந்த உரிமைகள்
பொருந்தாதா ....?

2) நீதிபதிகள் மேன்மை பொருந்தியவர்கள் என்பதிலோ , நீதியை நிலை நாட்டுவர்கள் என்பதிலோ எந்த மாற்று கருத்துமில்லை .
ஆனால் தமிழக முதல்வரின் சொத்துகுவிப்பு
வழக்கில் நீதிபதி.குமாரசாமி அவர்கள்
வழங்கிய தீர்ப்பும்,

காஞ்சிமடத்தில் படுகொலை செய்யப்பட்ட
சங்கர ராமன் கொலை வழக்கில் வழங்கிய தீர்ப்பும் ,
இன்றளவில் வியப்பிற்கும் , விவாதத்திற்கு ,
விமர்சனத்துக்கு உள்ளாக்கும் வகையில் இருக்கும் போது எல்லோரும் வாயை மூடிக்கொண்டு
மேல் முறையீடுதான் செய்ய வேண்டும் என்று
சொல்வது பேச்சுரிமையை மறுத்ததோடு ,
நீதிபதிகள் சொல்வது  கடவுளின் வாக்கு என்று
கொள்ளமுடியுமா ...?

கடவுள்கள் உருவாக்கியதாக சொல்லப்படும்
வேதங்களையும் , மத நூல்களையும்  விஞ்ஞான
பார்வையில் விவாதித்து கருத்து சொல்லும்
21 ஆம் நூற்றாண்டில் நீதிபதிகளின் தீர்ப்பை
விவாதிக்க கூடாது என்பதும் ,விமர்சனத்துக்கு
அப்பாற்பட்டது என்பதும் எப்படி பொருள் கொள்வது ?

3) தலைக்கவசம் அவசியம் அணியவேண்டும்
என்பதிலோ , மக்களின் பாதுகாப்பு குறித்து
நீதிமன்றம் கவலையோடு பார்ப்பது குறித்தோ,
அது குறித்து ஆணையிடுவதிலோ,
எந்தவிதமாற்றுக்கருத்துமில்லை. ஆனால்
உடனடியாக அமலாக்க இயலாத , வாகனத்தில்
பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிய
வேண்டும் என்று சாத்தியமில்லாத வகையில்  நிர்பந்தப்படுத்தி ஆணையிட்டதே விவாதத்தை ஏற்படுத்தியது என்பது மறுப்பதற்கில்லையே ...?

4) சட்ட விசாரணையை வெளிப்படையாக
உலகம் அறியும் படி ஊடகத்தை பயன்படுத்தி
வெளியிட்டது உண்மையிலே வரவேற்க தக்க
புதுமை போல தெரிந்தாலும் , பாலியல் தொடர்பான
வழக்குகளில் , தீவிரவாத ,பயங்கரவாத வழக்குகளில் இப்படிப்பட்ட நடைமுறையை பின்பற்ற
இயலுமா ...?

5) சென்னை உயர்நீதி மன்றத்தின் ஒரு கிளைதான்
மதுரை உயர்நீதிமன்ற கிளையும் , அதன் பார் கவுன்சில் அமைப்பும் என்பதும் அனைவரும்
அறிந்த விடயம். அதில் குறையேற்படுமாயின்
அதை மேன்மை பொருந்திய நீதிமான்கள் சரி
செய்து நடத்துவார்கள் என்ற நம்பிக்கையிலே
இந்த வழக்கை மக்கள் பார்க்கிறார்கள் . ஆனால்
கால வரையறையின்றி மூடிவிடலாம் என்று
ஆணையிட்டால் ...? ஏழை எளிய மக்களின்
சுமையை எவர் தங்குவார்கள் ...?

6) தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்
என்பதைப்போல நாடுமுழுவதும் உள்ள காவல்துறை லாக்கப் கொலைகளையும் , முறையற்ற என்கவுண்டர் கொலைகளையும் செய்து சட்டத்தை
தன் கையில் எடுக்கும்போது ....நீதியை காப்பாற்ற
போராடும் வழக்குரைஞர்களும், நீதியை நிலை
நாட்டும் நீதிமான்களும் விவாதப்பொருளாக
மாறலாமா ...?

இவையாவும் விமர்சனம் அல்ல ....
ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான
நீதித்துறை மீதுள்ள கரிசனம் பற்றியதே...!


Saturday 12 September 2015

இந்த உலகம் யாருக்கு ...!

வெற்றிபெற்றவர்களுக்கே
இந்த உலகம் என்றால் ...?

தோல்வி அடைந்தவர்கள் ...!
எங்கே போவது...?

 ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு
மற்றவருக்கு கிடைக்காதபோது....?

எந்த இலக்கை வைத்து தீர்மானித்தீர்
வெற்றி - தோல்வியை ...?

கோழை கும்பிடும் , ஈனகையூட்டும் ,
அடகு போகும் தன்மானமும் ,

முட்டாள்களின்  அதிகாரமும் - பணமும் , ,
எம்மை தீர்மானிக்குமென்றால் ...?

ஒருமுறை அல்ல...
ஓராயிரம் முறை சொல்லுங்கள் .

இவர்கள்
வாழ தகுதியற்றவர் என்றே ...!


Saturday 22 August 2015

வேறு வழியில்லை...!

வேறு வழியில்லை...!

உலகிலேயே
மிகக்கூரிய கொலைவாள்கள்
வார்த்தைகளாக இருக்கிறன .

நிறைந்த  போதையாகவும்
வார்த்தைகள்  இருகின்றன.

என்னை
மன்னித்துவிடு..!

உன்னை வீழ்த்த
வேறு வழியில்லை.

அந்த இரண்டில் ஒன்றை
பயன்படுத்துகிறேன் ...

Friday 21 August 2015

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2015..!

இலங்கை தமிழ் - மலையக மக்களுக்கு
கைகொடுக்குமா..?
நாடாளுமன்ற தேர்தல் ..!
-------------------------------------------------------------------------
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் போது
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களும் ,
மனித உரிமை ஆர்வலரும் உற்று நோக்கி
அதன் முடிவுகளை எதிர் நோக்கி இருந்தனர் .

பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதுமில்லாமல்
ஜனநாயக முறைப்படியே தேர்தல் நடந்து முடிந்துள்ளது . உண்மையிலே வரவேற்க தக்க
நிகழ்வாகும் .

வியாபார நிறுவனங்களாக மாறிப்போன
மலையக தொழிற்சங்கம் அதன் குடும்ப வாரிசுகள்
தோற்றுப்போய் உள்ளது .தொழிலாளி வர்கத்தின்
அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தி
இருக்கிறது .

இந்த தேர்தலின் போது ரணில் தலைமையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியும் , ராஜபக்‌ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும் , தேர்தல் வாக்குறுதியாக எதையும் முன் வைக்கவில்லை . மாறாக பெரும்பான்மை சிங்கள மக்களின் தலையாய கட்சி தாங்கள் தான்என்பதையே போட்டிபோட்டுகொண்டு பிரச்சாரம்
செய்தனர் . இன்னும் ஒரு படி மேலே போய்
உள் நாட்டு போரின் போது புலிகளால் தாக்கபட்ட
வாகனங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினர் .
இவையெல்லாமே சிங்கள இன உணர்வை தூண்டி
வாக்குகளை அறுவடை செய்தனர் .

சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய
கூட்டமைப்பும் , தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு  மாவட்டங்களின் பாதுகாப்பு கேடயமே தாங்கள் தான்
என்று தமிழ் உணர்வை அறுவடை செய்துள்ளது .
அதற்கு மேல் எதையும் முன்வைக்கவில்லை .

 இலங்கை தீவில் வாழும் சிங்கள மக்களும் , சிறுபான்மை தமிழ் - முஸ்லீம் மக்களும்
ஒன்றுபட்டு வாழ எந்த விதமான எதிர்காலத்திட்டத்தையும்,எவரும் முன் வைக்கவில்லை என்பது அரசியல் அய்யோக்கிதத்தனத்தை காட்டுகிறது .

போருக்கு பிந்தைய காலத்தில் ஏதுமற்று
அனாதைகள் ஆக்கபட்ட குழந்தைகள் ,
விதவை பெண்கள் , ஊனமுற்றோர் ஆகியோரின்
நிகழ்காலம் ,எதிர்காலம் குறித்து எவரும்
கண்டுகொள்ளாமல் ஓட்டு பொறுக்குவதிலே
கவனப்படுத்தபட்டார்கள் என்பது வேதனைகுரிய
விடையம்.

அடுக்கபட்ட முட்டையில் அடிமூட்டையாக,
ஒடுக்கப்பட்டோரில் ஓட்டாண்டிகளான...
மலையக மக்களின் ரத்தத்தை அட்டைகளும் ,
உயிரை எஸ்டேட் முதலாளிகளும் உறிஞ்சி
குடித்தால் நடை பிணமாக்கப்பட்டவர்கள்
அரசியல் அதிகாரத்தை நினைத்துகூட
பார்த்ததில்லை .

இன்று...
அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது .
அந்த மாற்றம் முழுமையானது
என்று சொல்வதற்கில்லை என்றாலும் கூட
ஏராளமான எதிர்பார்ப்பு இருக்கிறது .

மலையக மக்களின் அடிப்படை வாழ்வுரிமை ,
காணி உரிமை,சம்பள உயர்வு கோரிக்கை
இவையெல்லாம் பெறவேண்டும்
அதை நோக்கி தெரிவு செய்யப்பட்டவர்கள்
வாதாடி ,போராடி பெறுவார்கள் என்று
முழுமையாக நம்புவதற்கில்லை.

மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள்
மலைய மண்ணின் மைந்தர்களாக இருக்கலாம்
ஆனால் அவர்களும் சராசரி மனிதர்களே ..!
அதோடு தொழிலாளி வர்க குனாம்சம் அவ்வளவாக
அவர்களிடம் இல்லை . அதிகாரத்தை பிடிக்க
வேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கிறது .
வெற்றிக்கனியையும் மலையக மக்கள் அவர்களிடம் அள்ளிக்கொடுத்து இருக்கிறார்கள் .
பாராளுமன்ற ஜனநாயகத்தில் அவர்கள்  கரைந்து போகாமல் நீடிக்க தொழிலாளி வர்க்கசித்தாந்தம் இருக்கவேண்டும் . ஆனால் தெரிவு செய்யப்பட்ட எவருக்கும் அது இருப்பதாக தெரியவில்லை .

இருப்பினும் தெரிவு செய்யப்பட்ட தமிழ் -  மலையக
பாராளுமன்ற பிரதிநிதிகள் புதிய பாதையில்
பயணிப்பார்கள் என நம்புவோம் ..!
இல்லையேல் இவர்களும் தூக்கி எறியப்படுவார்கள்
என்பது நிச்சயம்.


Friday 14 August 2015

பேசா பொருள் ...!

முகநூலில் வெட்டித்தனமாக
பொழுதுபோக்குவோர்கள்
மத்தியில் பேசா பொருள் மீது
பேச வைப்போர் ஒரு சிலரே...

பொருளாதார ஏற்றத்தாழ்வினால்
அதிகம் பாதிக்கப்படுவது ...யார்...?
என்று சமீபத்தில் நல்லதொரு விவாதப்பொருள் வைத்துள்ள என் முகநூல் நண்பர் iskandar barak அவர்களை பாராட்ட வேண்டும் .

என்னுடைய பார்வையில் ...
பொருளாதார ஏற்றத்தாழ்விலிருந்து
அதிகம் பாதிக்கப்படுவது பெண்
என்பது மட்டுமல்ல ....!
அதிலிருந்து விடுவித்துக்கொள்ள
போராடும் சக போராளியும் பெண் ...!

பெண்ணாக பிறந்ததிலிருந்து
 சமூக - பொருளாதார பாதிப்பிலிருந்து
உயிர்வாழ. ஆண்களை காட்டிலும்  தொடர்ந்து போராடிகொண்டிருப்பவள் பெண் .. !

இன்று சமூகத்தின் பார்வையில் சமூக
பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கு
உள்நாட்டிலோ , அது வெளிநாட்டிலோ
கூடுதலாக உழைப்பவர்கள்  ஆண்கள்
மட்டும்தான் என்று எல்லோரும்
நினைக்கிறார்கள் அது முழுவதும்
உண்மையல்ல ...!

குடும்ப சுமையை தூக்கிச்சுமக்க
சக ஆண் உறவுகள் இல்லாத போது...?
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
எத்தனையோ பெண்கள் வேலை செய்து
தன் குடும்ப பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை
போக்க பாடுபட்டு வருகிறார்கள் என்பதை
எவரும் மறுக்கமுடியாது .

ஆண் ...ஆணை மையப்படுத்தியே
இந்த சமூகம் இயங்குவதால் ஆணின்
உழைப்பும் ,ஆணின் சுமையை மட்டுமே
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது .

பெண்ணின் சுமைகளும் ,
பெண்ணின் உழைப்பும் கணக்கில்எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஆணின் உழைப்புக்கு  கூலியாகவும் ,
மாதச்சம்பளமாக பெறப்படுவது மட்டுமே
கணக்கில் எடுத்துக்கொள்ளும் சமூகம்
காலையிலிருந்து இரவு வரை குடும்ப
வேலைகளில் உழைப்பதை கண்டுகொள்வதுமில்லை...
பண மதிப்பீட்டில் கணக்கிடுவதுமில்லை...!

அது மட்டுமல்ல ...
வரதட்சணையால் பெண்ணும் ,
பெண் வீட்டாரும் ஒட்டுமொத்தமாக
பாதிக்கபடுகிறார்கள் .வரதட்சணை
பெறும் வீட்டாருக்காக ...வரதட்சணை
கேட்பதும் பெண் ....! தன் மகனுக்காக
கேட்கப்படும் வரதட்சனையால் சிறு
பயனை கூட அடையாமல் அவபெயரை
மட்டுமே சுமப்பவள் பெண் என்பது
பரிதாபத்துக்குரிய விஷயம் .

ஆணாதிக்க சமூகத்தின் அத்தனை
சிலுவைகளையும் சுமந்துகொண்டு
ஆண்களை வாழவைப்பவள்
பெண் ...!

இவையெல்லாமே
விவாதிக்கபடாமல்...?
ஆணின் மனநிலையில்
மாற்றம் வர வாய்பில்லை...!


Saturday 8 August 2015

முகநூலில் .....!



நண்பர்கள் ...
நண்பர்களாக இருக்கவேண்டும் ..!
------------------------------------------

பரபரப்பு....
அரசியல்..பற்றியோ...
ஆட்சி மாற்றம் பற்றியோ...
அன்றாட நிகழ்வு பற்றியோ...
 தமது பக்கத்தில் பதிவிடும்  போதும்..

அதிகமாக...
உணர்ச்சிவசபடுகிறார்கள் ..!
அது அவர்கள்  மனதுக்கு மட்டுமல்ல ...
உடலுக்கும் நல்லதல்ல ...
இது  கிண்டல் அடிக்க அல்ல...!
உண்மை ...
இது ஏதோ ஒரு சிலர் மட்டுமல்ல ...
இவர்களைப்போல பலர் இருக்கிறார்கள் .

உண்மையாக ...
ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறவர்கள்
அப்படி பேசுவதாலேயே...
அவர்கள் நினைப்பதலேயே ....
 அத்தனையும் சரியென்று நினைக்கிறார்கள் .
அவர்கள் காட்டும் பாதையில்
பயணிக்கவேண்டும் என வாதிடுகிறார்கள் .

மாற்று கருத்துக்கோ ...
மாற்று சிந்தனைக்கோ ...
இடமில்லை என்பது போல பேசுவதும்,
சமூக விரோதியைப்போல சித்தரிப்பதும்
சகிக்க முடியவில்லை .

மாற்று கருத்துக்கு காதுகொடுப்பதும்,
மாற்று சிந்தனையை ஆக்கபூர்வமாக
எதிர்கொள்ளும், விவாதிப்பது
 சரியான பார்வை ..!
இவைகள் ....முகனூலில் உள்ள
படித்தவர்களிடமும் கூட இல்லை.

விஞ்ஞான ரீதியாக எல்லாத்துக்கும்
இரண்டு பக்கங்கள் இருக்கிறது ..
என்பதை ஏற்க மறுக்கிறார்கள் .....

ஒரு கருத்தின் மீதோ..
நிகழ்வின் மீதோ எதிரும் புதிருமான கருத்து
வந்தால்தானே...?
எது சரி என்று ஆய்வு செய்ய முடியும் .

 நான் நினைப்பதைத்தான்
மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதும் ,
நான் எழுதுவதைத்தான மற்றவர்களும்
எழுத வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்...? சமமாகும் ...?....

நம்மோடு ...
ஓரளவுக்கு ஒத்துபோகிறவர்களோடு தான்
ஒத்து போகமுடியும் .மறுப்பதற்கில்லை .
அதற்காக....
நமக்கு சரி நிகர் சமானமாக
யாருமே இல்லை.....என்ற முடிவில் பேசுவது
எழுதுவது முறையற்றது .

இவையெல்லாமே
முக நூல் நட்பை வளர்க்காது.
என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறோம் .
கண்மூடித்தனமாக ...
எனக்கு அது பற்றி கவலை இல்லை
என்போரை எதில் சேர்ப்பது...?
விடுவிப்பதே ....நலம்


மன்னிப்பு ..!

மன்னிப்பே ..!
உம்மை மன்னிப்போம் .. ! !
--------------------------------
மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பில் கருத்து
சொல்வதில் தப்பில்லை . ஆனால் அதே பாதிப்பு
தனக்கு வரும்போது உங்களால் கருத்து சொல்ல
முடியுமா..?

இந்த கேள்வியில் இருந்துதான் எல்லா நியாயங்களும் மறைக்கப்பட்டு சதைக்கு சதை,
ரத்தத்துக்கு ரத்தம், பழிக்கு பழி. என்ற
காட்டுமிராண்டித்தனம் நெஞ்சில் அறயப்படுகிறது .

மன்னிப்பு என்பது அகராதில் ஏற்றப்பட்டுள்ள
வெறும் எழுத்தல்ல ..! மன்னிப்பதும் ,மன்னிப்பை
பெறுவதும் எந்த மிருகங்களும் ,பறவைகளும் செய்வதில்லை . மனிதர்களால் மட்டுமே செய்ய கூடிய மகத்தான தியாகம் .

அந்த தியாகத்தை நீங்களோ..?நானோ..?
அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது.
அதற்கு பக்குவமும்,பயிற்சியும் தேவை.
அதை மடங்களும் , மதங்களும் செய்ய
முடியாமல் தோற்று போய்விட்டன .



Tuesday 2 June 2015

எனது பக்கத்தை படிக்காமல் போய்விடு....

எனது பக்கத்தை 
படிக்காமல் போய்விடு...!

எவரும் சொல்லாததை
நான் சொல்லிட போவதில்லை .
ஆகவே ...
என் பக்கங்களை படிக்காமல்
போய்விடு.

ஒவ்வொரு முறையும் சொல்கிறாய்
உன்னை ...
எழுத்தாலும் ,வார்த்தையாலும் ,
வசப்படுத்துவதாய் .
அது நானல்ல ... தமிழ் ..!

தமிழை மூச்சு என்றவர்கள்,
காதலையே ...
சுவாசித்து இருக்கிறார்கள்.
அதனால் ...
எவர் தொட்டாலும் ,ஒட்டிக்கொள்ளும் ,
மகரந்தம் தூவிவிட்டார்கள் .

கிழிந்த பனையோலைகளும்  ,
சிதைந்து போன செப்பேடுகளும்,
எப்பொழுதும் கனன்றுகொண்டு..
கவிதையொடு...
காதல் கட்டுண்டு கிடக்கிறது .

 எரித்து தொலைக்கட்டும்,
யாழ்ப்பாண நூலகம் போல் ...
இனி வரும் காதலர்களுக்கு,
வசீகரமான வார்த்தை கிடைக்காமல் ,
வாடி தொலைந்து போகட்டும் ...!