Friday 7 October 2022

சுய சாதிய திரட்டல்...

சமீப காலங்களாக இந்திய இடதுசாரி கட்சிகள் தலீத் அமைப்புக்களை உரிமைக்கான இயக்கங்களாக பார்த்து அவர்களோடு கூட்டு இயக்கம் நடத்திவருவதும்.. இடதுசாரி இயக்கங்கள் தலீத் அமைப்புகளோடு இன்னும் அணுக்கமாக அண்ணல். அம்பேத்கர் படங்களையும், அவரது கருத்துகளையும், அந்த இயக்கங்களின் கோஷங்களையும் (ஜெய் பீம்)எடுத்தாண்டு வருகின்றனர்.. இடதுசாரி இயக்கங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி களப்பணி ஆற்றி வருகின்றனர். இவையெல்லாம் அந்த மக்களை பாதுகாப்பதற்கும், அதோடு கம்யூனிஸ்டுகளின் தளத்தை விரிபடுத்தவே என்பதை மறந்து பல தோழர்கள் சாதிய உணர்வை மேம்படுத்தி சுயசாதிய குருங்குழு சிந்தனையில் திளைத்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து சாதிய கொடுமைகளில் உழன்று அதை தன் வாழ்நாளில் ஒழித்து கட்டவேண்டும் என்ற தனியாத தாகத்தில் கம்யூனிஸ்டுகளாக தன்னை இணைத்துக்கொண்ட தோழர்கள் தத்துவார்த்த தடம் புரள்கின்றனர். தொடர்ந்து இவைகள் நீடித்தால் கட்சி விரிவாக்கம் என்பதை காட்டிலும் அடிப்படை தத்துவார்த்த சித்தாந்தத்தில் அரிமானம் ஏற்படும். <