Saturday 22 December 2018

அருந்ததியனின் விடுதலை..?

ஆதிதிராவிடர் ( பறையர் ) - அருந்ததியர் என்ற ஒடுக்கப்பட்ட மக்களிடையே மேலும் ,கீழுமாய் சாதிய பாகுபாடு இருப்பதும் , அதுவும் சனாதான சாதிய ஒடுக்குமுறையாக இருப்பதும் கண்டதும் ,கேட்டது.  முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள்  அதிர்ச்சி அடைந்தனர் . அது பொய்யாக இருக்க வேண்டும் என்று கூட நினைத்தனர்.

ஆதிக்க சாதிகளை போலவே தனக்கும்  கீழே ஒரு சமூகம் ( அருந்ததியர் ) இருக்க வேண்டும் என நினைக்கும் சாதிய படி நிலையை ஆதிதிராவிட ( பறையர் ) மக்களுக்கும் நிறுவி கட்டிக்காத்து வரும் மனுதர்ம இழிநிலை சேரிக்குள்ளும் கடைபிடிக்கப்படுகிறது.

அதை உடைத்தெரிய ஆதித்தமிழர் பேரவை
போன்ற அமைப்பின் மூலம் நடைபெற்ற
போரட்டங்களே வெளி உலகிற்கு கொண்டு
வந்து இருக்கிறது.

அதில் குறிப்பாய் மதுரை #சந்தையூரில் அருந்ததிய மக்களுக்கு எதிராக #அவமானசுவர் " கட்டப்பட்டதும், அதை எதிர்த்த போராட்டமும் ,அதை கட்டிக்காக்க ஆதிதிராவிடர்கள் ( பறையர் ) உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தோற்று போனதும் சாதிய படிநிலையின் கடைகோடியில் அடுக்கப்பட்ட மூட்டையில் அடி மூட்டையாய் அருந்ததியர்கள் தான் இருக்கிறார்கள் என்பதும் தீண்டாமை கொடுமை அவர்கள் மீதும் கடைபிடிக்கப்படுகிறது அம்பலப்பட்டு போனது.

ஆதிதிராவிடர்கள் - அருந்ததிய மக்கள் மீது தொடுத்த சாதிய ஒடுக்குமுறையை ஒரே சமூகத்துக்குள் நடக்கும் "சிறுமோதல் " என்று மூடிபோட்டும் மூடமுடியாமல்போனது

ஆதிதிராவிட மக்கள் , அருந்ததிய மக்கள் மீது தொடுத்த சாதிய ஒடுக்குமுறையை கண்டித்தவர்களை , அருந்ததிய மக்களின்
போராட்டத்தை ஆதரித்தவர்களை ,
பிளவுவாதிளாகவும் , சாதி வெறியர்களாகவும் சமூக விரோதிகளாகவும்
சித்தரிக்கப்பட்டார்கள்.

சித்தரசூர் , பெண்ணாடம் , மதுரை சந்தையூர்அருகம்பட்டு தொடங்கி விழுப்புர மாவட்டத்தில் அருந்ததிய மக்கள் மீது  நடைபெற்ற தொடர்தாக்குதல்கள் , வன்முறைகள் யாவும் ஆதிதிராவிட மக்கள் தான் செய்து வருகிறார்கள் என்ற உண்மை வெளியே வந்த போதுதான் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் தீண்டாமை கொடுமையை அவர்களும்கடைபிடிக்கின்றனர் என்ற போது சாதிய படிநிலை கொடூரம் வெளிப்படையாக தெரிந்தது.

இதையெல்லாம் பேசுவதும் ,எழுதுவதும்
பிரித்தாள்வதோ ? ஒரு சார்பு நிலையோ அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சாதிய படிநிலையின் ஒடுக்குமுறையை எந்த மட்டத்தில் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டும் .அது இனியும் தொடராமல் தடுக்கப்பட வேண்டும் .

அதற்கு இடதுசாரி இயக்கங்களின் தலையீடும் போராட்டங்களும் போதுமானதாக இல்லை.
திரு .அதியமானின் ஆதித்தமிழர் பேரவை
குறிப்பிட்டு சொல்லும் படியான தலையீடும்
போராட்டமும் செய்து வருகிறது என்பது
பாரட்டதக்கது..



Saturday 1 December 2018

கறுப்பு ....நீலம் ...சிவப்பு ...?


கறுப்பு ,நீலத்தைப்போல
சிவப்பு என்பது வண்ணம் அல்ல...!
அது ஒரு சித்தாந்தந்தம் .
சித்தாந்தம் ஒருபோதும் வெற்று அடையாளமாய் வண்ணத்தோடு
வண்ணமாய் கலப்பது அல்ல...

மனிதனுக்கு மனிதன் பிறப்பால்,
நிறத்தால் , மொழியால் ,எல்லையால்
வேறுபாட்டை ஏற்காத தத்துவம்.

மனிதனுக்கு மனிதன் நேசிப்பையும் ,
அன்பையும் ,எல்லோரும் எல்லமே
 சரிநிகர் சமானமென சமத்துவத்தை
 நிறுவிய தத்துவம்தான் மார்க்சியம் .

மார்க்சியம் படிக்கக்கூட வேண்டாம்
அதை படித்தவர்களின் வழிகாட்டுதலில்
 நடந்தாலே போதும்.

ஆனால் அங்குதான் பிரச்சனையே...!
வழிகாட்டுவோர் தட்டுத்தடுமாறி போனதால்
எல்லாமே தலைகீழ் பிம்பமாகி போனது.

அம்பேத்கரை ,பெரியாரை பேசினால் ,எழுதினால்...? தப்பேதுமில்லை
அவரின் ஆதரவாளர்களை அணிதிரட்ட முடியும் என்று நினைத்து போட்ட
கணக்குதான் தப்பாகி போனது.

வர்க்க போராட்டத்தின் மூலமே
அனைத்தையும் ஒழிக்க முடியும்
என்ற அடிப்படையே மாற்றி அமைத்து
அம்பலப்பட்டு போனது ...!

சிவப்பு சிந்தனையில் திரட்டப்பட்டோருக்கு
 நீல சட்டையையும் , கறுப்பு சட்டையையும்
அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.

சட்டையே இல்லாத வெற்று உடம்பாக வந்தவனுக்கு , சிவப்பு சட்டையை போட்டு
மனிதனாக்கிய நீங்களே அவனை
மீண்டும் நீலத்துக்கும் ,கறுப்புக்கும்
மாற்றுவது மூட நம்பிக்கை இல்லையா ...?

ஒடுக்கப்பட்டோர் விடுதலையும் ,
கடவுள் மறுப்பும், , பாலின சமத்துவமும்
மார்க்சியத்தின் உள்ளடக்கமா இல்லையா ...?

முழுக்க முழுக்க விஞ்ஞானம் தான் இயக்கவியல் ..
அதன் சமூகவிஞ்ஞான தத்துவம் தான் மார்க்சியம் ...

அந்த மார்க்சியத்தை படித்தவர்களும் ,
அதை உள்வாங்கியவர்களும் ,
உரக்க சொல்லும் வார்த்தை ....

லால் சலாமும் ,ஜெய் பீம்..மும்
கறுப்பும் , நீலமும் கலக்க வேண்டுமாம்...?

மூட நம்பிக்கையில் முத்து எடுப்போர்...!



Saturday 17 November 2018

சாதி தீயில் எரியும் உடன்கட்டை ...!

பெண் என்பவள் ...
ஆண் சமுகத்துக்கு கீழ் படிந்தவள்.
அவள் ஆணின் காமவெறியை
தீர்த்து வைக்கும் கழிப்பறை.
இவை இரண்டையும் மதமும் ,
சாதியும் , ஆணாதிக்க சமூகமும்,
தொடர்ந்து கற்பித்து வருகிறது .

ஆனாதிக்க சமூகத்தின் பாலியல்
தேவையை பெண் இனம் எப்படி
நிறைவு செய்ய வேண்டும் என்ற
பாதையை வகுத்து கொடுத்து இருக்கிறது.
 அதன் படிதான் செயல்பட வேண்டும்.
அந்த பாதைதான்,மதம் ,சாதி ,என்ற
மின்சார வேலிகள் அமைக்கபட்ட பாதை.

பெண் அதிலிருந்து இம்மியளவு மாறினாலும், எதிர்த்தாலும் ,ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவார் கள் என்ற அரசகட்டளையை அமலாக்கி வருகிறது.

இந்த வன்முறை உடன்கட்டைக்கு
ஒப்பானான கொடுங்செயல் .
காட்டுமிராண்டிகளின் வன்முறை.
நாகரீக சமூகம் ஏற்கமுடியாத
தேசிய அவமானம் .

அதை எதிர்த்து பெண் இனம்
சமரசமற்ற எதிர்ப்பை ,போராட்டத்தை
தன் குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும் . அதுவும் குறிப்பாய் குழந்தை பருவத்திலிருந்தே பயிற்சியை மேற்கொள்ளவேண்டும் .

பெண் என்றால் அவள் பாலியல் தேவைக்காக படைக்கப்பட்டவள் என்ற
ஆணாதிக்க கருத்தியலை
பயிற்றுவித்துக்கொண்டு இருக்கும்
சாதி,மத, சமூக கட்டமைப்பை உடைத்தெரிய கலாச்சார போராட்டத்தை நடத்த வேண்டும் .

பாலியல் பலாத்காரத்தை ,பாலியல் ஒடுக்குமுறையை எதிர்கொள்ள பாலின சமத்துவம் வேண்டி வெற்று போராட்டம்
மட்டுமே போதுமானது அல்ல.

சட்ட ரீதியான தண்டனையும்,
பாலியல் எதிர் தாக்குதல் நடத்த பெண்ணுக்கு ஆயுத பயிற்சியும், இந்திய தண்டனை சட்டத்திலிருந்து அவளுக்கு விலக்கும்அளிக்க வேண்டும் .

பாலியல் வன்முறைக்கு எதிராக போராடும் ஆண்-பெண் இருபாலரையும்
ஒருங்கிணைந்த போராட்டகுழுக்களை அமைக்க வேண்டும் .

இவைகளை செய்தால்...? ஒரே நாளில்
ஒரே காலகட்டத்தில் ஒழிக முடியும்
என்ற மாயாவாதத்தின் நம்பிக்கை அல்ல.
இந்த கருத்தியல் காட்டுமிராண்டி செயலை
கட்டுபடுத்த வாய்ப்பு இருக்கலாம்.

இந்தியாவில் மத,சாதிய, ஒடுக்குமுறைக்கு
எதிர்த்த போராட்டம் சமூக மாற்றத்திற்கான
போராட்டம் மட்டுமல்ல ...
பாலின சமுத்துவம் பெற பெண்இன விடுதலைக்கான போராட்டம்.

ஆயிரம் ஆயிரமான கருத்துக்கள் வரட்டும்
கருத்துக்களின் மோதலில்தான் சமூக
மாற்றத்திற்கான பாதையை செப்பனிட்டு
பயணிக்க முடியும்.



Wednesday 17 October 2018

அருந்ததியனுக்கு மேல ஒரு கோடு "பரியேறும் பெருமாள் "


"பட்டியல் இன சமூகம் மற்ற சமூகத்தால்
தொடுக்கப்படும் சாதிய கொடுமையை
இதை விட ஆழமாக , அழுத்தமாக எவராலும்
பதிவு செய்ய முடியாது.

சட்டக்கல்லூரியில் சேறும் போது முதல்வரின்
கேள்விக்கு "டாக்டராக போறேன்" என்று கதானாயகன் சொல்லும் சொல்லுக்கு அம்பேத்கரின் மேன்மை விண்ணை தொட்டது.

பரியேறும் பெருமாள் பி ஏ பி எல் மேல ஒரு கோடு...! என்ற வசனம் நகைச்சுவை போல
சித்தரித்தாலும் , ஒடுக்கப்பட்ட மக்கள் மீது
போடப்பட்டுள்ள மனுவின் அடையாள கோட்டை  அழிக்க முடியாமல் நீளும் கொடுமையும் , அதை அழிக்க தொடரும்
போராட்டமும் ,யதார்த்தம் .

சாதிய ஒடுக்கு முறை என்றால்...?
சக்கிலியனுக்கு மேல் நிலையில்
உள்ள பள்ளர் , பறையர் இன மக்களின்
மீது தொடுக்கப்படும் ஒடுக்கு முறையே...! என்பதைத்தான் காண்பிக்கப்படுகிறது.

சட்டக்கல்லூரி முதல்வர்.சென்னை கலைக்குழு
ராமுவின் ( கேரெக்டர் ) கதாப்பாத்திரம் கல்லூரி முதல்வர் பேசும் உரையாடல் என்ன...?

"உன் அப்பன் பெண் வேஷம் போடுபவன்....
என் அப்பன் யார் தெரியுமா ...?
ரோட்டில் செருப்பு தைப்பவன் அவன் மகன்
தான் நான் " என்று பேசுகிறது.
இதன் மூலம் நீ எவ்வளவோ உயர்ந்தவன் என்று  பரியனை சமாதான படுத்தவும் ,
உனக்கும் கீழே செருப்பு தைப்பவன் இருக்கிற்றான் " என்று சொல்லாமல் சொல்வதுதான் அபத்தம் . ஒடுக்குமுறையின் மறைக்க முடியாத ,மறுக்க முடியாத நீட்சி.

சாதிய படி நிலையில் ...
 "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு..."
அதுதான் மனுவின் சாதிய கட்டுமானம் சரியாமல் பாதுகாக்க போடப்பட்டுள்ள காங்கிரீட் அடித்தளம் அதையே
ஆழமாக இந்த படத்தில் ஆணித்தரமான நிறுவி இருக்கிறார்கள் என்பது நோக்கத்தையே திசை திருப்பி விட்டு உள்ளது.

முடிவாய் ...
அருந்ததியனுக்கு மேல ஒரு கோடு போடப்பட்டுள்ளது.



Monday 15 October 2018

Me too.. ! நானும் கூட...?


நானும்பாதிக்கப்பட்டேன்..!

வெளியில் சொல்ல நினைத்ததை ,
சொல்ல மறைத்ததை சொல்ல
வேண்டும் என்பது சரியானதே.
அது பெண்ணுக்கு மட்டுமல்ல..
ஆணுக்கும் தான்...!

இப்போதாவது சொல்லுங்கள்...!

அப்போ..சொல்லாமல்...
இப்போ..ஏன் சொல்லவேண்டும்...?
இந்த கேள்வியில் எனக்கு உடன்பாடு
இல்லை.எப்போது செய்தாலும் தப்பு தப்புதான் .இப்போதும் சொல்ல வாய்ப்பு கிடைத்ததே என்று ஆதரிக்க வேண்டும்.

அதோடு...பெண் தனக்கு ஏற்பட்ட
பாதிப்பை எப்போ வேண்டுமானாலும்
சொல்லாம். சொல்ல முடியும் .அது பற்றி
விவாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை ஆணாதிக்க சமூகம் ஏற்க வேண்டும் .

பொதுவாய்...

பிரபலங்கள் மட்டுமல்ல..
ஒட்டு மொத்த ஆண் சமூகமே அதிர்ந்து போய் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது .

இது பற்றிய விவாதத்தை ஆண் சமூகம் ஏற்க மறுக்கிறது என்பதாலே அது பற்றி பேசாமல் தடுக்க முடியாது என்பதையும் உணர வேண்டும் .

பெண் என்பதாலே அவர்கள்
சொல்வது சரியாகிவிடுமா ..?
என்ற வாதமும் விவாதிக்கப்பட
வேண்டும். அதற்காக பெண் சொல்வதில் உண்மையே இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா ...? பெண் தன் மீது தொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவை  எப்போதும் வெளியில் சொல்வதே தப்பு என்று தான் காலங்காலமாக அந்த வாய்ப்புகதவு அடைக்கப்பட்டே கிடக்கிறது.

இனி...
அது தகர்த்து எரியப்பட்டு உள்ளது. ஆனால் இதை பயன்படுத்தி பெண் சமூகம் வெளியே வருவதும் , தனக்கான பேச்சுரிமையை , கருத்துரிமையை பயன்படுத்த இன்னும் சில காலங்கள் ஆகலாம்.

பேசாத பொருள் மீது சமீபத்தில்
சட்டமும் , சமூகமும் பேசிவருகிறது.
பேசட்டும் , பேசித்தான் ஆகவேண்டும்.

கவிஞர் . வைரமுத்து மீது ...!


#வைரமுத்துமீதுசின்மயி
மட்டுமல்ல இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொது வெளியில் சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது
சொல்கிற்றார்கள்.

பெண்கள் அப்படி சொல்வது அவ்வளவு
எளிதானது அல்ல..!
அதோடு பாலியல் பாதிப்புக்குள்ளான நபரின் சாதியையும்,பாலியல் தொல்லை
கொடுத்தோரின் சாதியையும்
வைத்தும் விவாதிப்பது முறையும் அல்ல..
சரியுமல்ல..

அது வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டன் என்ற குருட்டு குரலை
போன்றதாகும்.

எல்லா ஆண்களுமே வாய்ப்பு கிடைக்கும்
போது பாலியல் அத்துமீறல் செய்கிறார்கள்
என்பதே உண்மை. இதில் எந்த வரையறை யும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை.

பாலியல் வன்முறை நடந்ததா..?
இல்லையா...? என்று விவாதித்து
விசாரிக்கப்பட வேண்டும்.

இங்கே...
இந்த விவகாரம்
பொருத்த வரையில்...
ஆண்கள்,பெண்களை
எது வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும்
செய்யலாம் என்ற ஆணாதிக்க
நிலையில் இருந்து சமூக ரீதியாக ,சட்ட ரீதியாக விசாரணை வளையத்துக்குள்
கொண்டு வருவதையே ஜீரனிக்க முடியவில்லை. என்றஆணாதிக்கத்தின் அகங்காரமே வானுக்கும் ,பூமிக்குமாய் துள்ளிக் குதிக்கிறது.

இந்த விவாதத்தில்  எதிர்த்தும்,ஆதரித்தும்
தற்போது பேசிக்கொண்டு இருக்கும் ஆண்களுக்கும் இது பொருந்தும் என்பது தெரியாமலில்லை.

கம்யூனிஸ்ட்டுகள் என்றால் பங்கறைங்களா.?


கம்யூனிஸ்ட்டுகள்
என்றால்....
பரட்டை தலையும்,
தாடியும்,
கிழிந்த ஆடையும்,
கொண்டவர்கள்
பங்கறைங்க...
பக்கிங்க... என்ற
ஆழமான அவதூறு நம்
எதிரிகளால்...
தொடர்ந்து பரப்பபட்டு
வருகிறது.

கட்சியின்
ஊழியர்கள் முதல்
தலைவர்கள் வரை
எதில் கவனம்
செலுத்து கி்றோமோ..?
இல்லையோ..
தனிமனித பார்வையில்,
தனித்துவத்தில் ,
ஆடை விஷயத்தில்
கவனம் செலுத்த வேண்டும்.
இது நுகர்வு கலாச்சாரம்
என்று புறம் தள்ளுவது
தத்துவ ஏமாற்று.

இன்னொரு புறத்தில்...
கம்யூனிஸ்ட் என்றால்
எளிமைதானே...?
நல்ல ஆடை உடுத்தினால்
பகட்டாக தெரியுமே..?
என்று பேசுவது
வரட்டுவாதமாகவே
பார்கி்றேன்.

கம்யூனிஸ்ட் என்று
தன்னை சொல்லிக்கொண்டு எல்லாவித சமூக சீர்கேடுகளையும் செய்யாமல்
இருக்கவேண்டுமேயொழிய...
ஆடை அணிவதிலோ...
நல்ல உணவு உண்பதிலோ..
அல்ல.!

அது ஒரு "ஒழுக்க நெறி."
அதை கடைபிடிப்போர்
கம்பீரமாக நடப்பதிலும்
நேர்த்தியானஆடை ஆடை
அணிவதிலோ
குறைகள் எதும் இல்லை...!


Tuesday 18 September 2018

அருந்ததிய மக்களின் போராட்டம் சாதிய போராட்டம் அல்ல...


அருந்ததிய மக்களுக்கான ஒடுக்குமுறை
எதிர்த்த போராட்டம் . அவர்களுக்கான
கல்வி - வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு
பெறுவதற்கான போராட்டம் என முக நூலில் நான் போடும் பதிவுகளை படிக்கும்
நண்பர்கள் என் கோரிக்கைக்கான
நியாயத்தை பார்க்காமல் நான் யார் ... ?
என்பதை பற்றியே தேடுகிறார்கள் .

நான் அந்த சாதியும் இல்லை.
சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவனும் இல்லை..இட ஒதுக்கீடு சாதி அடிப்படையிலே கொடுக்கப்பட்டு வருகிறது.

அதனால் ...
சாதிய படிநிலை கட்டமைப்பை
உங்களை போன்ற சேவை செய்வோர் தெரிந்து கொள்ளவேண்டும் .

பெரியார் சமூக நீதி போராளி.
சமூக நீதி என்றால் ...?
1. சமூகத்தில் ...
2 .கல்வியில் ...
3.வேலைவாய்ப்பில் ...
சமத்துவம் வேண்டும்
என்று போராடியவர்.
அதற்கு இட ஒதுக்கீடு
வேண்டும்.
ஆகவே சாதிய கணக்கெடுப்பு
நடத்தி இட ஒதுக்கீடு கொடுக்க
வேண்டும் என்றார்.அதை போராடியும் பெற்று தந்தார்.

இட ஒதுக்கீடும் தற்காலிக
ஏற்பாடுதானேயொழிய
நிரந்த தீர்வு இல்லை என்பதையும் சொன்னார்.

அடுக்கப்பட்ட மூட்டையில்
அடி மூட்டை தலித் என்ற ஒடுக்கப்பட்டோர்.
என்றனர்.ஒடுக்கப்பட்டோர் என்றால்..?
தமிழகத்தில் பள்ளர் ,பறையர்
என்றனர்.

ஆனால் ...
அவர்களுக்கும் கீழே சக்கிலியர்
என்ற அருந்ததிய மக்கள் இருக்கிறார்கள் என்பதும் ,அவர்களை பள்ளரும் ,பறையர்
என்ற சமூகத்தினர் சமூக ரீதியாக ஒடுக்குகிற்றார்கள்என்பதும் , தமக்கு கீழே அருந்ததிய மக்கள் இருக்க
வேண்டும் என்றும் அவர்களோடு கொடுப்பனை,கொள்வனை செய்வது கூடாது என்று சொல்வதோடு அவர்களும் தீன்ண்டாமையை அருந்ததிய மக்கள் மீது கடைபிடித்தார்கள். 

கவுரவ கொலையை பறையர்
செய்தார்கள் என்ற செய்தி
கரடி சித்தூர் , திருப்வனை ,
சந்தையூர் தீண்டாமை சுவர்,
விழுப்பத்து அருகம்பட்டு
காதல் திருமணம் செய்தவர்கள்
என்ற காரணத்தை காட்டி அருந்ததிய
மக்கள் மீது வன்முறை நிகழ்த்தினர்.
இந்த செய்தி வெளியே வந்த பிறகே அருந்ததியசமூகத்து மக்களுக்கான சமூக ,
விடுதலை , கல்வி வேலை வாய்பில் இட ஒதுக்கீடு தேவைபற்றி பேசவேண்டிய தேவைஏற்பட்டது.

தாழ்த்தபட்ட மக்களை தொட்டால் தான்" தீட்டு என்று சொன்ன மனு தர்மம்.
மரம் ஏறி தொழில் செய்யும்
நாடார் ,(சாணார் , ஈழவர்கள் )
என்ற சாதிய மக்களை பார்த்தாலே "தீட்டு " என்றுஒதுக்கி வைத்ததோடு அவர்கள்
(ஜாக்கெட் அணியாமல் ) மேலாடை துணி ஏதும் போடாமல் திறந்த மேனியாகவே வாழ வேண்டும்என்று நிர்பந்தித்தனர்.
அதிலிருந்து போராடி அவர்கள்
இன்று வெற்றி பெற்று உள்ளனர்

ஆனால் ...
சக்கிலியர் சமூகம் என்ற அருந்ததிய மக்கள் தமிழகத்தில்ப்போராடி
பறையர்க்கு கொடுக்கப்பட்ட
இட ஒதுக்கீட்டில் 3 % உள்
ஒதுக்கீடு பெற்று விட்டனர்.
புதுச்சேரியில் இன்று வரை
அருந்ததிய சமூகத்து மக்களுக்கு இட ஒதுக்கீடுஇல்லை . 

அதை கேட்ட போராட்டம் தான்சமூக நீதி கட்சி சார்பில் கோவை .
பன்னீர்செல்வம் தலைமையில்
புதுச்சேரியில் நேற்று (17 - 9 - 2018 ) நடைபெற்றது
அது ஒரு சமூகத்து மக்களின்
சமூக நீதி போராட்டம் .
அது சாதிய போராட்டம் அல்ல..
நானும் சாதிக்காரன் அல்ல.
சராசரி மனிதனில் ஒருவன்.
என்பதை உணர வேண்டுகிறேன்.


Tuesday 28 August 2018

சமஸ் என்ற சோமாஸ்க்கு....!


நேற்றைய தமிழ் இந்துவில்
சமஸ் அவர்கள் ,#கருணாநிதிஒரு
#சகாப்தம் " என்ற கட்டுரை புனைந்து
இருந்தார்.

படித்தவரெல்லாம் பாராட்டுகிறார்கள்.
அவரின் கருணாநிதியின் பலமும் ,பலகீனத்தை சொல்லி இருப்பதாய்
என் நண்பர் கூட சிலாகித்து கொண்டார்.

"#கருணாநிதியின்வாழ்க்ககை #மகாத்மாவினுடையதுஇல்லைஅதனாலே
#அதுமுக்கியமானதாகிறதுஒருசாமானியன்
#சறுக்கிவிழுந்திருந்தார்எல்லாமேன்மைகளுக்கும்இடையேகிழ்மைகளும்அவர்வாழ்வில் #இருந்தனசுயநலம்சூதுஊழல்குற்றம் , #குடும்பவாரிசுஅரசியல்எனஎல்லா       #சேறுகளும்அவர்மீதுஅப்பிஇருந்தன. #புனிதம்என்றுஎதுவும்அங்கில்லை ." என்று குறிப்பிட்டு எழுதிவிட்டு "#சடேரென்றுநம்மை #நோக்கிதிரும்பிஏன்இவ்வளவு
#வேட்டையாடிகள்நிறைந்தஇவ்வளவு
#வலிகள்மிகுந்தஇவ்வளவுஇழிவுகள்  #வாழ்க்கைதரப்படவேண்டும்?
#என்றுஅவர்கேட்டால்பதில்சொல்லஒரு
#வார்த்தையும்கிடைக்கபோவதில்லை" என்று
எல்லா கீழமைக்கும் ஒரே கேள்வியில்
கருணாநிதியை மகாத்மாவா ஆக்கிவிட்டார்.

அண்ணல் அம்பேதரும் , மோகன்தாஸ் காந்தியும், மகாத்மாவாக மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம்.?
எந்த இழிவையும் அவர்கள் மீது திணிக்கப்பட
வில்லையா..? அவர்கள் அதில் அனுபவித்ததால் தான் அவர்கள் மகாத்மா..!
இல்லையென்றால் அவர்களும் சராசரி மனிதர்களே . கருணாநிதி பற்றி மேலே சொல்லி வந்த எந்த கேவலத்தையும் ,காந்தியும் ,அம்பேத்கரும் ,
செய்யவில்லையே..?

எவ்வளவு வார்த்தை கொண்டு கருணாநிதியின் மாத்மியத்தை பேசினாலும்,
எழுதினாலும் மணல் வீடு சரிந்து போகும்
என்பதே யதார்த்தம்.

#கவிஞர் #கதாசிரியர் #பத்திரிக்கையாளர்,
#திரைக்கலைஞர் என்ற கருணாநிதியின் பரிமாணங்களை குறைத்து மதிப்பிடுவதற்கு
இல்லை.இவையெல்லாவற்றையும் கடந்து
#அரசியல்தலைவர் என்பதே அவர் அடைந்த
உச்சம் . அதுதான் இன்று பேச வைத்தது.
நாளையும் பேசப்போவது. அதில் அவரின்
முன் மாதிரியான பண்புகள், மாண்புகள்
என்று எதை சொல்ல முடியும்...?

அரசியலில் நேர்மை ,பொது வாழ்வில் தூய்மை , தனிநபர் ஒழுக்கம் , எளிமை,
பொது சொத்தை கையாளும் நேர்மை,
இப்படி கருணாநிதியை மேற்கோள் காட்ட, , உதாரண புருஷனாய்  எடுத்து சொல்ல முடியுமா...? மிஸ்டர் .சமஸ்..!

நீங்கள் குறிப்பிட்ட அண்ணா துரையும் ,
ஜெயலலிதாவும் , உத்தமர்கள் என்பதால்
அவர்களுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை. தமிழக அரசியலில் செல்வாக்கு உள்ள முதல்வர்கள் அவ்வளவே.

நிறைவாய் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிற்றேன். எவர் மரணத்தை யும் அனுஷ்க்க வேண்டுமேயொழிய ஆகா..ஓகோவென்று கொண்டாடக்கூடாது.
அப்படி கொண்டாடினால் அந்த மரணம்
மக்கள் மனங்களில் விவாதிக்கப்பட்டு
தோண்டி எடுத்து தூக்கிலிடப்படப்படும்.

"படித்தவன் வாதும் சூதும் செய்தால்
போவான் போவான் ஐயோவென்று போவான்." இவைகள் மகாகவி. பாரதியின் வரிகள்.

இவைகள் சாபமல்ல...! நீதியின் குரல்...!


ஒரு முழு நேர ஊழியனின் டைரி குறிப்பு...


#சூரியாவுக்குசமர்ப்பணம்..!

தேர்தல் காலங்களில்
நானும் ,என் மனைவியும்
காலையிலிருந்து
மாலை வரை பிடித்த
மைக்கை விடாமல்
ஆட்டோவில் பிரசாரம்
செய்து விட்டு இரவு
9 மணிக்கு பஸ் பிடித்து
10 மணிக்கு வீட்டிற்கு
வருவோம்.

வாடகை குடிசை வீடு
காதல் திருமணம்
இரு வீட்டிலும்
ஏற்க வில்லை.

வீட்டின் ஓரு மூலையில்
2 வயதும் 3 வயது
பையன்களும்
விளக்கு ஏற்றாமல்
தூங்கிக்கொண்டு
இருப்பார்கள்.

கட்சி பணியை
செய்த களைப்பை விட
குழந்தைகளை
பார்க்கும் போது ...
தலை சுற்றும்.
இருவருக்கும்
கண்களில் கண்ணீர்
கொட்டும்...!
கட்சி பணியை
தொடர வேண்டுமா...?
அப்படி செய்து என்ன
பண்ண போகிற்றோம்..?
ஓராயிரம் முறை மனபோராட்டத்தின்
கேள்விகள்.

தூங்கும் பிள்ளைகளை
எழுப்பி ,வாங்கி வந்த
பரோட்டாவை கொடுக்க
படும் பாடு...அப்பப்பா...!
இரவு 12 மணியை தொடும்.

காலையில்...
மீண்டும் அதே பணி
அதே மை...அதே பரோட்டா
அதே கண்ணீர். இது
நாங்கள் அனுபவித்த
கட்சி வாழ்க்கை.
கதை அல்ல....

கணவனும்
மனைவியும் கட்சி வேலை
செய்யும் அனைத்து
தோழர்களுக்கும்
பொருந்தும். அதில்
தோழர்.#ரமேஷ்பாபும்
#கீதாவும் இருந்தார்கள்.

எனக்கு தெரிந்து
நான் கட்சி பணிக்காக
மாதம் ரூ.250 மட்டுமே
பெற்றுக்கொண்டு
வாழ்ந்த காலங்கள் அவை.

வெளியில் கட்சியின்
இளைஞர் அமைப்பின்,
மாதர் அமைப்பின்
தலைவர்களாக அங்கீகாரம்
பெற்றாலும் குடும்ப சூழல்
இவ்வளவு தான்...!

இதே நிலையில் தான்
இடது சாரி இயக்கத்தில்
பணியாற்றிய அத்துனை
தோழர்களின் நிலைமையும்.

அந்த வருமானத்தில் தான்
படிக்க வைக்க வேண்டும்.
அதில்தான் சாப்பிட வேண்டும்.
பிறகு குழந்தைகளின்
படிப்பு செலவை கட்சியே
ஏற்றது.

அப்படித்தான்
இடதுசாரி கட்சியில்
இருக்கும் எல்லா
முழு நேர ஊழியர்களும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
என்ன...? இப்பொழுது
அவர்களுக்கு கொடுக்கும்
அலவன்சில் கொஞ்சம் மாற்றம்
வந்து இருக்கிறது அவ்வளவே.

அப்படியொரு தியாக
வாழ்வை ஏற்றுக்கொண்டு
படிக்க வைக்கப்பட்ட
பிள்ளைகள் இப்படி
#சூரியாவை போல
பாதியில் போகிறார்களே..?

இந்த இழப்பை எப்படி ஏற்பது..?
யாரிடம் முறையிடுவது...?
எப்படி தாங்க்கிக்கொள்வது..?
காலம் தணிக்கும் வரை
கண்ணீர் கரைந்து போகும்.

#சூரியாவுக்குகண்ணீரை
#காணிக்கையாக்குகிற்றேன்.

###கடலூர்.தோழர்.ரமேஷ் பாபு - கீதாவின் மகன் சூரியாவின் மறைவுக்கு எழுதியது.##


இடைவெளி...!



என் மீது ஒரு போதும்
பாவப்படாதே..!

அது இயலாதவனுக்கு
செய்யும் இறுதி அஞ்சலி.

என்னோடு ...
என் மீது உன் கோபத்தை
காட்டு..

உன் கோபம் தீரும் வரை
அவமானபடுத்த...
என் முகத்தில் காரி துப்பிவிடு...!

இன்னும் தீரவில்லை
என்றால்....?

நீண்ட இடைவெளி
விட்டுவிடு.

உனக்கு இனி வேலை இல்லை
அது கொன்று விடும்.

அம்மாவும் , 1970 - ம்...!


வீட்டில் 4 கறவை மாடுகள்
அதற்கு புல் அறுக்க வயலுக்கு
போகவேண்டும்.

அந்த மாடுகள் போடும்
சானியயை ஒரு இடத்தில்
அள்ளிப்போட வேண்டும்.

குமித்து வைத்த சானியை
ஒரு நாள் காலால் மிதித்து பக்குவமாக
கையால் உரண்டை பிடிக்க வேண்டும்.

அதை சானித்தட்டில் போட்டு
தலையில் சுமந்து மாடியில் தட்டி வராட்டி ஆக்க வேண்டும்.

மறு நாள் அந்த வராட்டியை
எடுத்து திருப்பி இன்னொரு
பக்கம் காய வைக்க வேண்டும்.

ஏன்னா...
வெறும் விறகு மட்டும் அடுப்பு எரிக்க போதாது.அடிக்கடி விறகு வாங்க முடியாது...
அப்போதெல்லாம் விறகு கடையில் வாங்க
வேண்டும்.

விறகு அடுப்பும் புகையுமாய்
வாழ்ந்து முடிந்து போனா
அம்மாவின் முகம் மட்டும்
கேஸ் அடிப்பில் வந்து மறைக்கிறது.




Tuesday 21 August 2018

அரசியல் மூடத்தனம்...!


கடந்த காலத்தில்
சிபிஎம் - லிருந்து
தணிகை செல்வம்..
லியோனி...
அந்த வரிசையில்
இன்று...
கிருஷ்ணகுமார்.

எழுத்து பணி செய்ய
போவதால் அந்த கட்சியின் மாநிலக்குழுவிலிருந்து
தன்னை விடுவித்து கொண்டதாக
எழுத்தாளரும் , முற்போக்கு
எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின்
தலைவருமான ச.தமிழ்ச்செல்வனை சொல்கிறார் கள்.

இவர்கள் மட்டுமல்ல...
அந்த இயக்கத்துக்கு
இன்னும் பலர் வரலாம்
போகலாம்.

குறிப்பிட்டு சொல்லப்போனால்
கட்சிக்குள் வந்து போகும் இவர்கள் பற்றியது அல்ல...இந்த விவாதம்.

இவர்கள்
சார்ந்த சிபிஎம் பற்றியதே ...!
சிபிஎம் - மட்டுமல்ல
எந்த இடது சாரி கட்சியாக
இருந்தாலும் அவைகளும் விமர்சனத்துக்கு
அப்பாற்பட்டவை அல்ல.

அந்த விவாதத்தை பொது வெளியில் நடத்துபர்கள்
கட்சிகாரர்கள்என்றால் அது
தடை செய்யப்பட்டு இருக்கிறது.

மற்றவர்கள் விவாதிக்கலாம்.
விமர்சிக்கலாம்.
அதுவும் கம்யூனிச நெறிமுறைக்கு
உட்பட்டு இருந்தால்..? நல்லது.

2000 ஆண்டில் திருவனந்தபுரத்தில்
சிபிஎம் கட்சி எப்படிதன் கட்சி திட்டத்தைமக்கள் ஜனாயக புரட்சி
நடத்துவதற்காக காலத்திற்கேற்ப
மேம்படுத்திக்கொண்டதோ...?
அதே போல் அந்தகட்சி
சுய பரிசோதனைக்கு
தன்னை உட்படுத்தி
கொள்ள வேண்டும்.
என்பதே இந்த விவாதத்தின்
அடி நாதம்.

ஏனென்றால்...
கட்சி தப்பு செய்தால்
வளர்ச்சி அடையமுடியாது.
தேக்க நிலையிலே இருக்கும்
புதிய வரவுகள் வராது
அவ்வளவு தான் .

ஆனால் .....?
அதன் கேடர்கள் வெளியேறினால்
பாதிப்பு அவர்களுக்கு
மட்டுமே என்ற பார்வையில்
சொல்வதிலும், எழுதுவதுவதிலும்
மாற்றம் வேண்டும்.

தனிமனித பாத்திரம் கட்சியின்
அங்கம் என்பதை அவர்கள் ஏற்க
மறுக்கிறார்களோ...? என்னவோ..?
கேடர் என்பது ஒருவன்
அல்ல...அந்த இயக்கத்தின்
ஆணி வேர்.

அதோடு...
அவன் குடும்பம், வாழ்க்கை எதிர்காலம்..இதையெல்லாம்
கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாமா...?

அதனால் வெளியேறி
போகிறவர்களை கெஞ்சி கூத்தாடி
நிற்க வைக்க வேண்டுமென்பது
அல்ல...அது சரியுமல்ல...!

உதாரணமாக ஒரு கட்சி ஊழியர்
மீது ஏவப்படும் மொட்டை கடுதாசியை கூட எல்லாம் பொய் என்று விட்டுவிடுவதோ..?
எல்லாம் சரி என்றே
ஏற்றுக்கொள்ளும் நடைமுறையோ
சிபிஎம் - க்கு இல்லை.

முழு நேர ஊழியர்கள்
பற்றியும் , பகுதி நேர
முன்னணி ஊழியர்கள்
பற்றியும் மணிகணக்கில்
வகுப்பு நடத்தி விட்டு
ஊழியர் அல்லது...
உறுப்பினர் வெளியே
போனால் ... அதற்கு
காரணம் அவர்களின்
சுயநலம்தான் என்பது
அபத்தம்.

ஏனென்றால்...
கட்சிக்குள் வரும்
போது இல்லாத
சுயநலம் போகும்
வந்து விட்டது என்று
சொல்லி அவரின்
பக்கத்தை மூடிவிடுவது...!
அந்த நபருக்கு நட்டம் அல்ல
அவர் இத்தனை காலம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட
கொள்கையில் ஏதோ
கோளாறு என்றுதான்
அர்த்தம்.

சிபிஎம் எடுக்கும்
வாந்தியை மற்றவர்கள்
பிடித்துக்கொள்கிறார்கள்
என்று அந்த கட்சியில்
உள்ளவர்கள் அடிக்கடி
சொல்ல கேட்டு இருக்கேன்.

ஏன் அடிக்கடி வாந்தி
வருகி்றது...?
வாந்தி எடுப்பவரை
மருத்துவ மனயில்
சேர்த்து வைத்தியம்
பார்க்க வேண்டுமேயொழிய,

வாந்தியை பற்றி விவாதிப்பதும்
வாந்திக்கு காரணம் வாந்தியே
என்று காரணம் காட்டும்
அரசியல் மூடத்தனத்தை
எப்படி புரிந்து ,எந்த வகையில் புரிந்து கொள்வது...?


துரோகம்..!

துரோகம்..!
மனிதனை நிலைகுலைய
வைக்கிறது.

மற்றவர்கள் சொல்லும்
போது அதன் அர்த்தமும்,
வலியும் , தெரிவதில்லை.

ஒவ்வொரு மனிதனும்
நேரே சந்திக்கும் போது...
மறக்க முடியவில்லை.

ஏன் அவர்களை அழிக்கி்றார்கள்
இல்லையேல்..?
தன்னைத்தானே
அழித்துக்கொள்கிறார்கள்
என்பதன் சூட்சமம் தெரிந்தது.

எந்த ஒரு மனிதனும்
வாழப்பிறந்தவர்களே
மறுப்பதற்கில்லை.

மன்னிப்போம்...!
மன ஆறுதலுக்கு மட்டுமே.
அதுதான்...
முடியவில்லையே...?

முயற்சி செய்வோம்
இல்லையேல்
பயிற்சி செய்வோம்.
முடியாதது எதுவுமில்லை.

தலீத்...!

#தலீத்என்றவார்த்தையில்ஒளிந்துகொள்ளும்ஐயோக்கியத்தனம்...!

பறையர், பள்ளர் இனத்தவர்கள்
"தலீத்" என்ற வார்த்தைக்குள்
ஒளிந்து கொண்டு "அருந்ததிய
மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அதை ஊடகங்களும், அரசியல்
கட்சிகளும் மூடி மறைக்கி்ன்றன.
அதற்கு காரணம் அதில் பணியாற்றும் பறையர், பள்ளர்
சாதியை சேர்ந்தவர்கள் செய்து
வருகிறார்கள்.

பிற சாதிகளைப்போல
பறையர், பள்ளர் இன மக்களும்
தனக்கும் கீழே இருக்கும் சக்கிலியர்
என்ற அருந்ததிய மக்கள் மீது
சாதி வெ்றியை,  தீண்டாமை கொடுமையை அரங்கேற்றி
வருகிறார்கள்.

கண்டமங்கலத்தில் அருந்ததிய
இளைஞன் பறையர் வீட்டு
பெண்ணை காதலித்து திருமணம்
செய்துகொண்டார் அதனால் அவர்கள் அடித்து கொல்லப்பட்டனர்.

திட்டக்குடியில் அருந்ததியர்கள்
வீடுகள் மீது பறையர் இனத்தவர்கள் தாக்குதல்..

மதுரை சந்தையூரில் அருந்ததிய
மக்களுக்கு எதிரான தீண்டாமை
சுவர்...!

இப்போது...?
திருச்சி சிறுகனூரில் அருந்ததிய
இளைஞர் வாயில் சிறுநீர்
பாச்சி குடிக்க வைத்த
காட்டுமிராண்டித்தனம்.

இதையும் வெளி உ்லகிற்கு தெரியாமல் மூடி மறைக்க எவ்வளவோ முயன்றார்கள்
ஆனால் முடியவில்லை.

இப்போது "தலீத்"என்ற பொந்துக்குள் ஓடி ஒளிந்து
கொண்டார்கள்.

இந்த தீண்டாமை கொடுமையை ஒரே சமூகத்துக்குள் நடக்கும்
குற்றமாக மார்க்சிஸ்ட் கட்சியும் பார்ப்பது வேதனை.

இந்த ஒடுக்கு முறையும் "தீண்டாமை கொடுமை" தான் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியும் ஏற்க மறுக்கிறது என்பது இதன் மூலம்
அம்பலமாகிறது.



நீதியின் குரல்...!

#சமஸ்  என்ற #சோமாஸ்க்கு....!

நேற்றைய தமிழ் இந்துவில்
சமஸ் அவர்கள் ,#கருணாநிதிஒரு
#சகாப்தம் " என்ற கட்டுரை புனைந்து
இருந்தார்.

படித்தவரெல்லாம் பாராட்டுகிறார்கள்.
அவரின் கருணாநிதியின் பலமும் ,பலகீனத்தை சொல்லி இருப்பதாய்
என் நண்பர் கூட சிலாகித்து கொண்டார்.

"#கருணாநிதியின்வாழ்க்ககை #மகாத்மாவினுடையதுஇல்லைஅதனாலே
#அதுமுக்கியமானதாகிறதுஒருசாமானியன்
#சறுக்கிவிழுந்திருந்தார்எல்லாமேன்மைகளுக்கும்இடையேகிழ்மைகளும்அவர்வாழ்வில் #இருந்தனசுயநலம்சூதுஊழல்குற்றம் , #குடும்பவாரிசுஅரசியல்எனஎல்லா       #சேறுகளும்அவர்மீதுஅப்பிஇருந்தன. #புனிதம்என்றுஎதுவும்அங்கில்லை ." என்று குறிப்பிட்டு எழுதிவிட்டு "#சடேரென்றுநம்மை #நோக்கிதிரும்பிஏன்இவ்வளவு
#வேட்டையாடிகள்நிறைந்தஇவ்வளவு
#வலிகள்மிகுந்தஇவ்வளவுஇழிவுகள்  #வாழ்க்கைதரப்படவேண்டும்?
#என்றுஅவர்கேட்டால்பதில்சொல்லஒரு
#வார்த்தையும்கிடைக்கபோவதில்லை" என்று
எல்லா கீழமைக்கும் ஒரே கேள்வியில்
கருணாநிதியை மகாத்மாவா ஆக்கிவிட்டார்.

அண்ணல் அம்பேதரும் , மோகன்தாஸ் காந்தியும், மகாத்மாவாக மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம்.?
எந்த இழிவையும் அவர்கள் மீது திணிக்கப்பட
வில்லையா..? அவர்கள் அதில் அனுபவித்ததால் தான் அவர்கள் மகாத்மா..!
இல்லையென்றால் அவர்களும் சராசரி மனிதர்களே . கருணாநிதி பற்றி மேலே சொல்லி வந்த எந்த கேவலத்தையும் ,காந்தியும் ,அம்பேத்கரும் ,
செய்யவில்லையே..?

எவ்வளவு வார்த்தை கொண்டு கருணாநிதியின் மாத்மியத்தை பேசினாலும்,
எழுதினாலும் மணல் வீடு சரிந்து போகும்
என்பதே யதார்த்தம்.

#கவிஞர் #கதாசிரியர் #பத்திரிக்கையாளர்,
#திரைக்கலைஞர் என்ற கருணாநிதியின் பரிமாணங்களை குறைத்து மதிப்பிடுவதற்கு
இல்லை.இவையெல்லாவற்றையும் கடந்து
#அரசியல்தலைவர் என்பதே அவர் அடைந்த
உச்சம் . அதுதான் இன்று பேச வைத்தது.
நாளையும் பேசப்போவது. அதில் அவரின்
முன் மாதிரியான பண்புகள், மாண்புகள்
என்று எதை சொல்ல முடியும்...?

அரசியலில் நேர்மை ,பொது வாழ்வில் தூய்மை , தனிநபர் ஒழுக்கம் , எளிமை,
பொது சொத்தை கையாளும் நேர்மை,
இப்படி கருணாநிதியை மேற்கோள் காட்ட, , உதாரண புருஷனாய்  எடுத்து சொல்ல முடியுமா...? மிஸ்டர் .சமஸ்..!

நீங்கள் குறிப்பிட்ட அண்ணா துரையும் ,
ஜெயலலிதாவும் , உத்தமர்கள் என்பதால்
அவர்களுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை. தமிழக அரசியலில் செல்வாக்கு உள்ள முதல்வர்கள் அவ்வளவே.

நிறைவாய் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிற்றேன். எவர் மரணத்தை யும் அனுஷ்க்க வேண்டுமேயொழிய ஆகா..ஓகோவென்று கொண்டாடக்கூடாது.
அப்படி கொண்டாடினால் அந்த மரணம்
மக்கள் மனங்களில் விவாதிக்கப்பட்டு
தோண்டி எடுத்து தூக்கிலிடப்படப்படும்.

"படித்தவன் வாதும் சூதும் செய்தால்
போவான் போவான் ஐயோவென்று போவான்." இவைகள் மகாகவி. பாரதியின் வரிகள்.

இவைகள் சாபமல்ல...! நீதியின் குரல்...!

Thursday 2 August 2018

கடந்து போன பழசு...!

"பழசை நினைக்காதீர்
அது முடிந்து போனது...! "
எல்லோருடைய அறிவுரையும்
இதுவாகத்தான் இருக்கிறது.

இரண்டு பாக்கெட்டும்
ஓட்டையாய் போன...
கிழிந்த காக்கி கால்சட்டையில்
விடலை பருவமும் கடந்து போனது..!

கடந்து போன காலங்களில்...
வயது மட்டும் ஒட்டிக்கொண்டே
வந்து தொலைக்கிறது.
காலத்தை கடத்தும் நினைவாய்.



நட்பு...!

நட்பு...!

அதை...
எதோடும் ஒப்பிட
முடியவில்லை.

தாயோடும்...
தங்கையோடும்...
காதலியோடும்..
மனைவியோடும்...கூட

முயற்சித்து தோல்வி
கண்டேன்.


Saturday 28 July 2018

துரோகம்..!

துரோகம்..!
மனிதனை நிலைகுலைய
வைக்கிறது.

மற்றவர்கள் சொல்லும்
போது அதன் அர்த்தமும்,
வலியும் , தெரிவதில்லை.

ஒவ்வொரு மனிதனும்
நேரே சந்திக்கும் போது...
மறக்க முடியவில்லை.

ஏன் அவர்களை அழிக்கி்றார்கள்
இல்லையேல்..?
தன்னைத்தானே
அழித்துக்கொள்கிறார்கள்
என்பதன் சூட்சமம் தெரிந்தது.

எந்த ஒரு மனிதனும்
வாழப்பிறந்தவர்களே
மறுப்பதற்கில்லை.

மன்னிப்போம்...!
மன ஆறுதலுக்கு மட்டுமே.
அதுதான்...
முடியவில்லையே...?

முயற்சி செய்வோம்
இல்லையேல்
பயிற்சி செய்வோம்.
முடியாதது எதுவுமில்லை...!
மனிதனை நிலைகுலைய
வைக்கிறது.

மற்றவர்கள் சொல்லும்
போது அதன் அர்த்தமும்,
வலியும் , தெரிவதில்லை.

ஒவ்வொரு மனிதனும்
நேரே சந்திக்கும் போது...
மறக்க முடியவில்லை.

ஏன் அவர்களை அழிக்கி்றார்கள்
இல்லையேல்..?
தன்னைத்தானே
அழித்துக்கொள்கிறார்கள்
என்பதன் சூட்சமம் தெரிந்தது.

எந்த ஒரு மனிதனும்
வாழப்பிறந்தவர்களே
மறுப்பதற்கில்லை.

மன்னிப்போம்...!
மன ஆறுதலுக்கு மட்டுமே.
அதுதான்...
முடியவில்லையே...?

முயற்சி செய்வோம்
இல்லையேல்
பயிற்சி செய்வோம்.
முடியாதது எதுவுமில்லை.


Saturday 17 March 2018

சந்தையூர் சாதி வெறி...!

சந்தையூரில் நடப்பது....?

சந்தையூர் அருந்ததியர்
மக்களை பிரித்து வைத்து இருப்பது வெறும் சுவர் அல்ல...!

பறையருக்கு கீழ் அருந்ததியர்
என்ற சாதி ஆதிக்கத்தை நிறுவுவதற்கே அந்த அவமான
சுவர் எழுப்பப்பட்டு இருக்கிறது.

அதை அரசு இயந்திரமும், ஊடகமும்
தலீத் மக்களுக்குள்ளே இருக்கும்
சிறு மோதல் என்றோ ...? சின்ன
பிரச்சனை அதை ஊதி பெருசாக்க
வேண்டாம் என்பது போல பேசுவதும் , எழுதுவதும் , தலீத்
மக்களில் பெரும்பான்மையாக
இருக்கும் பறையர் ,பள்ளர் இன
மக்களுக்கு ஆதரவான சனாதான
கொள்கையை தூக்கி பிடிப்பதாகும்.

சந்தையூர் பிரச்சனை தொடக்கம்
அல்ல ..! தொடர்ச்சியின் ஒரு பகுதி. தொடர்ந்து பறையர்  சாதி ஆதிக்கத்தில் அருந்ததிய மக்களை
அடக்கியே வைத்து பழக்கப்பட்டவர் கள் . அருந்திய மக்கள் அவர்கள் உரிமையை , கேட்கும் போது அது வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதோடு
இது " எங்களுக்குள் நடப்பது இதில்
வேறு எவரும் தலையிடக்கூடாது"
என்றகூறுவதுஐய்யோக்கியத்தனமான சமூக அநீதி.

சந்தையூர் அவமான சுவர் பிரச்சனையை வெளியில் உள்ளவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக " கிளறி" விடுகிறார்கள் என்று ஆதங்கப்படும் விசிக அமைப்பினர்கள்.ஒன்றை புரிந்து 
கொள்ள வேண்டும் .வெளியில்
இருந்து பிரச்சனையை கிளறாமல்
தீர்த்து வைத்துயிருக்கலாமே...?
45 நாட்களுக்கு மேலாகியும்
ஏன் தீர்க்கப்படவில்லை...?

இது பறையர்களின் சாதிஆதிக்கம்
சார்ந்த  பிரச்சனை இல்லையென்றால்...?
திருமா முயன்றால்...? அது தீர்க்க 
முடியாதா...? என்ன... முடியும்...!

சந்தையூரில் "நடந்தது...நடப்பது...
என்ன என்று பட்டிமன்றம் நடத்தும்
விசிக திருமாவி்ன் கட்டுப்பாட்டில்
இல்லை என்று பகிரங்கமாக அவரால் சொல்ல முடியுமா..? சொல்ல முடியாது.

ஆனால் அதை தீர்த்து வைப்பதில்
அவருக்கு உடன்பாடும் இல்லை.
என்பதே வெளிப்படை. சந்தையூர்
பிரச்சனையில் பறையர்கள் என்ற சாதியை திருப்தி படுத்த வேண்டும் என்றே திருமா நினைப்பதாகவே உணர முடிகிறது.

தலீத் ஒடுக்குமுறைக்கு எதிராக
போராடும் இடதுசாரி அமைப்புகள்
தமிழகத்தை பொருத்த வரையில்
தலீத் என்றால் தலீத் மக்களில்
பெரும்பான்மையாக இருக்கும்
பறையர் ,பள்ளர் இன மக்களுக்கும்
உயர் சாதி இந்து மக்களுக்குமான
ஒடுக்குமுறை மட்டுமே தீண்டாமை
பிரச்சனையாக பார்க்கி்றார்கள்.

"ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் இருக்கும் சாதிய படிநிலை ஒடுக்குமுறையை
பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

ஏதோ சந்தையூர்  பிரச்சனை
மட்டுமே புதியது போலவும், 
அதை மெல்ல பேசித்தான் தீர்க்க
வேண்டும் என்று சொல்வது சரியல்ல..!

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக
சந்தையூர் பிரச்சனை தொடர யார் காரணம்...? அதை எதிர்த்த போராட்டம் என்ன...? இந்த கேள்விக்கு இடது சாரி வெகு ஜன அமைப்பான இப்போதைய தீண்டாமை ஒழிப்பு முன்னணியிடம் விடை இல்லை.

ஆனால்...
கடந்த காலத்தில்
தலித்துக்களுக்கு ஆதரவாக போராடிய நாகை தோழர்.வெங்கடாசலம் காணா பிணமாக்கப்பட்டதும் , சக்கிலிய மக்களுக்கு ஆதரவாக இருந்ததால்
சாதி வெறியர்களால் கோவை இடுவாய் தோழர்.இரத்தினசாமி தூக்கில் போட்டு கொன்றதும் கம்யூனிஸ்ட்களின்
மறுக்கவோ, மறைக்கவோ முடியாத
தியாக வரலாறு என்பதையும்
நாம் அறிவோம்.

ஆகவே....
தமிழக அரசும் ,நீதி மன்றமும் இதற்கு சட்ட ரீதியான தீர்வை கொடுக்க வேண்டும். அது அந்த அவமான சுவரை உடைத்தெரியும்
வகையில் இருக்க வேண்டும் என்பதே  சமூக நீதி.

Thursday 22 February 2018

அரசியல் மூடத்தனம்...!



கடந்த காலத்தில்
சிபிஎம் - லிருந்து
தணிகை செல்வம்..
லியோனி...
அந்த வரிசையில்
இன்று...
கிருஷ்ணகுமார்.

எழுத்து பணி செய்ய
போவதால் அந்த கட்சியின் மாநிலக்குழுவிலிருந்து
தன்னை விடுவித்து கொண்டதாக
எழுத்தாளரும் , முற்போக்கு
எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின்
தலைவருமான ச.தமிழ்ச்செல்வனை சொல்கிறார் கள்.

இவர்கள் மட்டுமல்ல...
அந்த இயக்கத்துக்கு
இன்னும் பலர் வரலாம்
போகலாம்.

குறிப்பிட்டு சொல்லப்போனால்
கட்சிக்குள் வந்து போகும் இவர்கள் பற்றியது அல்ல...இந்த விவாதம்.

இவர்கள்
சார்ந்த சிபிஎம் பற்றியதே ...!
சிபிஎம் - மட்டுமல்ல
எந்த இடது சாரி கட்சியாக
இருந்தாலும் அவைகளும் விமர்சனத்துக்கு
அப்பாற்பட்டவை அல்ல.

அந்த விவாதத்தை பொது வெளியில் நடத்துபர்கள்
கட்சிகாரர்கள்என்றால் அது
தடை செய்யப்பட்டு இருக்கிறது.

மற்றவர்கள் விவாதிக்கலாம்.
விமர்சிக்கலாம்.
அதுவும் கம்யூனிச நெறிமுறைக்கு
உட்பட்டு இருந்தால்..? நல்லது.

2000 ஆண்டில் திருவனந்தபுரத்தில்
சிபிஎம் கட்சி எப்படிதன் கட்சி திட்டத்தைமக்கள் ஜனாயக புரட்சி
நடத்துவதற்காக காலத்திற்கேற்ப
மேம்படுத்திக்கொண்டதோ...?
அதே போல் அந்தகட்சி
சுய பரிசோதனைக்கு
தன்னை உட்படுத்தி
கொள்ள வேண்டும்.
என்பதே இந்த விவாதத்தின்
அடி நாதம்.

ஏனென்றால்...
கட்சி தப்பு செய்தால்
வளர்ச்சி அடையமுடியாது.
தேக்க நிலையிலே இருக்கும்
புதிய வரவுகள் வராது
அவ்வளவு தான்

ஆனால் .....
அதன் கேடர்கள் வெளியேறினால்
பாதிப்பு அவர்களுக்கு
மட்டுமே என்ற பார்வையில்
சொல்வதிலும், எழுதுவதுவதிலும்
 மாற்றம் வேண்டும்.

தனிமனித பாத்திரம் கட்சியின்
அங்கம் என்பதை அவர்கள் ஏற்க
மறுக்கிறார்களோ...? என்னவோ..?
கேடர் என்பது ஒருவன்
அல்ல...அந்த இயக்கத்தின்
ஆணி வேர்.

அதோடு
அவன் குடும்பம், வாழ்க்கை எதிர்காலம்..இதையெல்லாம்
கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாமா...?

அதனால் வெளியேறி
போகிறவர்களை கெஞ்சி கூத்தாடி
நிற்க வைக்க வேண்டுமென்பது
அல்ல...அது சரியுமல்ல...!

உதாரணமாக ஒரு கட்சி ஊழியர்
மீது ஏவப்படும் மொட்டை கடுதாசியை கூட எல்லாம் பொய் என்று விட்டுவிடுவதோ..?
எல்லாம் சரி என்றே
ஏற்றுக்கொள்ளும் நடைமுறையோ
 சிபிஎம் - க்கு இல்லை.

முழு நேர ஊழியர்கள்
பற்றியும் , பகுதி நேர
முன்னணி ஊழியர்கள்
பற்றியும்  மணிகணக்கில்
வகுப்பு நடத்தி விட்டு
ஊழியர் அல்லது...
உறுப்பினர் வெளியே
போனால் ... அதற்கு
காரணம் அவர்களின்
சுயநலம்தான் என்பது
அபத்தம்.

ஏனென்றால்...
கட்சிக்குள் வரும்
போது இல்லாத
சுயநலம் போகும்
வந்து விட்டது என்று
சொல்லி அவரின்
பக்கத்தை மூடிவிடுவது...
அந்த நபருக்கு நட்டம் அல்ல
அவர் இத்தனை காலம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட
கொள்கையில் ஏதோ
கோளாறு என்றுதான்
அர்த்தம்.

சிபிஎம் எடுக்கும்
வாந்தியை மற்றவர்கள்
பிடித்துக்கொள்கிறார்கள்
என்று அந்த கட்சியில்
உள்ளவர்கள் அடிக்கடி
சொல்ல கேட்டு இருக்கேன்.

ஏன் அடிக்கடி வாந்தி
வருகி்றது...?
வாந்தி எடுப்பவரை
மருத்துவ மனயில்
சேர்த்து வைத்தியம்
பார்க்க வேண்டுமேயொழிய,
வாந்தியை பற்றி விவாதிப்பதும்
வாந்திக்கு காரணம் வாந்தியே
என்று காரணம் காட்டும்
அரசியல்  மூடத்தனத்தை
எப்படி புரிந்து ,எந்த வகையில் புரிந்து கொள்வது...?

Monday 12 February 2018

நடைபிணங்கள்...!

இளமைக்கால கனவுகளோடுதான்
ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணமும் தொடங்குகிறது. ,
ஆனால் காலம் அவர்கள் சென்றடையம் இலக்கை மாற்றிவிடுகி்றது .

தொடங்கிய இடத்திலே முடிந்து போனவர்களும் , வழியிலே தொலைந்து போனவர்களும்
உண்டு.ஒரு சிலரேஅந்தமைல் கல்லை தொட்டு இருக்கிறார்கள்.
அது கூட முழுமையாக அல்ல...!
என்பதே வாழ்வின் யதார்த்தம்.

பணமா , எதிர்கால கனவா என்ற
பந்தயத்தில் சுக - துக்கங்களோடு
இளமையையும் ,வயதையும் தோலுரித்தே பணபசிக்கே இரையாகி போகிறார்கள்.

அதில் நாடுகடந்து அடிமைப்பட்டு
போனவர்களின் மரண ஓலங்களில்
உள்ளூர் மண்ணில் வீட்டு வேலைக்கு சென்று புதைகுழியில் புதைந்து போனவர்களை யார் அ்றிவார்..?

குற்றுயிராக கிடக்கும் பிணத்திற்கு உள்நாடென்ன..?வெளிநாடென்ன..?
மயானங்களின் வேறுபாட்டை விவாதிக்க பட்டிமன்றம் தேவயில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே..!
மாற்று கோஷமில்லை...
வாழ்க்கைக்கான வாய்ப்புகளை
அடைத்தொழித்துவிட்டு
வாழுங்கள் என்று சொல்லும்
மூடர்களின் கூற்றை ஏற்பதற்கில்லை.

வயிறு பிழைக்க காகிதத்தை
உண்டு வாழும் கழுதைகளோடு
மனிதர்களை தயவு கூர்ந்து ஒப்பிடாதீர். ஏனென்றால்
கழுதைகளை விட நடைபிணங்கள்
மேலானவை.