Saturday 11 February 2017

தேவரின் ...தங்க ஈட்டிகள் !




விடுதலைப்போராட்ட வீரர்களை
பொதுவில் நினைவுபடுத்தி ...
அவர்களுக்கான விழாவை
அனைத்து சமூகத்தினரும்
கொண்டாட தவறியதன்
விளைவு .....?

அம்பேதகர் - தலீத் தலைவராகவும்
வஉசி - பிள்ளைமார் தலைவராகவும்
வாஞ்சிநாதன் - பிராமணாள் தலைவராகவும்

காந்திஜி - செட்டியார் சங்க தலைவராகவும்

சிரவேலர் - மீனவர் சங்க தலைவராகவும்

முத்துராமலிங்கதேவர் - தேவர் சங்கத்தளைவராகவும்
அந்தந்த சமூக மக்கள் கையில் எடுத்துகொண்டார்கள்
இது யாருடைய தப்பு ?

இதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது
அதைவிடுத்து ..வியாக்கானம் பேசுவது ,
முறையுமல்ல ... சரியுமல்ல ...

காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று
தேவர் அவர்கள் தலைமையேற்று
அரிஜன மக்களை மதுரை மீனாட்சியம்மன்கோவிலில்
" ஆலைய பிரவேசம் " செய்த
ஒரு மகத்தான தலைவர் முத்துராமலிங்கதேவர் !

அந்தகாலத்தில் வேறு எவர் இதை செய்து இருந்தாலும் ,
நூற்றுக்கணக்கில் தலைகள் உருண்டு இருக்கும் !

இன்று...வரலாறு தெரியாமல் தென்மாவட்டங்களில்
தலீத் - தேவர் இன மக்களும் மாய்த்துக்கொள்வது
தேவருக்கு செய்யும்
 மிகபெரிய துரோகம் !

இன்றைய தலைமுறையினர் வேண்டுமானால்
மரம் வெட்டிகளும் - மகத்தான தேவரும் ஒன்றுதான்
தேவரின் ...தங்க ஈட்டிகள் !என்று வாதிடலாம் ....

வரலாற்றை எவராலும் மறைக்க முடியாது !
அன்று ஆலையபிரவேசம்
 செய்த " தேவர் "
தனக்கு பிற்காலத்தில் தங்க கவசம்
பொடுவார்கள் என்றா ? போராடினார் !

போதும் ...போதும் ... போதும்
இத்தோடு நிறுத்துங்கள்
உங்கள் தங்கமும் -தங்க ஈட்டிகளுமாய்
தேவரை குத்துவதை நிறுத்துங்கள் ...!

மதுரை மண்ணில் ...
இன்னும் சிகப்பு சிந்தனை மரித்துபோகாமல்
இருக்கிறது என்று சொன்னால்
அன்றைய தேவரும் ,தேவர் வழிவந்த
அய்யா நல்லக்கண்ணுவும் 
 "தேவர்"ஜாதி சங்க
தலைவர்கள் இல்லையே ?

விடுதலை போராளிகளை ஓட்டுக்காக
யார்வேண்டுமாலும்....
சங்க உறுபினறாக்கிகொள்ளட்டும் !
படித்த நீங்கள் ...படுகுழியில் வீழாதீர் ...




விடுதலைப்போராட்ட வீரர்களை
பொதுவில் நினைவுபடுத்தி ...
அவர்களுக்கான விழாவை
அனைத்து சமூகத்தினரும்
கொண்டாட தவறியதன்
விளைவு .....?

அம்பேதகர் - தலீத்  தலைவராகவும்
வஉசி - பிள்ளைமார்  தலைவராகவும்
வாஞ்சிநாதன் - பிராமணாள் தலைவராகவும்
காந்திஜி - செட்டியார்  சங்க தலைவராகவும்
சிங்காரவேலர் - மீனவர் சங்க தலைவராகவும்
முத்துராமலிங்கதேவர் - தேவர் சங்கத்தளைவராகவும்
அந்தந்த  சமூக மக்கள் கையில் எடுத்துகொண்டார்கள்
இது  யாருடைய தப்பு ?
இதில் எல்லோருக்கும் பங்கு  இருக்கிறது
அதைவிடுத்து ...வியாக்கானம்  பேசுவது ,
முறையுமல்ல ... சரியுமல்ல ...

காந்திஜியின்  வேண்டுகோளை ஏற்று
தேவர் அவர்கள் தலைமையேற்று
அரிஜன மக்களை மதுரை மீனாட்சியம்மன்
கோவிலில் " ஆலைய பிரவேசம்  " செய்த
ஒரு மகத்தான தலைவர் முத்துராமலிங்கதேவர் !
அந்தகாலத்தில் வேறு எவர் இதை  செய்து  இருந்தாலும் ,
நூற்றுக்கணக்கில் தலைகள்  உருண்டு இருக்கும் !

இன்று...வரலாறு தெரியாமல்  தென்மாவட்டங்களில்
தலீத் - தேவர் இன மக்களும் மாய்த்துக்கொள்வது
தேவருக்கு  செய்யும் மிகபெரிய  துரோகம் !

இன்றைய தலைமுறையினர் வேண்டுமானால்
மரம் வெட்டிகளும் - மகத்தான தேவரும் ஒன்றுதான்
என்று வாதிடலாம் ....
வரலாற்றை எவராலும் மறைக்க முடியாது !
அன்று ஆலையபிரவேசம் செய்த " தேவர் "
தனக்கு பிற்காலத்தில் தங்க கவசம்
பொடுவார்கள் என்றா ? போராடினார் !

போதும் ...போதும் ... போதும்
இத்தோடு நிறுத்துங்கள்
உங்கள் தங்கமும் -தங்க ஈட்டிகளுமாய்
 தேவரை குத்துவதை நிறுத்துங்கள் ...!

மதுரை மண்ணில் ...
இன்னும் சிகப்பு சிந்தனை மரித்துபோகாமல்
இருக்கிறது என்று சொன்னால்
அன்றைய தேவரும் ,தேவர் வழிவந்த
அய்யா நல்லக்கண்ணுவும்  "தேவர்"ஜாதி சங்க
தலைவர்கள்  இல்லையே ?

விடுதலை போராளிகளை  ஓட்டுக்காக
யார்வேண்டுமாலும்....
சங்க உறுபினறாக்கிகொள்ளட்டும் !
படித்த நீங்கள் ...படுகுழியில் வீழாதீர் ...
..........மணிவண்ணன் ...புதுச்சேரி

Monday 6 February 2017

மீண்டும் விடியல்...

சோகத்தையும் ,
சுகத்தையும் கூட
யாரோடையும் பகிர்ந்துகொள்ள
முடிவதில்லை...!

கேட்போர்
நம்மீது எடுத்துக்கொள்ளும் அக்கரை ...
வேறு ஒரு சிந்தனைக்கு
எடுத்து செல்கிறது .

அது சரிதான்
என்று அவர்களோடு
போகவும் முடியாமல் ...

தப்பென்று
உதறித்தள்ளவும் முடியாமல் ...?

மீண்டும்...
மீண்டும்....
சரிகட்டலிலே ஓய்ந்து போனது
வாழ்க்கை...!

 இவர்களைப்போல யாரும் வாழ முடியாது..!
என்று எல்லோரும் பாராட்டும்போது....
எல்லாமே புதைந்து போகிறது..!

மீண்டும் விடியல்....சூரியன் ....
இரவு....நிலா....வானம்....!


Friday 3 February 2017

காலம்...

இப்படியே...
காலமும், நாமும்
கடந்து போகிறோம்.
மாற்றி யோசிக்க முடியாமல்....

எல்லா மாற்றமும்
முன்னோக்கியே
இருப்பதில்லை.
தலை கீழ் பிம்பங்களை
தினமும் சந்திப்பதால்...!