Saturday 8 August 2015

மன்னிப்பு ..!

மன்னிப்பே ..!
உம்மை மன்னிப்போம் .. ! !
--------------------------------
மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பில் கருத்து
சொல்வதில் தப்பில்லை . ஆனால் அதே பாதிப்பு
தனக்கு வரும்போது உங்களால் கருத்து சொல்ல
முடியுமா..?

இந்த கேள்வியில் இருந்துதான் எல்லா நியாயங்களும் மறைக்கப்பட்டு சதைக்கு சதை,
ரத்தத்துக்கு ரத்தம், பழிக்கு பழி. என்ற
காட்டுமிராண்டித்தனம் நெஞ்சில் அறயப்படுகிறது .

மன்னிப்பு என்பது அகராதில் ஏற்றப்பட்டுள்ள
வெறும் எழுத்தல்ல ..! மன்னிப்பதும் ,மன்னிப்பை
பெறுவதும் எந்த மிருகங்களும் ,பறவைகளும் செய்வதில்லை . மனிதர்களால் மட்டுமே செய்ய கூடிய மகத்தான தியாகம் .

அந்த தியாகத்தை நீங்களோ..?நானோ..?
அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது.
அதற்கு பக்குவமும்,பயிற்சியும் தேவை.
அதை மடங்களும் , மதங்களும் செய்ய
முடியாமல் தோற்று போய்விட்டன .



No comments:

Post a Comment