Monday 23 December 2013

உழுபவன் கணக்கு பார்க்கிறான்.....!



உலகில் ...
இன்று நடக்கும் அத்தனை வேறுபாடுகளுக்கும் ,
ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஆளும் அரசின் கொள்கைதான்
காரணம் என்று சொன்னால்..... முக நூலில் உள்ள நண்பர்கள்
பாதிபேருக்கு மேல் என்னை மேலும் கீழும் பார்த்து
இவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்றுதான் சொல்வார்கள்,
சொல்லிவிட்டு போகட்டும் !

        வீடியோ ...ஆடியோ உலகிலிருந்து வெளியே
வரும்போதுதான் அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
அப்போதுதான் அவர்களால் படிக்க முடியும் .
படிக்க முடிந்தவர்களால்தான் முழுமையாய் .....
............. முழுமையாய் தெரிந்துகொள்ள முடியும் !
அதுவரை அவர்களுக்கு மட்டுமல்ல ....எல்லோருக்கும்
குழப்பம் நீடித்துக்கொண்டுதான் இருக்கும் .

விவசாயிகள் , உரம் -பூச்சுகொல்லி
மருந்துகளுக்கான விலை உயர்ந்துவிட்டதே .?..
அதை அரசு தடுக்கவில்லையே ?
என்று கவலைப்படவில்லை ....

மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டதால்
பாசனத்துக்காக கைகாசு கரைந்துவிட்டதே ?
என்று கவலைப்படவில்லை !

புயல் - மழை - வெள்ளம் இவை கடந்து
தான் விளைவித்த பொருளை அரசே !
கொள்முதல் செய் ! என்று கேட்க தயாராக
இல்லை ....

தான் விளைவித்த பொருளுக்கு
கட்டுபடியான விலை வேண்டும்
என்று ஒன்று சேர்ந்து போராடவில்லை ....

கூலிக்காரன் அதிகமாய் கூலி
கேட்பதால்தான்......?
தனக்கு நட்டம் ஏற்படுகிறது ...
என்று வாதிடுகிறான் !

இதில் உண்மை இருக்கா ?
கூலி கணக்கை போடவேண்டாமா ?

இன்றைய விவசாயம் ...!
பெரும்பாலும் 2 போகம்தான் .
ஆண்டுக்கு 3 போகம் என்று
வைத்துக்கொண்டாலும் ....
விவசாய கூலிக்கு எத்தனை நாட்கள்
விவசாயத்தில் வேலை கிடைக்கும் ?

ஒரு போகத்துக்கு அதிகபட்சம் 1 மாதம்
வேலை கிடைக்குமா ?
3 போகத்துக்கு 3 மாதங்கள் வேலை !
ஆகா மொத்தம் ஆண்டிற்கு 90 நாட்கள் வேலை 

ஒரு நாளைக்கு உங்கள் கணக்குப்படி
கூலி 400 ரூபாய் என்றால் ...?
90 நாளைக்கு 36000 ஆயிரம் ரூபாய்கள் ...!
ஆண்டுக்கு 365 நாட்களை
வகுத்தால் ஒரு நாளைக்கு 99 ரூபாய்
இதைக்கொண்டு ஒரு நாள் ஓட்ட முடியுமா ?
100 ரூபாய்க்கும் குறைவாய் கிடைக்கும்
விவசாயத்தை நம்பி விவசாயக்கூலி வாழ
முடியுமா ?

அதனால்தான் விவசாயக்கூலி
நகரத்தை நோக்கி ஓடுகிறான் .
ஓடி...கொத்தனார் ,சித்தாள் வேலை செய்கிறான் .
அதில் ஒரு நாளைக்கு 500--600 ரூபாய்க்கு மேல்
கிடைகிறது !
வெய்யல் இல்லை .... மழை இல்லை ...
புழுதி இல்லை ... வைக்கோல் சுனை இல்லை !

இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல்
விவசாயி .... விவசாய கூலியை
முறைக்கிறான் .....

விவசாயக்கூலி அறுவடை எந்திரத்தை
தடுத்துவிட்டு ....
விவசாயியை முறைக்கிறான் !

இவர்கள் இருவரும்
முறைக்கவேண்டிய இடம்
எது ?
ஆளும் அரசாங்கம் !
அரசின் கொள்கை ! !
விவசாயம் சார்ந்து அரசின் கொள்கையில்
மாற்றம் வேண்டும் ....
விவசாயத்தை தொழிலாக
அங்கீகரிக்க வேண்டும் ! 

விவசாயக்கூலிகளுக்கு
விலைவாசிக்கேற்ப
கூலிச்சட்டத்தில் மாற்றம் வேண்டும் !

இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் .....
விவசாயக்கூலிகள் ......
அம்மா பசிக்குதுன்னு
விவசாயிங்க வீட்டு வாசலை
கட்டி அழவேண்டுமாம் !

அதுவரை விவசாயம் செய்ய மாட்டார்களாம்...?
விவசாயிகள் !
என்னே தொலை நோக்கு !
வாழ்க படிப்பாளிகள் !!
வளர்க விவசாயம் ! ! !

Sunday 22 December 2013

மரியாதைக்குரியவர்களுக்கு ....!



சில கருத்துக்கு பதில் சொல்லாமல் விட்டுவிடவே
நினைகின்றேன் .அப்படி விட்டுவிடுவதும் உண்டு ..
அப்படியே விட்டுவிட்டாலும் ...பதிவைபோட்டவர்கள்
விடுவாதாய் இல்லைஎன்பதுபோல...
தொடர்ந்து பதிவைப்போட்டுக்கொண்டே இருக்கும்போது வேறு வழியின்றி ,
அதற்கு மறுமொழி சொல்லவேண்டி இருக்கிறது !

அதுவும் ....
என் மரியாதைக்குரியவர்களே
இப்படி செய்யும் போது ....
என்ன செய்வதென்றே புரிவதில்லை ! 
என்னுடைய பதிவால் அவர்களின்
மனம் புண்பட்டு ... நட்பு வட்டத்திலிருந்து வெளியே
போய்விடுவார்களோ ?
இல்லை தம்மை இழிவு படுத்துவதாக நினைப்பார்களோ ? என்ற
மனப்போராட்டத்துக்கு பிறகே இதை பதிகிறேன் .

எது ஆனாலும்
சரியானதை சொல்லியே தீரவேண்டும் !
என்ற தீர்மானகரமான முடிவின் படியே இதை
பதிவு செய்கிறேன் .

குறிப்பாய் பெண், பெண்ணியம் பற்றி ....
பெண்ணுரிமை பற்றி ....
ஒரு சில ஆண்கள் எழுதும்
கண்ணியக்குறைவான செய்திகளைபதிவிடும்போது ....

மதம் சார்ந்து முட்டாள்தனமான வக்காலத்தும் ,
அதீதமான மதகட்டுப்பாடுகளை அரசியலாக்கவேண்டும்
என்ற மத வெறி குறித்த செய்திகளை பகிரும்போதும் ....

மூன்றாம் பாலினம் தொடர்பாக அடிப்படை
விஞ்ஞான அறிவு கூடஇல்லாமல் ...வாய்கிழிய
வசைபாடி பதிவுகள் பகிரும்போது ....

குடிப்பதும் ,கும்மாளமிடுவது பொதுமைபடுத்தி ,
பிறரின் மதிப்பீடுகளை கேட்பதுப்போல
மறைக்கப்பட்டிருக்கும் அசிங்கத்தை  கிளறி,
தமது தப்புக்களுக்கான அங்கீகாரத்தை பெற
முயலும் ...பதிவுகளை பதிவிடும்போது .....

முதலாளிகளின் ...விவசாயிகளின் பாதிப்புக்கு
தொழிலாளியின் கூலிதான் காரணம் என்று
கோணியில் கல்லைக்கட்டி அடிக்கும் ....
கோமாளித்தனமான பதிவுகளை பதிவிடும்போது ....
சகித்துக்கொள்ள முடிவதில்லை !

எல்லாவற்றிற்கும் வக்காலத்தல்ல,
நான் சொல்வதே வேத வாக்குமல்ல ...
எல்லாவற்றிக்கும் விடை இருக்கிறது
விஞ்ஞானத்தில் ......
விஞ்ஞான கண்ணோட்டத்தில்
இந்த சமூகத்தை பார்க்கும்போது
எல்லாம் புலப்படும் ...எளிதில் புரியும் !

அதுவரை ...
எல்லாமே புரியாத புதிர்தான் !

Thursday 14 November 2013

தினங்களில் தேடுகிறோம் !

நவ .14 குழந்தைகள் தினம் !
-----------------------------------------

வியட்நாம் தெருக்களில்...
ஹிரோஷிமா வீதியில்...
நொய்டா சாக்கடையில் ....
முல்லிவாய்க்காலில்....

குழந்தைகளை ...
தொலைத்துவிட்டு ,
தினங்களில் தேடுகிறோம் !



Wednesday 16 October 2013

ஈழம் என்பது........எது ?







                               தமிழகத்தில் அரசியல் பேசுகிறவர்களுக்கு வடக்கு மாகாணம் ,மலையகம் என்றெல்லாம் எதுவுமே தெரியாது ! அது பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவர்களிடம் இல்லை ! ஏனென்றால் தமிழகத்தில் பேசுவது... தமிழ் நாட்டில் ஓட்டு வாங்குவதற்கு...! இது தமிழ்நாட்டு அரசியல் ! "ஈழம் " என்று சொன்னால் தமிழ் "பற்றாளன் " என்று ஊரில் மரியாதை இருக்கிறது ! அதை நம்பி தமிழக மக்களும் ஒட்டுபோடுகிறார்கள் . எனவே ஈழம் என்று சொல்கிறார்கள் ...தனி ஈழம் என்று உரக்க சொல்கிறார்கள் ! அவர்களை காட்டி பணம் கேட்டால் பணம் தருகிறார்கள் ! ஓட்டு கேட்டால் ஓட்டு போடுகிறார்கள் .....அதைத்தாண்டி வேறு என்ன வேண்டும்?
                      இன்னும் எங்கள் நாட்டில் எம் ஜி ஆர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லிகொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம் ! ஆகவே எம் ஜி ஆரே உயிரோடு இருக்கும்போது " பிரபாகரன் ஏன் உயிரோடு இருக்கக்கூடாது ? இப்படிஎல்லாம் பேசுவதால் பைத்தியம் என்று சொல்லக்கூடாது ! அது மற்றவர்களை பைத்தியமாக்கி ஒட்டுவாங்குவற்காக பயன்படுத்துகிறார்கள் ! அதை கட்சி வித்தியாசமில்லாமல் ஆதரிகிறார்கள் ஊக்குவிக்கிறார்கள் ! 
 ஈழத்தில் செத்துப்போனவன் உண்மையிலே தலைவனென்றால் ..... அவன் நினைவுதினத்தை நெஞ்சில் ஏந்தவேண்டாமா ? அப்படியொரு நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறதா ? அங்குமில்லை..... எங்குமில்லை !
ஈழப்பிரச்சனையில் கம்யூனிசம் பேசுபவரில்......மக்களை குழப்பாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விதிவிலக்காக இருக்கிறது என்பது வேறுவிஷயம் !
                     தமிழகத்தில் சாவையும் ( இந்திராகாந்தி ) ,நோவையும் ( எம் ஜி ஆர் ) காட்டியே கடந்த காலத்தில் ஓட்டுவாங்கி இருகிறார்கள் ! ஈழத்து படுகொலை பெரிய சாவு ! இந்தியாவில் ஒரு அரசியல்வாதி செத்துபோனாலே ஆட்சி மாறும் ! அங்கே ஆயிரக்கனக்கில் செத்துபோய் இருக்கிறார்களே ? எவ்வளவு நாட்கள் அரசியல் பேசலாம் ? இதைத்தான் தமிழக அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல்பேசிக்கொண்டே
நடந்துகொண்டிருக்கிறார்கள் !  
         ஈழம் வேறு தமிழகம் வேறு என்று சொல்பவர்களை தொப்புல்கொடியால் கட்டி தூர போட்டுவிட்டார்கள் ! இங்கே அடித்தொண்டையில் பேசினால் ஆழமான அரசியல்வாதியாகலாம் ! 
புலிக்கொடி என்ன ? ஓட்டு கிடைக்குமென்றால் நரிக்கொடி கூட எங்கள் நாட்டில் நாளைக்கே பறக்கும் ! நல்லவேளை ...? சமூகவளைதளம் இல்லையென்றால் என்ன நடக்குதென்ரே யாருக்கும் தெரியாது ! இன்று மலையகம் பற்றி மதிப்பிடமுடியாமல் போயிருக்கலாம் .
   இப்போதைக்கு மலையக மக்களை பாதுகாக்கு தனி ஈழம் ஏற்புடையதல்ல...!என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது ! வடக்கு மாகாணசபை தேர்தலின் 
போது இன்றைய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விக்னேஸ்வரனின்   அறிக்கை ஒரு புரிதலும் ,தமிழக அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாகவும் இருந்தது மறக்கவியலாது . வடக்கு மாகாணசபை தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள தமிழ்கூட்டமைப்பு ஒரு சிறு முன்னேற்றம் என்று சொல்லலாமெயொழிய வேறு ஒன்றையும் பெரிதாய் செய்துவிடமுடியாது என்பதை உணருகிறோம்.
                     .அதே வேளையில் கடந்த காலங்களில் மத்திய மாகாணசபையில் இருவர் என்ற பங்கேற்பை பதினான்கு என்று உயர்ந்துள்ள இரட்டை இலக்கம் எளிதானதல்ல... இதன் மூலம் சிங்கள மக்களில் சிக்குண்டு கிடந்தாலும் மலையக மக்களின் உருக்கு போன்ற ஒற்றுமை உலகம் அறிந்துள்ளது ! இது சிங்கள-மலைய மக்களை பிளவுபடுத்தாமல் ஒற்றுமையை வளர்த்தெடுப்பது மலையக மக்களின் எதிர்காலம் சார்ந்தது. 
                               இந்த பார்வையில்தான் யாழ்ப்பாண தமிழனையும் -மலையக தமிழனையும் அரசியலாய் ஒன்று படுத்திட முயற்சிகள் வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாய கடமை !

Tuesday 15 October 2013

காவலர்கள் உங்கள் நண்பனா ?




                         காவல்துறையும் - நீதி துறையும் நியாயமாய் மக்களுக்கு பாதுகாப்பாய் இருக்கவேண்டிவர்கள் ! ஆனால் இன்று அப்படி இல்லை , சென்னையில் ஒரு போலீஸ்காரர் பாதிக்கப்பட்டதை எடுத்து சொல்கிறீர்கள் ...வேதனைபடுகிறீர்கள் அது தவறென்று சொல்லவில்லை !
கடந்த காலத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு எப்படி இருந்தது ? என்பதை யோசிக்கவேண்டும் . விழுப்புரம் அத்தி ஊர் விஜயா காவல்துறை பலாத்தகாரம் . சிதம்பரம் பத்மினி 11 காவலர்களால் பலாத்தகாரம் ! முத்தாண்டிகுப்பம் வசந்தா காவல் நிலைய பலாத்தகார படுகொலை ! கோடியக்கரை விசாரணை கைதி சண்முகம் காவல் நிலையத்தில் தூக்கிட்டு கொலை ! அந்தியூர் காட்டுவாசிகள் வனத்துரையாலும் ,காவல்துறையாலும் பலாத்தகார கொலைகள் ! வாச்சாத்தி மலைவாழ் மக்கள் 200 க்குமேற்பட்டோர் பாலியல் பாலாத்த்காரம் படுகொலைகள் ! சமீபத்தில் தீவிரவாதி ,பயங்கரவாதி என்று சொல்லி சென்னையில் ஒரிசாவிலிருந்து வந்த தொழிலாளர்கள் மீது எண்கவுன்டர் ! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் ! இது பொய் இல்லை ! இவைகளுக்கு ஆதாரம் உள்ளது .
                பலவழக்குகள் நிருபிக்கப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த நிலை காவல்துறைக்கு என்றால் நீதித்துறை அதைவிடவும் கேவலம் ...நேரடியாய் சமூகவிரோதிகளுடன் தொடர்பு என்பது எல்லோருக்கு தெரியும் ! உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயன் படுகொலைக்கு காரணம் சமூகவிரோதிகளோடு அவர் தொடர்பு இருந்தது என்று ஒரு தகவல் ... ஆகவே இந்த இருவரில் எவரும் நியாயவான்கள் அல்ல ! என்பதை மரியாதைக்குரியஎனது நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும் !
அதே நேரத்தில் காவல்துறையும் --- நீதித்துறையும் யார் பெரியவர்கள் ? என்ற சண்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது ! அதன் உச்சகட்ட சண்டைதான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த சண்டையும் -- காவல்துறையின் அத்துமீறலும் ,அந்த சண்டையும் , காவல்துறை தாக்குதலையும் தமிழக மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள் ! இப்போ சொல்லுங்கள் இதில் யார் நல்லவர்கள் ? இவைகள் இருவரும் " மோசம் " "படு மோசம் " என்ற தகுதியில்தான் இருகிறார்கள் ! அது சிலநேரங்களில் " மோசம் " படுமோசமாகவும் , "படுமோசம் "மோசமாகவும் மாறும் ! அவ்வளவே !
                           இந்த காலத்தில் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ! அதனால் உங்களுக்கு தெரிகிறது ....கோடான கோடி ஏழை எளிய மக்கள் அண்டை வீட்டு சண்டைக்கு கூட வழக்குபோடப்பட்டு ஆண்டாண்டு காலமாக நீதிமன்ற படிகட்டுகாலை ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் ! காவல்துறை " உங்கள் நண்பன் "என்று எல்லாகாவல் நிலையங்களிலும் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மைதான் ! துணைக்கு ஆள் இல்லாமல் ஒரு பெண் தனியாக பகலில் கூட காவல் நிலையத்துக்குள் போய்வர முடியுமா ? போய்வந்தவர்களை கொஞ்சம் கேட்டு பாருங்கள் ! காவல்துறையினர்தான் ஏழை எளிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்து கோட்டுக்கு அனுப்புகின்றனர் ..ரத்தம் குடிக்கும் மூட்டை பூச்சுகளைப்போல் வழக்கறிஞர்கள் ஏழைகளின் ரத்தத்தை உருஞ்சிறார்கள். இவர்களில் எவரும் நல்லவர்கள் அல்ல ! இவர்களுக்கு வக்காலத்துவாங்குவதை விடவும் ஏழை எளிய மக்களைப்பற்றி யோசிக்கவேண்டும் ஆதரவற்ற பெண்கள் மீது அனுதாபப்படுங்கள் !
                             
ஒரு சில பெண் முக நூல் நண்பர்கள் ..சில அநீதிகளை கண்டு கொதித்துபோகிறீர்கள் ! முக நூலில் உள்ள பெண்கள் எத்தனை பேர் ? பாதிக்கப்படும் பெண்களுக்குஆதரவாய் ...சமூக நீதிக்கு ஆதரவாய் ..... பாலியல் வன்முறைக்கு எதிராய் .... ஆட்சியாளர்களுகு எதிராய்.... பதிவேற்றம் செய்கிறார்கள் ? குறைந்தபட்சம் தங்களின் கண்டனத்தையாவது தெரிவிகிறார்களா ? முழுவதும் இல்லை என்று சொல்ல முடியாது 100 க்கு 2 சதம் கூட இல்லையே ? 
                             பெரும் பகுதி பெண்கள் குரல் கொடுக்காதபோது ஒன்றிரண்டு பெண்கள் அநீதிகளை எதிர்த்து போராடினால் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று அஞ்சுகிறேன் . அதனால்தான் அப்படிப்பட்டவர்களை பாதுகாக்கவேண்டும் என நினைக்கிறேன் . தங்களின் கருத்துக்கு ஆதரவான சக்திகளை சேர்க்கவேண்டும் இல்லையேல் இந்த கொடுமைகளுக்கு எதிராய் போராடும் கட்சிகளோடு இணையவேண்டும் !

Monday 14 October 2013

முக நூலில் மண்டியிடும் கடவுள் ...!

                                               

                                           
ஜாதிய-மத பாகுபாடுகள் குழந்தை பருவத்திலிருந்தே உணவோடு சேர்த்தே ஊட்டப்படுகிறது .

அதனால் ...
தாயும்-தந்தையும் தரம் குறைந்தவர்களல்ல .... 
அந்த காலத்தில் ஜாதி - மதம் பற்றி அவர்களுக்கு இருந்த பார்வை அவ்வளவுதான் ! 

படிக்க தெரிந்த நாம் ! 
நவீன உலகில் இருக்கும் நாம் ! 
அந்த கால மனிதர்களைப்போல் 
பிரித்து பார்ப்பது ,தரக்குறைவாய் மதிப்பிடுவது சரிதானா ? என்பதுதான் என்னுடைய கேள்வி .

நான் மட்டும் சுத்த சுயமல்ல ...
இந்த குப்பைகள் என்னிடமும் இருக்கிறது அதை கொஞ்சம்கொஞ்சமாய்வெளிஏற்றுகிறேன்.
அதற்காக முயற்சி எடுக்கிறேன்.

இந்த கேள்விகள் என்னைவிட .... 
அதிகம் படித்த , விபரமானவர்கள் , 
சமூகத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் , , புத்தி ஜீவிகளுக்கு தெரியவில்லையே ? 
என்பதுதான் புரியாத புதிராய் இருக்கிறது !
எனக்கு மதங்களைக்காட்டிலும் ,மனிதர்களிடம் நம்பிக்கை இருக்கிறது .
                                               
எனக்கு எந்த மதத்தின் மீதும்
நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்,
என் நண்பர்களுக்கு ? என் நேசத்துக்குரியவர்களுக்கு ?
 என் நம்பிக்கைக்குரியவர்களுக்கு....
 அதன் மீது நம்பிக்கை இருக்கிறதே !
அதுதான் பிரச்சனையே !

அதை நாம் கூடாது என்று சொல்வதற்கு
எந்த உரிமையுமில்லை!
 ஒவ்வொருவரும் சக மனிதனுக்குள்ள
திறமைகளை , பண்புகளை
ஆராய்வதற்கு பதிலாக ...
மற்றவர்களின் கடவுளின் நம்பிக்கையயும் ,
மத சிறுமைகளையும் ஆராய்கின்றனர் .

அதனால்தான்

தெரிந்தோ தெரியாமலோ மதத்துக்கும் ,கடவுளுக்கும் வக்காலத்து வாங்கி
என் மதம் , என் கடவுள் என்று ..
ஆதரவு குரல்களும் ,
அடிகோடிட்ட பதிவுகளும்
நம்மை அதிர வந்து சேர்கின்றன .
மதத்தையும் ,கடவுளையும் ,தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவும் , வணங்கவும் உரிமை இருக்கிறது . அதில் தப்பேதுமில்லை ,

அவரவர்களின் தனிப்பட்ட வழிபாட்டு சுதந்திரத்தை மற்றவர்கள் மீது திணிப்பதும் தப்பு .
அதுபோல் மற்றவர்களின் மதத்தில் ,
வழிபாட்டு உரிமையில் மூக்கை நுழைப்பதும் தப்பு
என்பதை புரிந்து கொண்டால் ...?

பள்ளிவாசலில்....
 தேவாலயத்தில்......
கோவில்களில்...
இருக்கவேண்டிய கடவுள் ....
முக நூலின் மண்டி இடவேண்டிய
அவசியமில்லை .






Tuesday 8 October 2013

பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவமா ?



                                         


                                             இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள்என்ற பெரும்பகுதி மக்கள் ஓட்டு போடுவதற்கு வருவதில்லை ...என்ன ஏதுன்னு விசாரித்தால் யாருமே சரியானவர்கள் இல்லை அதனால் நாங்கள் ஓட்டுபோட விரும்பவில்லை என்று சொல்கிறார்கள் . அப்போதுதான் அரசு இந்த முடிவுக்கு வருகிறது ஓட்டு உரிமை ஜனநாயக உரிமை அந்த உரிமையை எப்படியாவது பயன்படுத்தட்டும் என்றுதான் இதை கொண்டுவந்தார்கள் . வந்த பிறகும் அந்த மேதாவிகள் அந்த 49 o வை 99 சதவீதம் பயன்படுத்துவதே இல்லை என்பதுதான் உண்மை ! இனி வரும் காலங்களில் அப்படி பயன்படுத்திவிட போகிறார்கள் என்ற அச்சத்தில்தான் என்னுடைய பதிவு ! அப்படி வாக்காளர்கள் பயன் படுத்தி வேட்பாளர்களைவிடவும் 49 ஓவை பயன்படுத்தி 49 ஓ க்கு அதிக ஓட்டுகள் போட்டு இருந்தாலும் வேட்பாளர்களில் யார் அதிகம் ஓட்டுகள் வாங்கி உள்ளனரோ அவரே வெற்றி பெற்றவராக தேர்தல் துறை அறிவிக்குமாம் . 
                                                                செல்லாத ஓட்டுக்கும் இந்த 49 ஓ க்கும் என்ன வித்தியாசம் ? அப்போ எதற்குத்தான் இந்த 49 ஓ என்று கேட்கிறீர்களா ? வாக்கு பதிவின் எண்ணிக்கையை கூட்டுவதற்குத்தானாம் ! இந்த கூத்தெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும் . நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த தேர்தல் முறை தவறானது ..... அதை மாற்றவேண்டும் ! அதை மாற்ற போராடவேண்டும் .... அதுவரை அதற்காக தேர்தலில் பங்கேற்கமாட்டேன் என்று சொல்வதும் தப்பு . இப்போ நடை முறையில் இருக்கிறது அதில் பங்கேற்று அதை நிர்மூலமாக்கவேண்டும் ! 
                                    இன்றைக்கு பாராளுமன்ற அமைப்பு ஆளும் வர்கத்துக்கும் ,பெருமுதாளிகளுக்கும் ஆதரவாகத்தான் இருக்கிறது இதில் மாற்று கருத்து இல்லை . அதை நாம் எப்படி பயன்படுத்தப்படவேண்டுமேன்றால் அதும் ஒரு போராட்டக்களமாக ,அது ஒரு பிரச்சார மேடையாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறக்ககூடாது ! 
                               
பாராளுமன்ற ஜனநாயகம் பன்றிகள் வாழும் தொழுவம் என்று தலைவர்கள் சொன்னதாக சிலர் சொல்கின்றனர் , அவர்கள் சொன்னது எப்போ எங்கே , எந்த சூழலில் என்பதை மட்டும் யாரும் சொல்வதே இல்லை ...பன்றிகள் தொழுவம்தான் இப்போ இருக்கிறது என்றால் அதை நிர்மூலமாக்காமல் இன்னொரு அமைப்புக்கு போக முடியாது ! வாதத்துக்கு வேண்டுமானால் பேசலாம் ! அது பயன்படாது !

Thursday 12 September 2013

.உறுப்புகளற்ற...அவள் !









வெட்டப்பட்ட ஆடுகளைப்போல்
இங்கு எல்லாமே வியாபாரம்தான் !

கிழிக்கப்பட்ட சதை விற்பனையாகிறது,
அவள் சம்மதமில்லாமலே .!

அத்துமீறல்கள்....
அரங்கேற்றப்படுகிறது !

உடல் மீது அவர்களும் ,
உள்ளத்தை ஊடகங்களும்...!

சிந்திய ரத்தமும் ,துணியும்
சிறுத்தைகள் ஆராய்கின்றன '

முறத்தால் அடித்தவள் ...இன்னும்
முடிந்துபோகவில்லை !

வருவாள் ....உறுப்புகளற்ற அவள்
ஆயிரமாயிரமாய் ........!

கத்திமேல் நடப்பவர்கள் ...!

                                         
                        விமர்சனம் என்பதை புத்தி ஜீவிகளாய் தெரிபவர்கள் கூட " குறை " சொல்வதாக தமிழில் வேறு அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள் ..... உங்கள் மீது ,உங்கள் கருத்தின் மீது விமர்சனம் வைப்பவர் யார் என்பதை கூடவா பார்க்கவேண்டாமா ? உங்கள் நண்பர்கள் உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள்.... அவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனம் உங்களை வீழ்த்த அல்ல.... வீழ்ந்துபோகாமல் காப்பதற்கே ! என்பதைகூடவா புரிந்து கொள்ள முடியவில்லை !.

                               எல்லோராலும் எல்லோரையும் புகழ முடியும் ....ஆனால் ஒருவரின் கருத்தின் மீது சுட்டிக்காட்டுவது, மாற்று கருத்து வைப்பது அவ்வளவு சுலபமல்ல....அவ்வளவு எளிமையானதுமல்ல ....... அப்படி சுட்டிக்காட்டும்போது எதிரே உள்ளவர் இணைபிரியா நண்பராகவோ ? அவர் தயவில்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ள அதிகாரியோ ? அல்லது அவரிடம் எதையாவது எதிர்பார்ப்பவராகவோ , தான் நேசிக்கும் கட்சியாகவோ , அமைப்பாகவோ இருக்கும்போது ...... எங்கே..? சுலபமாக சுட்டிக்காட்டமுடியுமா ? என்ன ? எனவே புகழ்வதைக்காட்டிலும் விமர்சன ரீதியாய் சுட்டிக்காட்டுவது கத்திமேல் நடப்பவை ! அதில் வீழ்ந்து இரண்டாக துண்டாடப்பட்டவர்கள் ஏராளம் .....
                                                 
                             அதே நேரத்தில் அந்த கத்தியில் சின்ன காயம் கூட இல்லாமல் விமர்சனத்தை முன்வைப்பவர்களும் சில நேரங்களில் தப்பிப்பதில்லை ..தன் நலனைவிடவும் மற்றவர்களின் நலனே அடிப்படை என்ற கண்ணோட்டத்தோடு , முன்வைப்பவர்களே அதிலிருந்து தப்பிகின்றனர் ..". சரியான விமர்சனம் " என்பதற்கு என்னதான் அளவுகோல் ? "மக்கள் "தான் அளவுகோல் ! மக்களென்றால்.....? எந்த அடையாளமும் இல்லாத "வெகு மக்கள் " இவைகளை உள்வாங்கியவர்கள் எதற்கும் தயங்காமல் ...எவருக்கும் பயப்படாமல் விமர்சனத்தை முன்வைக்கின்றனர் .

உயிரோவியம் ; மணிவர்மா !

Wednesday 4 September 2013

மாதா -பிதா -- குரு ......தெய்வம் !






செப்டம்பர் --5 ஆசிரியர் தினம் !
----------------------------------------------------------
வெளியே பயிரை மேயலாமா ?
---------------------------------------------------------------

மாதா -பிதா -- குரு ......தெய்வம் ! .....உண்மையா ?
-----------------------------------------------------------------------------------------

                                         புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்துள்ள குக்கிராமம்தான் இருளன் சந்தை ! அந்த ஊரில் உள்ள ஆரம்பபள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மாணவ -மாணவிகள் படிக்கிறார்கள் ! அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் அரிக்கிருஷ்ணன் (வயது -57 ) என்பவர் கடந்த ஒரு மாத காலமாக தன் வகுப்பில் படிக்கும் 3ஆம் வகுப்பு மாணவிகளை நிர்வாணப்படுத்தி தகாத இடங்களில் கில்லியும் , துன்புறுத்தி வந்துள்ளார் . வலி தாங்க முடியாத குழந்தைகளில் ஒன்று தன் வீட்டிலில் தாயார் குளிக்க வைக்கும்போது விளக்க தெரியாமல் விளக்கி இருக்கிறது !
ஆவேசம் கொண்ட மக்கள் வீதியில் இறங்கி போராட..... வழக்கமாக காவல்துறை வருகை ! வழக்கு ...கைது .... 15 நாட்கள் சிறை ......இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் மறந்து போகும் ! வேறு ஒரு பள்ளியில் அந்த ஆசிரியர் பணியாற்றலாம் !
                                         # ஏதோ இப்போதுதான் இப்படி ஆசிரியர்கள் செய்வதாக ...கருதக்கூடாது .......இவையெல்லாம் வழக்கமான ஒன்றுதான் ! இப்போதான் இவையெல்லாம் வெளியில் பேசப்படுகிறது ! அவ்வளவே....! என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசப்படுகிறது ! ..... ஆசிரியர்களில் எல்லோருமே அப்படித்தான் என்று பேசவில்லை ! ஒரு ஆசிரியர் செய்தாலும் தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுகின்ற " குரு " இப்படி செய்யலாமா ?
                                         இந்த உலகில் யாரை நம்புவது ? யாரை நம்பாமல் இருப்பது ? 3 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை எந்த மாதிரியான சிந்தனையில் பள்ளிக்கு அனுப்பபட்டிருக்கும் ? அந்த வெள்ளை குருத்து அந்த ஆசிரியனின் மனதை கெடுத்துவிட்டாள் என்று எவராலும் சொல்ல முடியுமா ? இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்க என்னதான் காரணம் ? இவையெல்லாம் வெளியில் தெரியாது ...அப்படியே தெரிந்தாலும் ஏதும் செய்துவிட முடியாது ! என்ற அலட்சியமான மனோ நிலை ! 
                                ஆணுக்கு வெறி வந்துவிட்டால் குழந்தையோ ? பெரியவளோ ? குமரியோ ? கிழவியோ ? எதையும் பார்ப்பதில்லை ! அப்படித்தானே ? இதுவும் ஆணாதிக்க வெறிதானே ? குழந்தையாக இருந்தாலும் ,குமரியாய் ,கிழவியை இருந்தாலும் அவள் பெண் என்ற காரணத்தாலே அவளை உடமையாய் பார்க்கப்பட்டு , உடமையை கைப்பற்றும் மனோ நிலை..... ஆணாதிக்க வெறியல்லாமல் வேறென்ன ?
                                            அரபு நாடுகளில் அமலாக்கும் கடுமையான சட்டங்களை நமது நாட்டிலும் போடப்பட்டால் இப்படிப்பட்ட குற்றங்களை தடுத்துவிடலாம் என்றெல்லாம் புத்தி ஜீவிகள் ஆலோசனை சொல்கிறார்கள் . ஒரு தலையை வெடி வீசிய பின்பு அந்த நாடுகளில் அந்த வகையான குற்றங்கள் இல்லாமலே போய் இருக்கவேண்டும் ! அப்படிபோய் விட்டதா ? என்ன ? அங்கே மாதத்தில் இரண்டு தலைகளுக்கு மேல் வெட்டப்படும்போது ...அந்த தண்டனைகளால் அந்த குற்றத்தை என்ன செய்துவிட முடிந்தது ! இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். 
                                            அதற்காக தண்டனைகளே கூடாது என்பதல்ல அர்த்தம் .
பாலியல் குற்றமிழைத்த குற்றவாளி எக்காரணத்தைகொண்டும் வெளியே வரமுடியாதபடி வாழ்நாள் தண்டனை அனுபவிக்கும்படி செய்யவேண்டும் ! அரசும் முழு கவனத்துடன் பெண்கள் - பாலியல் - சமூக குற்றம் தொடர்பான கல்வியை..... ஆரம்ப கல்வியிலிருந்து கொடுக்கப்படவேண்டும் .
                                           - பொது விளம்பரங்கள் - தொலைக்காட்சி -சினிமா போன்ற ஊடகங்களில் பெண்களை கண்ணியகுறைவாய் காட்டாமல் இருக்க கறாரான தணிக்கை முறைகள் கொண்டுவரவேண்டும் ! 
                      குறைந்த பட்சமாக இவையெல்லாமே செய்யாமல் ஆட்சியாளரும் ,சமூகமும் இருக்குமேயானால் ..... பெண் அடையாள ஜீவன்களுக்கு வீடுகளே சவக்கூடமாகவும் , பள்ளிகள் கல்லறைகலாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது !



Friday 30 August 2013

அரிதாரம்.....!



அழகு என்பது அரிதாரம் பூசுவதல்ல ....
அது அவர்களின் நிறைவுக்கு !

"அழகு "அவரவர் கண்களில் .....
அவரவர் கருத்துக்களில் இருக்கிறது !


"நிறம் " அழகென்றால் "மழை "?
"பெண்" அழகென்றால் "மகள் "?

"ஒலி " அழகென்றால் "தமிழ் " ?
"உருவம் "அழகென்றால் " காற்று " ?

நடிகைதான்  அழகென்றால் .. ".நீ "!


Tuesday 27 August 2013

அத்துமீறல்கள்...!




வெட்டப்பட்ட ஆடுகளைப்போல்
இங்கு எல்லாமே வியாபாரம்தான் !

கிழிக்கப்பட்ட சதை விற்பனையாகிறது,
அவள் சம்மதமில்லாமலே .!

அத்துமீறல்கள்....
அரங்கேற்றப்படுகிறது !

உடல் மீது அவர்களும் ,
உள்ளத்தை ஊடகங்களும்...!

சிந்திய ரத்தமும் ,துணியும்
சிறுத்தைகள் ஆராய்கின்றன '

முறத்தால் அடித்தவள் ...இன்னும்
முடிந்துபோகவில்லை !

வருவாள் ....உறுப்புகளற்ற அவள்
ஆயிரமாயிரமாய் ........!

Monday 26 August 2013

அவள் ...!




எடுத்தெறிந்து பேசுகிறாய் ....
யாரையும் ?

துணிந்து வாதிடுகிறாய் ....
யாருக்காவோ ?

அடங்கி போவதில்லை....
எங்கேயும் ?

அறுத்தெரிகிறாய் .....
ஆணாதிக்கத்தை ?

எத்தனை முறை கேட்டும்.....
என்னையும் சேர்த்து முடித்துவிட்டாய் ..

சொரனையற்ற "சமூகத்து"க்கென்று .....!

Sunday 18 August 2013

நட்பின் ஆழம் புரிதல் ......!



                                                               சில நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்போது இவர்களை போல நல்லவர்கள் நம் வாழ் நாளில் கிடைக்க மாட்டார் என்று எண்ணி பழகுகிறோம் ,ஆனால் அப்படிப்பட்டவர்களின் உறவு நீடிப்பதில்லை . ஏன் இப்படியெல்லாம் நமக்கு மட்டும் நடக்கிறது என்று பல நாட்கள் ...பல மணி நேரங்கள் யோசித்து பார்ப்பதுண்டு முடிவில் நாம் அவர்களோடும் ,அவர்கள் நம்மோடும் இணையாமலே போய்விடுகிறோம் . 
                                                        அப்படி பிரிந்து போகக்கூடியவர்கள் தான் அதற்கு காரணமாக இருகிறார்களா ? என்றால் அப்படி அவர்கள் பக்கம் மட்டுமே தள்ளிவிட முடியவில்லை ! ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை சொல்லும்போது அவற்றை முழுமையாய் ஒதுக்கித்தள்ளவும் முடியவில்லை ! அதற்கு நாமும் பொறுப்பாளியாய் ஆகிறோம் , குறிப்பாய் நம்முடைய இயலாமையை ,வறுமையை , உடல் நலக்குறைவை வெளிப்படையாய் நம்மைப்பற்றி முழுமையாய் புரிந்து கொள்ளாதவர்களிடம் சொல்லிவிடுகிறோம் . அவர்கள் சமூக பொருளாதார நிலையோடு நம்மை ஒப்பிட்டு இப்படிப்பட்டவர்கள் நம்மோடு எப்படி ஈடுகொடுக்க முடியும் ? என்று தீர்மானித்துவிடுகிறார்கள் .
                                ஆகவே மன்னிப்புகூட புரிந்து கொள்ளக்கூடியவர்களிடம் மட்டுமே  கேட்க முடியும் ! புரிதல் இல்லாதவர்களிடம் மன்னிப்பு மட்டுமல்ல ...நட்பும் கேலிக்கூத்தாகிவிடும் ! நட்பின் ஆழம் புரிதல் ......நட்பின் மனதைத்தவிர எதையும் எதிர் பார்க்காத புரிதல் !

Saturday 17 August 2013

முகம் கிழிக்கும்....முகநூல் !


                             


இது கனவு உலகம் ! நிஜம் வேறு .......!
இதில் உங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் !
என்ற தங்களின் வழிகாட்டுதலையும் , வாழ்த்தினையும் , பெற்றதன் விளைவாக இணையத்தில் தனக்கான பாதையை வகுக்க முயற்சிக்கிறேன்.  
 இது புகழ்ச்சியல்ல ...மனம் திறந்த உண்மை ! 
                        உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் நண்பர்களாக கிடைத்து இருகிறார்கள் ...நட்பு என்றால் எதையும் எதிர்பார்த்து இணைவதல்ல ..
.என்பதை நிஜமாக்கவே முயல்கிறேன் .இன்றைய நுகர்வு கலாச்சாரம்  
 " உனக்காக ஓடு ! உனக்காக எதையும் மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள் !
பெண்ணென்றால்...... அவளை உடல் தேவைக்காய் எடுத்துக்கொள் அல்லது முயற்சி செய் ! ஆணென்றால் நட்பென்று ஒன்று இல்லை
.நாசுக்காய் பேசி எதையாவது அவர்களிடமிருந்து பிடிங்கிக்கொள் !
என்ற வக்கரத்தை வாழ் நிலையாய் திணித்துக்கொண்டிருக்கிறது ! இவற்றிலிருந்து தலை தப்பினாலும் ........,என் நட்பு வட்டத்தை தாண்டி  
புத்தி ஜீவிகளும் , நேர்மைவாதிகளும் , பெண்ணியவாதிகளும் போராடிவருகிறார்கள்  யாரையும் எதிர்பாக்காமல் என்று உணர்கின்றபோது...   ஓராயிரம் சுத்திகளால் என் கர்வம் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. 
முயன்று வருகிறேன் ....... நட்பு ...! நட்பாகவே இருக்கவும் . நாம் பிறருக்காக இருக்கவும் ...... முயன்று பார்ப்போம் ! !

நண்பர் .மகேந்திரனுக்கு.......நன்றி ! 

Tuesday 13 August 2013

தமிழ்ச்செல்வியின் . ".குமரி "



எழுத்தாளர். தமிழ்ச்செல்வி அவர்களுக்கு ! வணக்கம் !
                                                       " குமரி "நல்ல சிறுகதை சொல்லப்பட்டவிதம் மிக அருமை .எண்பதுகளில் எழுத்தாளர்.சு .சமுத்திரம் அவர்களின் "வாடாமல்லி " என்ற நாவல் முதன்முதலில் படிக்க வாய்ப்புகிடைத்தது .படித்து முடித்த பின்பு பலநாட்கள் என்னால் தூங்க முடியவில்லை . அப்போழுதான் அரவாணிகளை பற்றிய என் கண்ணோட்டம் எவ்வளவு மோசமானதாகவும் ,கேவலமான புரிதலும் இருந்தது என்பதை நினைத்து வேதனைப்பட்டேன் .
                                                                         அதன்பிறகு அரவாணிகள் ( மனிக்கவும் இப்பொழுதான் திருநங்கை என்று குறிப்பிடுகிறோம் ) சம்மந்தமாக நிறைய தேடுதல் எப்பொழுது மனித சமூகம் தோன்றியதோ அப்பொழுதே ...ஆண் --பெண் ---அரவாணிகள் என மூன்றாம் இனமும் தோன்றி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன் .மகாபாரதத்தில் விராடபருவத்தில் அக்கியாதவாசத்தில் ஓர் ஆண்டுகாலம் அர்ஜுனன் அரவாணியாக வாழ்க்கை நடத்துவதும் ,அரவானுக்கு மனைவியாக மாறும் கிருஷ்ணன் அரவாணியாகமாறி திருமணம் செய்த அன்றே தாலி அறுப்பு நிகழ்வும் செவி வழி இலக்கியம் எழுத்துவடிவில் மகாபாரதமாக பரிணமித்த பின்னும் அதில் பதிவு செய்யபட்டிருக்கிறது . இது அரவாணிகள் பற்றிய அரிச்சுவடி துவக்கம் என்றாலும் ,அரவாணிகளின் நடப்பு அவர்களின் பிறப்பு .எப்படி ?. எங்கு ? தேடினேன் ........... எங்கோ நகரத்தில் ,பெருந்துகளில் ,சந்தைகளில் ,இரவு நேர கைதட்டல்களில் அவர்களை என்னால் மறக்க முடியவில்லை 
                                                            . ஏன்னென்றால் வளரிளம் பருவத்தில் இருக்கும் என் பையன் அரவாணியாக மாறமாட்டான் என்பது என்ன நிச்சயம் ? தன் மனைவியிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியவில்லை . இதுபற்றி... யாராவது இவர்கள் பற்றி எழுத மாட்டார்களா ? என்ற தேடுதலில் இருந்த பொழுதுதான் அரவாணிகள் பற்றி எழுத்தாளர் .அ .பிரேமா அவர்கள் நேரடி உரையாடல் கொண்ட சிறு பிரசுரம் வெளி வந்தது .அதில் ஆணாக பிரசவித்த அந்த ஜீவன் குரோமோசோம்கலின் மாற்றம் அவர்களின் அங்கத்தில் உள்ளதைக்கூட அகற்ற துடிக்கும் கொடுமையும் ,அவர்கள்உயிர் படும் அவஸ்த்தையும் பதிவு செய்யப்பட்டிருந்தது . 
                                                       அதன் பிறகு முற்போக்கு எழுத்தாளர்களின் சந்திப்பு எங்கள் ஊரில் நடந்தது ,அவர்களிடம் " என்னால் எழுத முடியாது நீங்கள் நிறைய இலக்கியங்களை கொடுக்கிறீர்கள் ,சாகித்திய அகாதமி விருதுகள் கூட பெறுகிறீகள் அரவாணிகள் பற்றி எழுதுங்கள் என்று கேட்டேன். இன்னும் ஒருபடி மேலே போய் தீண்டாமை பற்றியும் அதை போக்க போராடுவதாகவும் சொல்கிறிர்கள் ,உண்மையான தீண்டாமை அரவானிகள்தான் என்றேன் . ஒரு தாயே தான் பெற்ற பிள்ளையை தீண்ட மறுப்பது .....இந்த கொடுமை எங்கேனும் பார்த்ததில்லை என்றெல்லாம் சொன்னேன் .என் முயற்சிகளெல்லாம் வீணாகிபோனது . 
                                         பிச்சைகாரனுக்குகூட அவ்வளவு எளிதில் பிச்சை போடா மறுப்பேன் .ஆனால் எங்கேனும் கைதட்டல் கேட்டால் .........................? யாரோ ஒரு தாயின் ..தந்தையின் ...தன மகனை இழந்த அழு குரல் கேட்டுகொண்டே இருக்கிறது .அதனால் என் பாக்கெட்டில் இருக்கும் பணம் என்னையறியாமல் அவர்களின் கைகலில் திணித்து இருக்கேன் . ஒரு சராசரி மனிதனின் தவிப்பு ..அதற்க்கு உங்கள் சிறுகதை " குமரி " ஆறுதல் ! நன்றி ! !

    எழுத்தாளர் .தமிழ்ச்செல்வி எழுதிய " குமரி " சிறுகதைக்கு 27.1.2013 இல் எழுதிய விமர்சன கட்டுரை .

Sunday 11 August 2013

அவனல்ல ....அவளுமல்ல ... மனுஷி !

                                   

                                                                                     அரவாணிகள் கடவுளின் வடிவம் .....அர்த்தநாதீஸ்வரர் என்ற கடவுளின் வடிவமே ஆண்டாண்டு காலமாய் "அரவாணி "களின் அடையாளம் என்பதை மறுக்க முடியாது . இது ஏதோ கொச்சைபடுத்துவதை யாரும் நினைக்கவேண்டாம்.
                                              மகாபாரதத்தில் "களப்பலி" ஆகும் முன்பு அரவான் "தான் திருமணமாகாமல் இறந்தால் நரகத்துக்கு போவேன் ஆகையால் நான் இறக்கும் முன்பு திருமணம் முடிக்கவேண்டும் அதற்கு ஒரு வரம் வேண்டும்" என்று கிருஷ்ணனிடம் வேண்டி பெற்றான் . நாளை சாகப்போகும் ( பலியாளுக்கு )அரவானுக்கு யார் பெண் கொடுப்பார்கள் ? கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்து கொள்கிறான் .அரவானை ( கூத்தாண்டவர் ) திருமணம் செய்துகொள்பவள் அரவாணி இப்படித்தான் அந்த புராணம் சொல்வதாக சொல்கிறார்கள் ! இதில் கூட ஆண் கடவுள் பெண்ணாக மாறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது .
                                                              அதுமட்டுமல்ல மகாபாரதத்தில் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காடாண்ட போது அதில் ஓராண்டுகாலம் மாறுவேடத்தில் வாழவேண்டும் என்ற கட்டளையில் அர்ஜுனன் தேவலோக கன்னியின் சாபத்தை நிறைவேற்றும் விதமாக ஆணுமல்லாத பெண்ணாக விராட மன்னனின் மகளுக்கு நாட்டியக்காரியாக வாழ்ந்தாள் என்றும் பதிவு செய்யப்பட்டிருகிறது.
                              அர்த்தநாதீஸ்வரர்..அர்ஜுனன் . அரவாணிகளின் அடையாளம் ! இவைகளெல்லாம் புராணங்களில் ,இதிகாசங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு போற்றி பாராட்டப்பட்டாலும் அவைகளெல்லாம் கடவுளுக்கேயன்றி அரவாணிகளுக்கல்ல..என்பதுதான் யதார்த்தம் !...
அரவாணிகள் இன்று நேற்றல்ல ...மனிதன் தோன்றியதிலிருந்து ஆண்பால் - பெண் பால் - மூன்றாம்பால் ( அரவாணிகள் ) என்ற மனித பரிணாமம் பெற்று இருக்கிறது.இதில் அரவாணிகள் அவமானத்தின் சின்னங்களாக்கப்பட்டு அடியோடு மூடி மறைக்கப்பட்டு இருகிறார்கள் .
பிறக்கும்போது அரவாணிகளாக யாரும் பிறப்பதில்லை ! ஆணாக பிரசவிக்கப்படவர்களை அரவாணிகளாக மாற்றியது எப்படி ?எது ? யார் ? இந்த கேள்விகளையெல்லாம் ஒரு முறையெயாகினும் மனதளவிலாவது கேட்டுபார்த்ததுண்டா ?
                                           கண்ணே மணியே என்றெல்லாம் கொஞ்சி குலாவிய பெற்றெடுத்த தாய் முதல்எதிரியாக மாறிப்போவது மிருகங்களில் கூட இல்லையே ? தனக்கான ஆண் வாரிசு என்றதுமே வாரி அணைத்துகொண்ட தந்தையும் தன் மகன் என்று சொல்லக்கூட வாய் கூசும் கையறும் நிலை எவருக்கேனும் ஏற்பட்டதுண்டா ?
                                                       உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் மெள்ள ... மெள்ள மாற்றமடையும் வளரிளம் பருவம் அவர்களின் எதிர்காலம் இங்கில்லை என்றுரைக்கும் என்பதை எவரேனும் எதிர்பாத்திருப்பார்களா ? தாயால் ,தந்தையால் ,தமையனால் ,தமக்கையால் ,உற்றார் ,உறவினரால் " பொட்டை " என்று புதுபெயரிட்டு துரத்தியடிக்கப்பட்டவர்கள்தான் கடவுளின் அவதாரமென்றால் அந்த அடையாளத்தை அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?
                        அடையாளப்படுத்தப்பட்ட ஆண் அவையமும் ,ஆட்கொண்டுவிட்ட பெண்மையும் அவர்களை அலைகழிக்கின்றபோது ........ அவனா ? அவளா ? என்பதை அவர்கள் தீர்மானிக்கவில்லை ! அவனல்ல .."அவள்தான் " என்று அவர்களின் உடல்தான் தீர்மானிக்கிறது என்ற உடலியல் உண்மை யாருக்குத்தெரியும் ?
                       மாற்றமடையாத ஆண் குரலும் , மழிக்கமுடியாத ரோமங்களும் முற்றுபெறாத வளர் சிதை மாற்றத்தை அவளால் என்ன செய்யமுடியும் ? சம்மந்தமில்லாமல் போன சமூகத்தின் உறவுகளோடு, ,ஆண் அடையாளத்தையும் அறுத்தெரிகிறாள்.
                                       ஒரு ஆணுக்கு பொட்டும் , பூவும், புடவையும் நடிப்பதற்கு வேண்டுமானால் பயன்படலாம் . வாழ் நாளெல்லாம் அணிய வேண்டுமென்றால் ஒப்புக்குக்கூட உள்வாங்க முடியுமா ? அரவாணி ஆணல்ல...ஆகாயத்திலிருந்து ஆண்டவனால்அனுப்பிவைக்கப்பட்டவளல்ல .. பெண்ணால் பிரசவிக்கப்பட்ட ஆண்மையை அழித்தொழித்த பெண்மை ..... பெண் ! இதை பெண்ணே ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்.
                               பெண் புறக்கணிப்பதும் ,ஆண் ஆடைகளைந்து அவமதிப்பதும் ,மிருககாட்சி மிருகங்களைவிடவும் கீழ்த்தரமான சீண்டலை இந்த சமூகம் சீண்டும்போது அவர்களால் வார்த்தைகளை அளந்து பேசமுடியவில்லை !
                                               அரவாணிகள் அவதரித்தவர்களல்ல ..... மகமறியாத அவர்கள் நம்மவர்கள் இல்லைஎன்று சொல்லிவிடலாம் ! நாளை உங்களுக்கோ ? உங்கள் மகனுக்கோ .மகளுக்கோ பிறக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?
                                       
அரவானிகளுக்கும் உடலும் ,உயிரும் இருக்கிறது .அந்த உயிருக்கும் உணர்வும் ,ஆசைகளையும் ,கனவுகளை சுமக்கும் மனது இருக்கிறது.அவர்களை புரிந்துகொள்ள அவர்களாகவே மனதால் நாமும் வாழ்ந்துபார்க்கவேண்டும்

Saturday 10 August 2013

ஈழ விடுதலை ....!


                                                                                 சர்வதேசியம் ,தேசிய இன விடுதலை பேசுபவர்களே தமிழ அரசியல் ,இந்திய அரசியல் என்று இந்தியாவில் சுருங்கி சுருண்டு கிடக்கும்போது தமிழகமுதலாளித்துவ அரசியல்வாதிகள் அவர்களுக்கான அரசியல் செய்கிறார்கள் அது தமிழகத்தில் மொழி ,இலக்கியம் ,நாடகம் ,நடிப்பு என்று அவர்களுக்கான அரசியல் அதில் ஈழ விடுதலை என்பது வெறும் வெளி வேஷம் .அவர்களிடம் உலகளவில் மானுட விடுதலையையோ ? தேசிய இன விடுதலையையோ பேசுவதில் நம்மைத்தவிர வேறு முட்டாள்கள் உலகில் இருக்க மாட்டார்கள் .இருந்தாலும் பற்றியெரியும் நெருப்பை அணைக்க சாக்கடை நீரையும் பயன்படுத்துவது சாமர்த்தியம்தான் ஆனால் அதுவே எல்லாவற்றையும் சரி செய்யும் சரியான பாதையல்ல ! சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவைதான் அதற்காக இந்திய பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகளிடம் மண்டியிடுவது முறையுமல்ல ...... சரியுமல்ல .........

.                                       இலங்கையில் இருக்கும் .வடகிழக்கு .. மலையக தமிழின மக்களின் ஒருங்கிணைப்பு .... அடுத்து தமிழ் தேசிய இனவிடுதலைக்கான தேவை உணர்ந்த ஜனநாயக (சிங்கள )சக்திகளின் ஆதரவு அதன் பிறகுதான் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இவைகள்தான் இன்றைய தேவை ! இவைகளை திரட்ட பேரினவாத ராஜபக்ஷே அரசை எதிர்த்த போராட்டத்தை ஒன்றுபட்ட ஜனநாயக சக்திகளை இணைத்த ஜனநாயக போராட்டமாக இலங்கையில் நடத்துவதற்கான முயற்சிகள் மட்டுமே சரியானது !

                             தமிழகத்தில் உள்ள தேசிய - மாநில கட்சிகளில் யார் தேசிய இன விடுதலையை ஏற்கிறார்களோ அவர்களின் வழியில்தான் தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டோர் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை நடத்த முடியும் ! இந்த புரிதல் இல்லாமல் புலம்புவதில் பலனில்லை .....




      

Friday 9 August 2013

நாய் வால் ....!



எங்கேபோய் சுற்றி வந்தாலும்
கடேசியில் ........

"அவள் " அதுக்குதான் ...!
என்று சிந்திக்கும் ...

நாய்வாலை மட்டும்
நிமிர்த்தவே முடியவில்லை !






படம் ; மணிவர்மா ..

தடம் ....!

உன்
தடமென்பதால் ...
வருகிறேன் !

நீ ..மனிதன் !
மனிதனைப்போல்....
இருக்கும் மனிதன் !



Tuesday 6 August 2013

பெண் விடுதலை கெஞ்சி பெறுவதல்ல ......!

                                                            

                                                 குடும்ப சிதைவுக்கு யார் காரணம் என்ற காரணம் தேடுகின்றனர். ஏன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களே புரிந்து கொள்வதில்லை என்ற வாதம் வலுவாகிகொண்டிருகிறது . உண்மையோ வேறுவிதமானது ...... காதலித்தாலும் ,காதலிக்காவிட்டாலும் ஆண் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு நடக்கும் வரை எந்த பிரச்சனையும் பெண்ணுக்கு வருவதில்லை .ஒரு சில இடங்களில் பெண் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு நடக்கும்வரைஅந்த குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வருவதில்லை...ஆனால் பெண் சொல்வதை கேட்பதாக தெரியவில்லை .ஆகவே சமூகத்தில் பெரும் பகுதி ஆணே ஆதிக்க சக்தியை இருகின்றான் . பெரும்பாலும் பெண்கள் ஆதிக்க சக்தியாய் இருப்பதில்லை .. ஏனென்றால் இது ஆணாதிக்க சமூகம் .

                                                         இந்நிலையில் ஒரு பெண்ணை .ஆண் திருமணம் செய்துகொண்டு பெண் வீட்டோடு மருமகனை போவது சுயமரியாதை குறைவானதாகவும் ,பெண்தான் ஒரு ஆணை திருமணம் செய்துகொண்டு அவள் பிறந்த வீட்டைவிட்டு கணவன் வீட்டுக்கு வரவேண்டும் ! அப்படி வருவது மரபு என்றும் இந்த ஆணாதிக்கசமூகம் காலங்காலமாய் கற்பித்துள்ளது . அதனால் "அவள் " அவளாக இருக்க முடிவதில்லை .

                                                       ஒரு ஆணைப்போல் அவளும் அவளாகவே இருக்க முயலும்போது ஒடுக்கப்படுகிறாள் . அந்த ஒடுக்குமுறையிலிருந்து வெளியேற அத்தனை மரபுகளையும் உடைத்தெரிகிறாள் . அதை ஏற்கும் மன நிலையில் இன்றைய ஆணாதிக்கம் இல்லை . அதற்காகபெண் விடுதலை கெஞ்சி கேட்டு பெறுவதல்ல... .இவைகளை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் பெண் விடுதலை என்பது வெற்றி பெற்றே தீரும் !

விமர்சனங்கள்........!


                               


                    .விமர்சனங்கள்....... வைரத்துக்கான பட்டைதீட்டலாக இருக்கவேண்டும் என்பது உண்மைதான் ! சில நேரங்களில் கண்ணாடிகளின் மீதும் விழுந்துவிடுகின்றன ! நாம் நேசிக்கும் நண்பர்கள் சமூக அழுக்குகளை தன் மீது சுமந்து வந்து சக நட்புக்கெல்லாம் சரியானவை என்று விற்கும்போது.............. விமர்சனத்தை முன்வைப்போரின் கோபம் தவிர்க்க முடியவில்லை ! 
                                           இன விடுதலை..... மனித நேயம் ..... பெண்ணிய பார்வை ....மதம் கடந்த நல்லிணக்கம் ....சுய மரியாதை..... தன்னொழுக்கம் என தன் நட்பிடம் தாம் எதிர்பார்த்த சமூக் அக்கறை இல்லையே ? என்றுணரும்போதும் ,இவைகயெல்லாம் கேளிகூத்தாக்கும்போதும் யோக்கியவானாக அல்ல .....அவர்களை யோசிக்க வைக்கவே விமர்சனகள் ஈட்டியகிவிடுகின்றன .                                                               எவ்வளவு மக்கட்டை வார்த்தைகளை போட்டாலும் வேகமாக வீசுவதால் வலித்துவிடுகிறது அவர்களுக்கு.... ! எப்படித்தான் கண்களை மூடிக்கொண்டு காதுகளை திறந்து வைத்தாலும் நாராசார வார்த்தைகளை எப்படி சகித்துக்கொள்ள முடியும் ? 
                                                உண்மைதான் நம்மீது அக்கறையுள்ள ,இதுநாள் வரை நம்மை நேசிக்கும் நட்பாயிற்றே ? என்று நினைக்கிறோம் ஆனால்.... அப்படி விட்டுவிடவும் முடியவில்லை ! தன் விரலேயானாலும் விழிகளில் படும்போது தடுக்கின்ற தன்னெழுற்சி தப்பாகுமா ? தப்பென்று நினைத்தால் அவர்களை தவறவிடுவதைத்தவிர வேறு வழி இல்லை !

Sunday 4 August 2013

காட்டுமிராண்டிகள் ........!


                தஞ்சை பெரிய கோவிலில் புத்தபிசுகளை சிலர் தாக்கியதை கண்டு மனவேதனை அடைந்தேன் ! ஒரு தப்புக்கு ....ஒருதப்பு சரியல்ல ! இதை முட்டாள்தனமென்றனர் சிலர் .. இது முட்டாள்தனமல்ல ..............காட்டு கூச்சல் போடும் காட்டுமிராண்டித்தனம் ! தன் சட்டையை தானே கிழித்துகொள்ளும் பைத்தியக்காரத்தனம்..!....

இந்த காட்டு மிராண்டிகளும் ,பைத்தியங்களுமா ? ஈழத்தமிழர்களின் உரிமையை பெற்றுத்தரப்போகிறார்கள் ? அது ஒன்றுமில்லை .............அதைவிட கூத்து புத்த பிச்சை அடிப்பதை தடுக்கும் இளைஞனை பார்த்து " நீயெல்லாம் ஒரு அப்பனுக்கு பொறந்தவனா ? " என்று கேட்கிறான் .அதையும் அந்த பைத்தியங்கள் பதிவு செய்திருகின்றனர் .இவையெல்லாம் அரசியலுக்கு , விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுமேயொழிய வேறு எந்த பயனுமில்லை !

                  இந்த காட்டுமிராண்டித்தனத்தை படித்தவர்களும் ,பண்பாளர்களும் கண்டிக்கின்றனர் .. பத்திரிக்கையாளர் மனுஷிய புத்திரனுக்கு என்ன ஆச்சு?..........அவரை நல்ல விபரம் தெரிந்தவராகத்தானே பார்க்கிறோம் ! ச்சே .. .என்ன முட்டாள்தனம் ? அவரா இப்படி .உதாரணத்துக்கு .ஒரு சென்னைகாரர் தன் உறவினரை கொன்றுவிட்டார் என்பதற்காக ...... சென்னைலிருந்து வரும் அத்துணை பேரும் மோசமானவர்கள் என்றோ ? கொலைகார்கள் என்றோ தண்டிக்க முடியுமா ? இவயெல்லாம் பார்க்கும்போது ... என்ன இவர்கள் பத்திரிக்கையாளர்களா ? என்று என்ன தோன்றுகிறதே !

                 ஒரு பத்திரிக்கையாளன் என்பவன் நிர்வாகி போன்றவன் , ஒரு பத்திரிக்கையாளன் அமைப்பாளனை போன்றவன் , ஒரு பத்திரிக்கையாளன் புரட்சியாளனைப்போன்றவன் ........என்னென்றால் அவனிடம் இந்த சமூகத்தின் முக தோற்றத்தையே மாற்றக்கூடிய வலிமையான எழுதுகோல் என்ற ஆய்தம் இருக்கிறது . அந்த ஆயுதத்தை பிடித்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படலாமா ? அப்படி இல்லையென்றால் இந்த சமூகத்தை பின்னோக்கி செல்லத்தான் அவரின் அறிவும் ,ஆற்றலும் பயன்படுகிறதா? படித்தவர்களே இப்படி புரிந்துகொண்டால் .....படிக்காதவர்களின் நிலை என்ன ?
 
"படித்தவன் வாதும் சூதும்செய்தல் போவான் ,போவான் ஐயோவென்று போவான் !" என்று மகாகவி .பாரதி சொன்ன வரிகள்தான் நினைவுக்கு வருகிறது !







காதல் நாடகமா ? அரசியல் நாடகமா ?

              "எது கிடைத்தாலும் அதை பயன்படுத்து ! என்ற தாரக மந்திரத்தைத்தான் அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள் .அதில் பழைய ஆயுதம் ஊழல் ! புதிய ஆயுதம் காதல் !

                                         ஊழலையும் ,காதலையும் பொதுவாய் பார்த்தால் ஏதோ நியாயவாங்களின் நேர்மையான நீதி போதனை கதைகளைப்போல் தெரியும் ,ஆனால் உண்மை அதுவல்ல என்பது உற்றுநோக்குபவர்களுக்கே புரியும் ! " "எல்லா நதிகளும் கடலை நோக்கியே "என்பதைப்போல அரசியல் வாதிகளின் எல்லா செயல்பாடுகளும் வாக்குவங்கியைநோக்கியே இருந்துவருகிறது.

                                       ஒரு காலத்தில் தேசிய அரசியல் என்றால் மதமும் ,மாநில அரசியல் என்றால் இனமும் என்ற செயல்திட்டத்தை முன்வைத்து நடத்திய தேர்தல் பந்தயத்தில் அவர்களுக்கான முழு வெற்றியை பெறமுடியவில்லை என்பது உண்மை .ஆனால் மத அரசியலும் ,இன அரசியலும் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாவிட்டாலும் ,முற்றிலும் தோல்வியடையவில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை .இந்நிலையில்தான் தன்னுடைய செயல் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் .

                             தேசிய அரசியலில் "ஊழலற்ற நிர்வாகம் "என்ற கொஷமும் , மாநிலத்தில் இனமல்ல ,மொழியல்ல..... ஜாதி ! அதை பாதுகாப்போம் என்று சொல்லி சரித்திரத்தை தோண்டியெடுத்து தூக்கிலிடுகிறார்கள் !

                                         

அரேபியர்கள் ...இந்தியரல்ல ..!

                                                     
                   

                                                                        அரபு நாடுகளில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளை சில நண்பர்கள் பதிவு செய்கிறார்கள் அதை பார்த்து .மனம் சங்கடப்பட்டது .மிக்க வேதனை அடைந்தேன் . அவர்கள் இந்த காட்சியை எதற்காக பகிர்ந்தீர்கள் என்று எனக்கு புரியவில்லை . இதை விடவும் கொடுமையாக மரணதண்டனை ஒரு பெண் விபச்சாரம் செய்தாள் என்பதற்காக அவளை உயிரோடு கழுத்து மட்டம் வரை புதைக்கப்பட்டு கல்லால் அடித்து கொல்வதையும் , இன்னொருவர் வாளால் வெட்டி மரணதண்டனை நிறைவேற்றுவதையும் பார்த்து இருக்கேன் . இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும்போது பள்ளிவாசலிருந்து "பாங்கு" வாசிப்பதையும் அதன் பிறகே தண்டனை நிரவேற்றப்படுவதையும் பார்த்தேன்
                                                                                                                                                                                .                              இதை முதன் முதலில் பார்க்கும்போது என்னால் தூங்க முடியவில்லை !நான் அவர்களிடம் கேட்பது என்னவென்றால் " இஸ்லாம் மார்க்கத்தை தழுவாத, ஷரியத் அல்லது அரபு நாட்டின் சட்டம் தெரியாத மக்களுக்கு நீங்கள் பகிர்ந்த இந்த பகிர்வு பார்க்கும் என்ன மாதிரியான உணர்வு தோன்றும் என்பதை நீங்கள் ஊகித்தது உண்டா ? சரி இப்படிப்பட்ட பதிவுகள் பதிவு செய்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இஸ்லாமிய சட்டம் உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் புரிதலுக்கு சரியாக இருக்கலாம் ! மற்றவர்களுக்கு ? ஓரளவுக்கு புரிதல் கொண்ட என்னாலே அவற்றை தாங்க முடியவில்லை . ஏற்கனவே இஸ்லாமிய மக்கள் "விரோதிகள் "என்ற வெறி ஊட்டப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு இந்த பதிவு எப்படி இருக்கும் ?

                                  அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட கொடூரமான மரணதண்டனை நிறைவேற்றுவது அரபு நாடுகளுக்கு வேண்டுமானால் வழக்கமாக .... மரபாக , நெறியாக இருக்கலாம் இந்தியாவில் ? அங்கு நிறைவேற்றப்படும் தண்டனையை இங்கே மனதில் பதியும்படி பதிவிடுவது ஏன் ?
எங்கள் ஊரில் உள்ள பள்ளி வாசலின் பாங்கு சத்தம் கேட்டவுடன் மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்சி என் மனத்திரையில் இன்றும் ஓடுகிறது ! இதற்கெல்லாம் உங்களைபோன்ற ஞானம் இல்லாதவர்களின் செயல்பாடு என்று என் மனதை சரிகட்ட முடியவில்லை !

                                                                     இஸ்லாத்தை தழுவிய மனிதநேயமிக்க நல்ல நண்பர்கள் இன்றும் என்னுடன் இருகிறார்கள் என்னை பொருத்தவரை மதங்களைவிடவும் ,மனிதர்களை நேசிப்பவன் நான் . யாரும் உங்களிடம் சொல்ல தயங்கி இருப்பார்கள் ,இல்லையென்றால் கண்மூடித்தனமாக உங்கள் செயல்பாட்டை....,இஸ்லாத்தை..... தூற்றி இருப்பார்கள் !

                                  எல்லா மதங்களிலும் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அதில் வித்தியாசம் இருக்கலாம் . நோன்புக்கென்று ஒரு மாதத்தை ஒதுக்கி " இறைவன் மட்டுமே பெரியவன் " அவன் இம்மைக்கும் மறுமைக்கும் "வழி காட்டுபவன் என்று விரதம் இருக்கும் இந்த நாட்களிலா ..... இப்படிப்பட்ட செய்திகள் ....... ? இப்படிப்பட்ட பகிர்வுகளை பதிவிடும் நண்பர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன் ! தவறு இருப்பின் பெரும்தகையாய் மன்னிக்கவும் ....  

         

                                   

Monday 29 July 2013

நேசிப்பு ......உடலையல்ல ! உள்ளத்தை .....


                                                                   

                                                   எற்றத்தாழ்வுகளுக்கான சமூக கட்டு வரம்புகளை உடைத்தெறிந்து   அதையும்     தாண்டி நேசிப்பை    விசாலப்படுத்தும்போது உலகில் உயிர் பெற்ற அத்தனை உயிர்களும் உங்கள் வசப்படும் !    காக்கை குருவி எங்கள் ஜாதி ! நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் ! நோக்க நோக்க களியாட்டம் நோக்கும் திசையெல்லாம் ..... என்றான் அந்த மகா கவி !   நாம் மகா கவியாய் ஆகாவிட்டாலும் மனிதனாகவாவது     இருக்கவேண்டாமா ?

                               நேசிப்பு என்றாலே பெண் -ஆணையும் ,ஆண் - பெண்ணையும் நேசிப்பதையே அர்த்தப்படுத்தப்படுகிறது .அது இன கவறுதலுக்கான நேசிப்பு ! எந்த ஒருமனிதன் தன்னை நேசிக்க கற்றுக்கொண்டானோ ? அவனே சக மனிதனை நேசிக்க கூடியவன்

                                                ஒவ்வொரு மனிதனும் பிறரை மதிக்க..  வேண்டும் என்பது யாரும் எழுதிய சட்டமல்ல ......... மாறாக மனிதர்கள் கடைபிடிக்கும் ஒழுங்கு   முறை ,   மதிக்கவேண்டும்    என்பதன்    அர்த்தம்தான்      என்ன ? மற்றவர்களை நேசிப்பதே மதிப்பதாகும் .மற்றவரை   நேசிக்கும்    எண்ணம் ஒருவருக்கு வந்துவிட்டாலே அவரின் செயல்பாடு மாறிவிடும் அந்த மாற்றம் உடல் மொழியாக மாற்றம் பெரும் ! . தன்னை தானே      வெறுத்தொதுக்கும் எவரும் நீண்ட நாட்கள் வாழ்வதில்லை !ஆகவே முதலில் தன்னை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்

                                               தாய் தன் குழந்தைக்கு கொடுத்த முத்தத்தை எண்ணி சொல்ல முடியுமா ? அந்த நேசிப்புக்கு அளவு இல்லை , தன் குழந்தையை தன் உடலின் ஒரு பகுதியாகவே அவள் பார்ப்பதால் எச்சில் .மல ஜலம் எதுவும் அவளுக்கு தெரிவதில்லை ! மனிதன் அளவிட முடியாத அந்த    நேசிப்பை தாய்மை என்ற ஒரு வார்த்தைக்குள் அடைக்க முடியவில்லை . நேசிப்பும் , சகிப்பும் கொண்ட அவளை எத்தனை விடுதியில்         விட்டாலும் இன்னும்...... இன்னும்.....மிச்சம் வைத்திருக்கிறாள் தான் உருவாக்கிய உயிருக்காக நேசிப்பை ! மனிதனாக இருப்போம் ! சக மனிதனை நேசிப்போம் !

Friday 26 July 2013

தொப்பியும் ...அங்கியும் !


                              1992  டிசம்பர் 6 பாபர்  மசூதி இடிப்புக்கு பின்பு தொப்பியும், அங்கியும் அடையாளப்படுத்தபட்டு  இருக்கிறது .அரசியலுக்காக ............. இந்த  தேசத்தில் இவைகளை அணிந்த அவர்களெல்லாம்  அந்நியர்கள் என்றும் இந்துக்களுக்கு  எதிரானவர்கள் என்றும் பொய் பிரச்சாரம்  செய்யப்பட்டு வருகிறது . இடித்தவர்கள் அத்வானியின் வாரிசுகள்........! மோடியின் பங்காளிகள் ! என்பது  யாரும்  மறுக்க முடியாது . இதற்கு ஆதரவு  கரமாகவும்,அடிகொலியவர்கள் அன்றைய நரசிம்மராவ் தலைமையிலான  காங்கிரஸ் என்பதையும்  மக்கள்  மறக்க வில்லை .
                             ஏறக்குறைய 21 ஆண்டுகள்  கடந்த  பின்பும் இன்றும்  அது  நீறு பூத்த  நெருப்பாக தொடர்கிறது .அது கொஞ்சம் கொஞ்சமாக  குறைந்து  கொண்டிருந்த  வேளையில்  வரும் நாடாளுமன்ற  தேர்தல் வருவதற்கான  வாய்ப்பு  இருக்கும்போது மீண்டும்  ஜாதிய  தீயும் ,மத  பேயும்  மீண்டும்  கிளப்பி விடுவதற்கான  வேலை  நடந்து கொண்டிருக்கிறது . அதுமட்டுமல்லாமல் வரப்போகும்  நாடாளுமன்றதேர்தலுக்கான கருத்து பிரச்சாரத்தையும் இன்றே வலைதளத்தில் தொடங்கி விட்டார்கள் .
                                  வேட்பாளர்கள்  முதற்கொண்டு வாக்கு  சேகரிப்பும்  வலைதளத்தில் ஆள் தேர்வு செய்து அவர் மீது படிந்துள்ள கரையை அகற்றி ...ரத்தவாடை வராமல் இருக்க  புனுகு பூசுகின்ற வேலையும்  நடந்து கொண்டிருக்கிறது . அதற்கு அவர்கள்  சொல்லும் காரணம் " நல்லவர் " "நல்ல  ஆட்சி " அதை தரப்போறவர் குஜராத்  மோடி என்றும் சமூக  வலைதளத்தில்  வரிந்து கட்டிக்கொண்டு வாய்  கிழிய  பேசி வருகிறார்கள் . நரகலில் எப்படி  நல்லரிசி போருக்க முடியும் ? எட்டிச்செடியில் எப்படி  இலந்தன் பழுக்கும் ? எருமை மாடு ஏரோப்பிளான் ஓட்டுன்ன ...ஓட்டுமா ? ஆறறிவு படைத்த நாம் ஆராய வேண்டாமா ?
                                               காங்கிரசும் - பிஜேபி   அவர்களிடம்  நாம் கேட்கும் கேள்வி !அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிற்பவர்கள்தானா ?  வால் மார்ட்டை எதிர்ப்பவர்களா ? FDI-என்னும் அந்நிய  நேரடி முதலீட்டை எதிர்ப்பவர்களா ?  இவைகளுக்கெல்லாம்   இந்த  இரண்டு கட்சிகளின் ஒரே பதில் " இல்லை ! "என்பதுதானே ? இந்த  நிலைமையில்தான்  மோடி ! நல்லவர்  வல்லவர் என்றெல்லாம் வலைதளத்தில் பரப்புரை ...... பஞ்சாயத்து ..!...
                                        ஒரு கட்சி என்று  சொன்னால் அதன் தலைமை அந்த  கட்சியின் உயர் மட்ட  தலைமையாக  இருக்க வேண்டும் அப்படி  இந்த இரண்டு கட்சிகளுக்கு இருக்கிறதா என்ன ?  காங்கிரசுக்கு  சோனியா ! பி ஜே பி  க்கு அதன் தலைமை  ஆர் எஸ் எஸ்  தான்  ! இதை  யாராவது  மறுக்க  முடியுமா ? இல்லை  மூடி  மறைக்கத்தான் முடியுமா ?
                                    இந்திய  நாட்டை பற்றி  அந்நிய நாட்டை சேர்ந்தவருக்கு  என்ன தெரியும் ?  இந்திய நாட்டை பற்றி  காந்திஜியை  கொன்ற கோட்சேவை .... பயிற்றுவித்த   ஆர் எஸ் எஸ் க்கு  என்ன தகுதி இருக்கு ?
இன்நிலையில்தான் நாட்டின் எந்தோ ஒரு  மூலையில் நடக்கும் எந்த  பிரச்சனைக்கும் மத சாயமும் , குல்லாவும் அங்கியும்  அணிவித்து குறுக்கு சால்  ஓட்டுகிறார்கள் !
                                           சமீப காலமாக   வலைதளங்களில்  வருகின்ற  செய்தியும் , சொல்லப்படுகின்ற கதைகளும் ,சம்பவங்களும் இஸ்லாமியர்களையும் , ,கிருத்துவர்களையும் கொடுமையானவர்களாக , ஈவு இறக்கமற்றவர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் , சித்தரிகின்ற செய்திகளையும் ,பதிவுகளையும்  வலைதளத்தில்  பரப்பப்படுகின்றன . அதற்கு விபரமில்லாத ,அரசியலற்ற  ஒரு சில இஸ்லாமியனோ ? கிருத்துவனோ ? வக்காலத்து வாங்கிவிட்டால் ? ஒட்டுமொத்த இஸ்லாமியனின் குரலாக ,கிருத்துவனின் குரலாக ஊதி பெருதாக்கப்பட்டு வருகிறது .!!
                                     கடந்த காலத்தைவிடவும் நவீன வலைதளம் இந்திய நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்துவோரைவிடவும் ,சீரழிப்போரிடமே அதிகம் கையாளப்படுகிறது . அதற்கெல்லாம் அறிவு ஜீவிகள் என்ற  படிப்பாளிகள் வாய் மூடி மௌனியாய் இருப்பதுவும் அபத்தம் !
                                       ஒரு  சில சம்பவங்களில் ஒரு இஸ்லாமியனோ ? ஒரு  கிருத்துவனோ ? சம்மந்தபட்டு இருக்கலாம் அதுஅந்த  தனி மனிதனின் ஒழுக்கம் சார்ந்தது !  அந்த சமூகம் சார்ந்தது அல்ல ! குற்றம் செய்தவன் எவனாக  இருந்தாலு அவன் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எந்தவித  மாற்று கருத்துக்கும் இடமில்லை !
                                                   குற்றத்தை காட்டி பெரும்பான்மை " நாம்" என்று சொல்லி ஓட்டு பொறுக்குவது எந்த  வகையில் நியாயம் ? நன்றாக  படித்தவர்கள் கூட இந்த சின்ன  புரிதல்  இல்லை என்று  நினைக்கும் போது மதத்தை சொல்லி கொலை செய்யும்  குற்றவாளியைவிடவும் மிக  கொடூரமானவர்களாக  தெரிகிறார்கள் !
                                                      மோடியல்ல ...எந்த தாடிக்கு கூட  ஓட்டுகளை மிரட்டி ,பயமுறுத்தி ............பொறுக்கிகொள்ளுங்கள் . அதற்காக அண்ணன் - தம்பிகளாக - உறவுகளான வாழும்  ஒரு சமூகத்தின் மீது கொலை பழி போடுவதற்கு ! நவீன  அடிமைகளாக்க எந்த ஜனநாயகவாதியும்  ஏற்க மாட்டான் !
                                                                        ---க . மணிவண்ணன் .. புதுச்சேரி .



Friday 28 June 2013

எரிதழல் ......!

மௌனமாய் இருக்கும் நீ ...
அடுத்த  நொடியிலே 
உரக்க பேசுகிறாய்  !
எவன் தீட்டினான் உன்னை  ?
எரிதழல்  மூட்டினான் 
என்  நெஞ்சில் ......!

Sunday 23 June 2013

கேடயமல்ல ...........தாலி !

    






                                       தாலி என்னை   போருத்த வரை அது பாதுகாப்பு அப்படின்றதெல்லாம் சுத்த பொய் அது தேவை இல்லைஎன்று ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து அல்லது மனைவி மட்டுமோ முடிவு செய்வது சரியானது ! பெண்ணைப்போல் ஆணுக்கு எந்த தாலியும் இருப்பதில்லையே அடையாளத்துக்கு பிறகு ஏன் அவளுக்கு மட்டும் தாலி ? 
                       தாலி போட்டு இருந்த நிறைய பெண்ண்கள் பாது காப்பாய் இருப்பார்கள் என்பதில் உண்மை இல்லை ,பாதிக்கப்பட்டு இருகிறார்கள் ஆகவே தாலி ,கொலுசு மெட்டி எல்லாம் ஆணாதிக்க அடையாளமே ! 
                                அதே நேரத்தில் தாலியை ஏற்றுக்கொள்வதும் ,எடுத்தெரிவதும் அவளுக்கான உரிமை என்று புரிந்துகொள்ளவேண்டும் ! எடுத்துவிடு என்று வாதிடுவதும் ,எடுக்காதே ...எடுத்தால் ..? பூலோகமே தாங்காது என்பதெல்லாம் வெட்டித்தனமான வாதம் !





.முகமூடிகளின் முகநூல்.....!



ஆட்சியில் இருப்பவர் அம்மாவா ?
ஆயாவா ? என்பதல்ல பிரச்சனை ......
செய்திருப்பது சரியா தப்பா ?
என்பதுதான் இன்றைய தேவை !

இலவசத்திட்டங்கள் ,
உணவு , காய்கறிகள் ,குடிநீர் !
இவற்றையெல்லாம் கிண்டலடித்து
அரசியலாக்கும் மனோ நிலை
எழைகளுடையது அல்ல ......

எனக்கு தெரிந்து ஏழை எவரும்
முக நூலில் இருப்பதாக தெரியவில்லை !
அப்படி இருநதால் ....?
இப்படிப்பட்ட பதிவுகளுக்கு
பதில் கிடைத்து இருக்கலாம் !

அரசியல் என்றால்
கண்ணை மூடிக்கொண்டு
எதிர்ப்பதல்ல ...........
மாறாக கிண்டலடிப்பதுமல்ல !....
மக்களுக்கான நல்லதை ஏற்பதும்
தவறுகளை சுட்டிக்காட்டுவதுமே !

மது விலக்கு வேண்டும் !
மக்களுக்கான வேலை வேண்டும்
என்பதில் மாற்று கருத்தில்லை !
அதற்காக .................

ஏதும் நடக்கவில்லை என்பதும்
நடப்பவை கூட அரசியல் நாடகமென்று
நையாண்டி செய்வதும் நல்லதல்ல !
நாகரீக அரசியளுமல்ல ..........

நானா ? ஆளும் கட்சிக்காரனுமல்ல...
ஆதரித்து கொடிபிடிப்பவனுமல்ல !
அடிபணிந்து கிடப்பவனுமல்ல ........
தமிழன் !

வார கடைசியை வரவேற்பதும்
வாய்க்கு ருசியாய் உண்டு
வாழ்த்து பரிமாறி கொள்வதல்ல
முக நூல் !

எழைகளுக்கான அரசியலை
எவரும் படிக்கவில்லையே ?
ஏகடியம் பேசுவது
எல்லோருக்கும் தெரியும் !

முக்காடுபோட்ட முகனூலீல்
முகம் தெரியாமல் இருக்கலாம்
முக மூடி கிழிந்து ..........
முடை நாற்றம் மூக்கறுக்கிறதே !








Saturday 15 June 2013

தாயுக்கு பின் தாரமா......... ?



தாய்க்கு பின் தாரம் !! இதைத்தான் சொன்னார்கள் !
------------------------------------------------------------------------

                                                     தாயிக்கு பின் தாரமுமில்லை ,தாரத்துக்கு பின் தாயுமல்ல ! இருவருமே பெண்கள் இருவருமே ஆண்களுக்கு ( மகனாக இருக்காலாம் ,கணவனாகவும் இருக்கலாம் ) சேவை செய்பவர்களே அப்படி இருக்கும் பொது எந்த சேவகன் சிறந்தவன் என்ற வாதத்துக்கே இடமில்லை ! தந்தைக்குப்பின் தமையன் என்று ஏன் சொல்லப்படவில்லை ? அப்படி சொல்லும் அதிகாரம் பெண்ண்களுக்கு இல்லையா ? ஏன் பெண்கள் சொல்லாக்கூடாதா ? ஏனென்றால் ஆணுக்கு பெண் கட்டுபட்டவள் ,

                                                   ஆணுக்கு பெண் அடிமை ,ஆணுக்கு பெண் சேவகம் செய்வதுதான் உலக நியதி ,என்றெல்லாம் இந்த ஆணாதிக்கசமூகம் 'பெண் " என்ற தாயை ,மனைவியை அவளுக்கு தெரிந்தும் ,தெரியாமலும் கட்டுப்பாடு என்ற அடிமை நுகத்தடியில் அவளே கட்டுப்பட்டு கிடக்கிறாள் ,மீறுபவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறோம் .




Sunday 9 June 2013

" தோட்டி " இது வார்த்தையல்ல ! வாழ்க்கை......

                                                 

                                                தினமும் காலையில் எழுந்த உடனே முகநூல் திறந்து அதில் கடவுள் பிரார்த்தனைப்போல் "நல்லதை நினையுங்கள் ! " நல்லதை செய்யுங்கள் ! " இனிமையாகட்டும் " இப்படி எழுதுவது என் வழக்கம் ! என் முகநூல் நண்பர்கள் என்னை வம்பிழுக்க எதையாவது போட்டு விவாதத்துக்கு இருத்தால் ".ஏன் காலையிலே தேவை இல்லாமல் டென்ஷன் " என ..நான் அவர்களிடமிருந்து "லைக் " மட்டும் கொடுத்துவிட்டு கழண்டுவிடுவேன் !

                                                        குறிப்பாய் காலையில் குறும்படம் பார்ப்பதில்லை ! ஏனென்றால் என்னுடைய இணையர் மிக திறமையான புத்திசாலி அவர் வீட்டு வேலை செய்து கொண்டே என் பதட்டத்தை எளிதில் புரிந்துகொண்டு "ஏன் காலையிலே இது தேவையா ? " ஏன் உடனே விமர்சனம் எழுத வேண்டும் ? கண்டிப்பதல்ல ! கரிசனப்படுவார் . அப்படித்தான் காலை பொழுதும் தவிர்க்க வேண்டும் என நினைத்து மற்றவர்கள் பதிவை மட்டும் பார்ப்பது என முடிவெடுப்பேன் .
                             முகநூல் நண்பர் .திருமதி .மணிமேகலை அவர்களின் பதிவில் நெடுந்தீவு முகிலனின் "தோட்டி " குறும்படத்தை... பதிவேற்றிருந்தார்.இந்த பதிவையும் தவிர்க்கவே முயன்றேன் . ஆனால் அந்த கும்படத்தின் தலைப்பு என்னை அதிர செய்தது .

                                              "தோட்டி " இந்த வார்த்தை என் முகநூல் அறிமுகத்தில் என்னையே புரட்டிப்போட்ட சொற்றொடர் !...................... ஏனென்றால் என் வலைபதிவிற்கு (BLGGER )ஒரு பெயர் வைக்கவேண்டும் என்று முயன்றபோது " தோட்டி " என்று பெயர் வைக்கலாம் என்று நண்பனிடம் சொன்னேன் .. குப்பைக்கூட்டும் தொழிலாளி படத்தோடு வடிவமைக்கவேண்டிய என்னுடைய வலைபதிவு வடிவமைப்பை கேட்டு " நீ அந்த ஜாதிக்காரனல்ல ! குப்பை கூட்டுபவன் தாழ்ந்தவன் ,நீ தாழ்ந்தவனா ? நீயே உன்னை ஏன் தாழ்த்திக்கொள்ளவேண்டும் ? என்று கேட்டு ஏற்க மறுத்துவிட்டார்.

                                                         என் ஆலோசனையை ஏற்று வெளிநாட்டில் உள்ள முகநூல் நண்பர் " தோட்டி " க்கு உதவி செய்தார் என்பது வேறு விஷயம் ! அதன் பிறகு குப்பை கூட்டும் படத்தை எடுக்கச்சொல்லி ஒருசாரார் மல்லுகட்டினர் . முடிவாய் படமில்லாமல் "தோட்டி " தன்னாள் முடிந்த குப்பையை கூட்டிகொண்டிருக்கிறான் .

                                                          " தோட்டி " இது வார்த்தையல்ல ! வாழ்க்கை என்பதை உணர்ந்தேன் . எவ்வளவோ முற்போக்கானவர்கள் என்று காட்டிகொள்ளும் எங்களைப்போன்றவர்கள் இன்னும் " அம்பேத்கர் " என்ற பெயரை இன்னும் எங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டமுடியவில்லையே ? அது ஏன் ? இன்னும் எங்கள் ரத்தத்தில் கலந்துபோன சாதிய அணுக்களின் ஆதிக்கமேயொழிய வேறொன்றுமில்லை !

                                                  இந்த சூழலில்தான் திருமதி.மணிமேகலையின் பதிவு " யாரது " என்று என்னை திரும்பிப்பார்க்க வைத்தது. நான் எதிபாத்ததைவிடவும் ,நெடுந்தீவு முகிலனீன் " தோட்டி "இன்னும் ஆழமாகவே பதிவு செய்யப்பட்டுருக்கிறது ! அந்த குழந்தை நட்ச்சத்திரம் பசியை " (ஆகாய )தோட்டியை " விரட்டி வென்று இருக்கிறாள் !

                        ஈழத்தின் மிச்சசொச்ச ரத்தத்துளிகளின் கறைகள் போகவில்லை ! இன்னும் நிறைய "தோட்டிகள் " வரவேண்டும் ! விருதுகளுக்கல்ல.......ஈழ விடுதலை விழுதுகளுக்காக ......!






                             யாழ் தமிழ் மகள் மணிமேகலை தயாரிப்பில் நேற்று யாழ் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் வெளியிடப்பட்டட நெடுந்தீவு முகிலனின் 5வது குறும் படம் .தோட்டி"