Tuesday 13 May 2014

தேசிய இன சுய நிர்ணய உரிமை !

        

                     பொது உடமை இயக்கத்தை கட்டும்போது மண்ணுக்கேத்த அணுகுமுறை- வேலை திட்டம் வேண்டுமேயொழிய மண்ணுக்கேத்த மாக்சியமல்ல...!
மாக்சிய சித்தாந்ததின் ஆணி வேர் சமரசமற்ற வர்கபோராட்டம்தான்
அதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது . நிற்க ...
வர்க்க போராட்டத்தை முன்னெடுத்து செல்லும்போது தடையாக
இருபவகளை உடைத்தெரியாமல் வர்க்க போராட்டத்தை முன்னெடுத்து
செல்ல முடியாது என்பதற்கான உதாரணம்தான்

                          இந்தியாவில கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் ஏற்ப்பட்ட தேக்கம் . உதாரணமாக இந்தியாவில் சாதியம் மிகபெரும் தடையை உள்ளது ...
இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் ஆளுக்கொரு நிலை எடுத்தார்கள்
அதில் ஒரு சில நக்சல் அமைப்புகளைத்தவிர மற்ற இயக்கங்கள்
" வர்க்க போராட்டத்தை முன்னேடுத்தாலே சாதிய முரண்பாடுகள் ஒழிந்து விடும்..." ! என்று சொன்னார்கள் ..... என்னாச்சு நிலைமை தலைகீழானது !

                                  அதன் பிறகே வர்க்க போராட்டத்தையும் - சாதி ஒழிப்பு போராட்டத்தையும் சமமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்துள்ளார்கள் ! " வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதியே சாதிய ஒடுக்குமுறை எதிர்த்த போராட்டம் !என்று பார்க்க தவறினார்கள் ..

                                                      அதை பின்னாளில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள்
உள்வாங்கி வர்க்க போராட்டத்தோடு .சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான
போராட்டத்தையும் இணைத்தே முன்னெடுத்து செல்கிறது .
இது மண்ணுக்கேற்ற மாக்சியமல்ல !

                               அதுபோலத்தான் இலங்கையில் வர்க்க போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் தோழர் .சண்முக தாசன் ஒரு நிலையிலும்
தோழர் .செல்வநாயகம் என்ற செல்வா ஒரு நிலையிலும் எடுத்து சென்றார்கள்
                                   அங்கே பேரினவாதம் தலை தூக்கியது அதை எதிர்கொள்ள அங்கே இருந்த இடதுசாரி இயக்கம்" தேசிய இன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நடத்திட பறந்து பட்டசிங்கள -தமிழ் மக்களை இணைத்து கொண்டு செல்வதில் தவறி உள்ளது . அதன் விளைவு இலங்கையில் உள்ள இடது சாரி இயக்கங்கள் பேரினவாத வலையில் சிக்கிகொண்டது
.           அதற்க்கு கொள்கையற்ற  சிறுபான்மை ஆயுத போராட்ட கும்பலும் வழி வகை செய்தது .தேசிய இன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அதனால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது

 .