Saturday 22 December 2018

அருந்ததியனின் விடுதலை..?

ஆதிதிராவிடர் ( பறையர் ) - அருந்ததியர் என்ற ஒடுக்கப்பட்ட மக்களிடையே மேலும் ,கீழுமாய் சாதிய பாகுபாடு இருப்பதும் , அதுவும் சனாதான சாதிய ஒடுக்குமுறையாக இருப்பதும் கண்டதும் ,கேட்டது.  முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள்  அதிர்ச்சி அடைந்தனர் . அது பொய்யாக இருக்க வேண்டும் என்று கூட நினைத்தனர்.

ஆதிக்க சாதிகளை போலவே தனக்கும்  கீழே ஒரு சமூகம் ( அருந்ததியர் ) இருக்க வேண்டும் என நினைக்கும் சாதிய படி நிலையை ஆதிதிராவிட ( பறையர் ) மக்களுக்கும் நிறுவி கட்டிக்காத்து வரும் மனுதர்ம இழிநிலை சேரிக்குள்ளும் கடைபிடிக்கப்படுகிறது.

அதை உடைத்தெரிய ஆதித்தமிழர் பேரவை
போன்ற அமைப்பின் மூலம் நடைபெற்ற
போரட்டங்களே வெளி உலகிற்கு கொண்டு
வந்து இருக்கிறது.

அதில் குறிப்பாய் மதுரை #சந்தையூரில் அருந்ததிய மக்களுக்கு எதிராக #அவமானசுவர் " கட்டப்பட்டதும், அதை எதிர்த்த போராட்டமும் ,அதை கட்டிக்காக்க ஆதிதிராவிடர்கள் ( பறையர் ) உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தோற்று போனதும் சாதிய படிநிலையின் கடைகோடியில் அடுக்கப்பட்ட மூட்டையில் அடி மூட்டையாய் அருந்ததியர்கள் தான் இருக்கிறார்கள் என்பதும் தீண்டாமை கொடுமை அவர்கள் மீதும் கடைபிடிக்கப்படுகிறது அம்பலப்பட்டு போனது.

ஆதிதிராவிடர்கள் - அருந்ததிய மக்கள் மீது தொடுத்த சாதிய ஒடுக்குமுறையை ஒரே சமூகத்துக்குள் நடக்கும் "சிறுமோதல் " என்று மூடிபோட்டும் மூடமுடியாமல்போனது

ஆதிதிராவிட மக்கள் , அருந்ததிய மக்கள் மீது தொடுத்த சாதிய ஒடுக்குமுறையை கண்டித்தவர்களை , அருந்ததிய மக்களின்
போராட்டத்தை ஆதரித்தவர்களை ,
பிளவுவாதிளாகவும் , சாதி வெறியர்களாகவும் சமூக விரோதிகளாகவும்
சித்தரிக்கப்பட்டார்கள்.

சித்தரசூர் , பெண்ணாடம் , மதுரை சந்தையூர்அருகம்பட்டு தொடங்கி விழுப்புர மாவட்டத்தில் அருந்ததிய மக்கள் மீது  நடைபெற்ற தொடர்தாக்குதல்கள் , வன்முறைகள் யாவும் ஆதிதிராவிட மக்கள் தான் செய்து வருகிறார்கள் என்ற உண்மை வெளியே வந்த போதுதான் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் தீண்டாமை கொடுமையை அவர்களும்கடைபிடிக்கின்றனர் என்ற போது சாதிய படிநிலை கொடூரம் வெளிப்படையாக தெரிந்தது.

இதையெல்லாம் பேசுவதும் ,எழுதுவதும்
பிரித்தாள்வதோ ? ஒரு சார்பு நிலையோ அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சாதிய படிநிலையின் ஒடுக்குமுறையை எந்த மட்டத்தில் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டும் .அது இனியும் தொடராமல் தடுக்கப்பட வேண்டும் .

அதற்கு இடதுசாரி இயக்கங்களின் தலையீடும் போராட்டங்களும் போதுமானதாக இல்லை.
திரு .அதியமானின் ஆதித்தமிழர் பேரவை
குறிப்பிட்டு சொல்லும் படியான தலையீடும்
போராட்டமும் செய்து வருகிறது என்பது
பாரட்டதக்கது..



Saturday 1 December 2018

கறுப்பு ....நீலம் ...சிவப்பு ...?


கறுப்பு ,நீலத்தைப்போல
சிவப்பு என்பது வண்ணம் அல்ல...!
அது ஒரு சித்தாந்தந்தம் .
சித்தாந்தம் ஒருபோதும் வெற்று அடையாளமாய் வண்ணத்தோடு
வண்ணமாய் கலப்பது அல்ல...

மனிதனுக்கு மனிதன் பிறப்பால்,
நிறத்தால் , மொழியால் ,எல்லையால்
வேறுபாட்டை ஏற்காத தத்துவம்.

மனிதனுக்கு மனிதன் நேசிப்பையும் ,
அன்பையும் ,எல்லோரும் எல்லமே
 சரிநிகர் சமானமென சமத்துவத்தை
 நிறுவிய தத்துவம்தான் மார்க்சியம் .

மார்க்சியம் படிக்கக்கூட வேண்டாம்
அதை படித்தவர்களின் வழிகாட்டுதலில்
 நடந்தாலே போதும்.

ஆனால் அங்குதான் பிரச்சனையே...!
வழிகாட்டுவோர் தட்டுத்தடுமாறி போனதால்
எல்லாமே தலைகீழ் பிம்பமாகி போனது.

அம்பேத்கரை ,பெரியாரை பேசினால் ,எழுதினால்...? தப்பேதுமில்லை
அவரின் ஆதரவாளர்களை அணிதிரட்ட முடியும் என்று நினைத்து போட்ட
கணக்குதான் தப்பாகி போனது.

வர்க்க போராட்டத்தின் மூலமே
அனைத்தையும் ஒழிக்க முடியும்
என்ற அடிப்படையே மாற்றி அமைத்து
அம்பலப்பட்டு போனது ...!

சிவப்பு சிந்தனையில் திரட்டப்பட்டோருக்கு
 நீல சட்டையையும் , கறுப்பு சட்டையையும்
அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.

சட்டையே இல்லாத வெற்று உடம்பாக வந்தவனுக்கு , சிவப்பு சட்டையை போட்டு
மனிதனாக்கிய நீங்களே அவனை
மீண்டும் நீலத்துக்கும் ,கறுப்புக்கும்
மாற்றுவது மூட நம்பிக்கை இல்லையா ...?

ஒடுக்கப்பட்டோர் விடுதலையும் ,
கடவுள் மறுப்பும், , பாலின சமத்துவமும்
மார்க்சியத்தின் உள்ளடக்கமா இல்லையா ...?

முழுக்க முழுக்க விஞ்ஞானம் தான் இயக்கவியல் ..
அதன் சமூகவிஞ்ஞான தத்துவம் தான் மார்க்சியம் ...

அந்த மார்க்சியத்தை படித்தவர்களும் ,
அதை உள்வாங்கியவர்களும் ,
உரக்க சொல்லும் வார்த்தை ....

லால் சலாமும் ,ஜெய் பீம்..மும்
கறுப்பும் , நீலமும் கலக்க வேண்டுமாம்...?

மூட நம்பிக்கையில் முத்து எடுப்போர்...!