Monday 6 February 2017

மீண்டும் விடியல்...

சோகத்தையும் ,
சுகத்தையும் கூட
யாரோடையும் பகிர்ந்துகொள்ள
முடிவதில்லை...!

கேட்போர்
நம்மீது எடுத்துக்கொள்ளும் அக்கரை ...
வேறு ஒரு சிந்தனைக்கு
எடுத்து செல்கிறது .

அது சரிதான்
என்று அவர்களோடு
போகவும் முடியாமல் ...

தப்பென்று
உதறித்தள்ளவும் முடியாமல் ...?

மீண்டும்...
மீண்டும்....
சரிகட்டலிலே ஓய்ந்து போனது
வாழ்க்கை...!

 இவர்களைப்போல யாரும் வாழ முடியாது..!
என்று எல்லோரும் பாராட்டும்போது....
எல்லாமே புதைந்து போகிறது..!

மீண்டும் விடியல்....சூரியன் ....
இரவு....நிலா....வானம்....!


No comments:

Post a Comment