Tuesday 12 March 2019

தலைகுனியட்டும் பொள்ளாச்சி...!


பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றி கேள்விப்பட்டதும் நெஞ்சம் பதைபதைக்கிறது.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.
கடுமையான விமர்சனத்தையும்
கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில செய்தி ஊடகங்களில்
மட்டுமே செய்தியாக வந்துள்ளது அச்சு ஊடகங்களில் பெரும்பாலும் சின்னஞ்சிறு செய்தியாகவே போடப்பட்டு
மறைக்கப்பட்டுவிட்டது.

சமூகவலைதளங்களில் இந்தக் கொடுமைக்கு ஆதரவாக
அரசியல் , சாதிய , அதிகார பலத்தால் பெண்களுக்கு எதிரான கருத்துக்களும் எதிர்த்தாக்குதலும் தொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

 பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் அயோக்கியத்தனம் ஆணாதிக்கத்தால் திட்டமிட்டு பரப்பிவிடப்படுகிறது .

ஒரு குற்றம் நடக்கிறது என்றால் அதில் சம்பந்தப்பட்ட இருவருக்குமே பொறுப்பு என்கின்ற வகையில் நியாயம் பேசுவது போல பேசுவதும் ,  அவனுங்க கூப்பிட்டால் இவளுக ஏன் போக வேண்டும்...? என்று சொல்வதும் மிகவும்
படுமோசமான கீழ்த்தரமானது.

பெண்கள் மீது திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தப்பித்த விடுவதற்கும் அவர்கள் செய்த அயோக்கியத்தனத்திற்கு வக்காலத்து வாங்குவதும் படு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் .

பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழும் போதெல்லாம் இப்படிப்பட்ட கேவலமான எதிர்க் கருத்துகள் வந்து கொண்டே தான்
இருக்கின்றன.

பெண்ணை மேலும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிரட்டுவதற்கும் பெண்கள் என்றால் சுதந்திரமாக வெளியே போகக் கூடாது  அப்படி மீறி எதற்காகவும் போனால்   ஆணாதிக்கத்தால் நடத்தப்படும் வன்முறைகள் தவிர்க்க முடியாது என்று சொல்வதும் மீறினால் இப்படிப்பட்ட கடும் விளைவுகள் தான் வரும் என்று சொல்லாமல் சொல்வதும் மிரட்டுவதும் ஆகும்.

திட்டம் போட்டு ஒருவரைக் கொல்வது என்றால் நிச்சயமாக கொன்றுவிடலாம் அப்படித்தான் இந்த காட்டுமிராண்டிக் கூட்டம் பெண்களை குறி வைத்து அவர்களை ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றி தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது .அவர்களைக் கண்டிக்க வேண்டும் தண்டிக்க வேண்டுமேயொழிய இதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியாக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண்கள் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை . அவர்கள் உடல் மீது நடைபெற்ற தாக்குதல் பெண் சமூகத்தின் மீது நடத்திய தாக்குதலாகவே அவர்கள் கருதவேண்டும் . உடல் மட்டுமே பெண் சமூகத்தை
தீர்மானிப்பதல்ல... ! இந்த கொடும் தாக்குதல் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது அதையும் மீறி பெண் சமூகம் போராடி தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறது.

அடுப்பு ஊதிய பெண் படிக்க வந்திருக்கிறாள். படிக்க வந்த பெண் வீதியில் நிமிர்ந்து நடந்திருக்கிறாள். வீதியில் நடந்த பெண் வேலை செய்து கொண்டிருக்கிறாள். வேலை செய்கின்ற பெண் இன்று தன்னை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறாள்.

ஆணாதிக்க சமூகம்
பெண்ணுடல் மீது புனிதத்தையும் , கற்பு நிலை போற்றுதலும் செய்து வருவது அவர்களை ஒரு எல்லை கோட்டை தாண்டாமல் தடுத்து நிறுத்துவதற்கும் ,மீறும் பட்சத்தில்  பெண்ணுடல்
மீது கடுமையான தண்டனை நிறைவேற்றி மிரட்டிவருகிறது.

இவர்களெல்லாம் எங்கோ யாருக்கோ யார் வீட்டுப் பெண்ணுக்கோ நடந்ததாக ஆண்கள் நினைத்து
விடக்கூடாது. நாளை நமக்கும் நம்முடைய குழந்தைக்கும் இவைகள் எல்லாமே நடந்தேறும் ஆகவே பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக , பெண்விடுதலைக்கு ஆதரவாக ஆண்களும் கைகோர்க்க வேண்டும்.

தண்டனைச் சட்டங்களை மட்டுமே பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்திட முடியாது. அதுவும் ஒரு தடுப்புச் சுவராக இருக்கலாம்.

பாலியல் வன்கொடுமையை தாங்க முடியாமல் இனியும் கணவனிடம் சேர்ந்து வாழ முடியாது என்ற சூழலில் வரும் போது கணவனையே அழித்தொழிக்க கூடிய பெண்கள் விதிவிலக்காக அங்கொன்று இங்கொன்றுமாக தென்படுகிறார்கள். அவர்கள் நினைத்தால் ஆண் சமூகத்தை கருவிலேயே மண்ணிற்கு வராமலே அழித்து ஒழித்து
விடுவார்கள் என்பதை ஆணாதிக்க சமூகம்
 நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆகவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும் அதுவரை மக்கள் ஜனநாயகப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

இனி வரும் காலங்களில் பெண் குழந்தைகளை போராளியாகவும் ஆண் குழந்தைகளை சமத்துவ பார்வையோடும் வளர்த்தெடுக்க  சமூகம் உறுதி எடுத்துக்கொள்ள
வேண்டும்.





Sunday 3 March 2019

ஆர் எஸ் எஸ் அஜண்டா ...!

மோடியின் போர் நாடகம்
தற்காலிக தோல்வியே...!

பாகிஸ்தான் போர் நாடகம்
அப்பட்டமாக அரசியலாக்க
முடியாமல் போனதால் மோடியால் தாங்கிக்கொள்ள முடியாமல் தகித்துக்கொண்டு
இருக்கிறார்.

அதன் வெளிப்பாடு தான்
குமரியில் கொந்தளித்து
எதிர் கட்சிகள் இந்திய இராணுவத்தை சந்தேகிக்கிறார்கள் என்று
ஆவர்த்தனம் செய்தார்.

இந்திய ராணுவத்தை
ராணுவ வீரர்களின்
தியாகத்தை தேர்தலுக்கு
பயன்படுத்த திட்டம் போட்ட
மோடியைத்தான்
சந்தேகிக்கிறார்கள்.

இதில் மத அடிப்படையில்
ஆளும் பாகிஸ்தான்
பிரதமர்.இம்ரான் கான்
மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொண்டார்.

இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு
மத வெறியை கிளப்பி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் மோடியின் முகமூடி தான்
 இன்று   கிழிந்து போனது.

அதோடு...
பாகிஸ்தானில்தீவிரவாதிகள் இருக்கலாம்  மறுப்பதற்கில்லை.

அந்த நாடே தீவிரவாதிகளின் நாடா...? இல்லை..மதவாதிகள் நாடா...? இரண்டுமில்லை...!

பாகிஸ்தானில் எந்த மாகாணத்தில் முஸ்லிம் இமாம்
ஆள்கிறார்...?
இந்தியாவில் உ.பியில்
மத சன்நியாசி ஆளகிறார்.

பாகிஸ்தான் 100% நல்ல நாடு என்று சர்ட்டிபிகேட்
கொடுக்கவில்லை.
இந்தியா 100% நல்ல நாடு என்றோ...?
ஆளும் மோடியின்
ஆர் எஸ் எஸ் கும்பல்
நல்லவர்கள் என்றோ சர்ட்டிபிகேட் கொடுக்க
முடியுமா...?

பாகிஸ்தான் தீவிரவாதம்
என்று பேசுவதும் ,
பிரச்சாரம் செயவதும் ,
இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை
பயங்கரவாதிகளாக
சித்தரிக்க...

இஸ்லாமிய மக்களை
வந்தேறிகள் என்று
அவதூறு பொழிய...

இரண்டாம் குடிமக்களாக மாற்ற நடத்தும் ஆர் எஸ் எஸ்ஸின்
அய்யோக்கியத்தனம்.

போர் வெறியை தூண்டி
வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் எப்படியாவது
வெற்றி பெற நடந்த அவர்களின் முயற்சி தற்காலிகமாக
தோல்வி அடைந்துள்ளது.

அடுத்த அஜண்டா ராமருக்கு கோவில் கட்டப்போகிறோம்
என்று சொல்லி கலவரத்தை
ஏற்படுத்தலாம்.

அதையும் மதச்சார்பற்ற
இந்தியா எதிர்கொள்ளும்.
ஏனென்றால்...?
தேசம் என்பது மண்ணல்ல
தேசம் என்பது மக்களே.....!