Tuesday 19 February 2013

அப்சல் குருவின்..... கல்லறையின் நடுகல் !


             

                          அன்று முதல் இன்று வரை படுகொலைக்கு பிறகே பரிசீலனை நடைபெறுகிறது . அப்படித்தான் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பிறகே ஜனநாயகத்தின் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது ! மக்களுக்காக மக்களே ஆள்வதே ஜனநாயகம் ! என்றெல்லாம் அரசியல் சட்டத்தில் எழு த்தப்பட்டாலும் ஆட்சி ஜனநாயகவாதியின் கையில் இருந்தால்தான் அது சரியாக பராமரிக்கப்படுமென்று வாதமும் மறுப்பதற்கில்லை .

                             பயங்கரவாதம் எங்கிருந்து வந்தாலும் அதை தடுக்கவேண்டும் அதை தடுக்கும் போதுகூட தனி நபரைப்போல தடி எடுப்பவனெல்லாம் தண்டல்காரனாக மாறிவிடுவதல்ல ஜனநாயகம் .நூறு கோடிக்கு மேல் வாழும் மக்களை ஆட்சி செய்யும் அரசு தனி நபர் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட அரசாக இருக்கமுடியாது .இருக்கவும் கூடாது
குற்றவாளிக்கு சட்டம் அளித்துள்ள உரிமை மேல் முறையீடு , மரணதண்டனை அளிக்கும்போது கடைபிடிக்கப்படும் சட்ட முறைமைகள்,
குற்றவாளியை இறுதியாய் சந்திக்க குடும்பத்துக்கு கொடுக்கும் வாய்ப்பை கூட மறுப்பது என்றெல்லாம் ஜனநாயக உரிமையை நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையால் சுருட்டி குப்பையில் எறிந்துவிட்டு ,இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலை தார் பூசி அழிக்க முடியாது

                      ஜனநாயக உரிமைகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதன் மூலமே ஜனநாயக நாடாக ஆள முடியுமேயொழிய சர்வாதிகாரமும் ,சர்வாதிகார மனப்பான்மையையும் அடித்தளமிட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது . எதிரியை பயமுறுத்த எதிரில் நிற்கும் நாயை வெட்டுவதைப்போல பயங்கரவாதத்தை தடுக்க அரசின் படுகொலை தீர்வாகாது .

                                   ஜனநாயக ஆட்சியின் நிர்வாகம் கடைகோடி மனிதனுக்கும் வெளிப்படை என்பற்காக "தகவலறியும் சட்டம் " என்ற புரையோடிய ஜனநாயக புண்ணுக்கு பூசிய புனுகும் அப்சல் குருவின் விஷயத்தில் பொய்யாகி போனது .

                                               கடந்த மூன்று மாதங்களில் கசாப் , அப்சல் குருவின் மரணதண்டனைகள் " மாண்டோழிக மரணதண்டனை" என்ற கோஷம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்பதும்,மரண தண்டனை குறித்து நாடு முழுவதும் விவாதிக்க வேண்டுமென்பதும் மனித உரிமை குறித்த விவாதமாக்கப்பட்டுள்ளது . கடுமையான சட்டங்களால் கடுமையான குற்றங்களை தடுத்துவிடலாம் என்று மரணதண்டனை மூலம் ஆட்சிநடத்துவது மன்னராட்சியெயொழிய மக்களாட்சியல்ல !

                        ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களின் ஆட்டிவிக்கப்படும் பாவைதான் அதிகார பீடங்கள் மற்றும் அரசு எந்திரங்கள் என்பது அடிமட்ட பாமரன் மனதில் ஆணிவேராய் ஆழப்பதிந்துள்ளது .


       "இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
         கெடுப்பா ரிலானுங் கெடும் "
                                                                               என்ற --பொய்யாமொழிக்கேற்ப

                         ஆட்சியை ஆதரிப்போரும் ,எதிர்ப்போரும் மரணதண்டனை பற்றி அரிச்சுவடி பாடம் எடுத்துக்கொண்டிடுக்கிறர்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை . இறுதியாய் ஒன்றைமட்டும் நினைவில் நிறுத்துவோம் " பழிக்கு பழி , ரத்தத்துக்கு ரத்தம் , கொலைக்கு கொலை என்பதெல்லாம் நாகரிக மனிதனுக்கு ஏற்றதல்ல .............................அதே காட்டுமிராண்டித்தனத்தை ஒரு நாடு செய்கின்றதென்றால் ................?

                     "இனியொருமுறை இத்தவறு நிகழாதிருக்கட்டும் "

             

இன்று அப்சல் குருவின் கல்லறையிலும் அதே கல் நட வேண்டிய தேவை இருக்கிறது !
              இரண்டாம் உலகபோரின் இறுதியில் அமெரிக்க கையில் வைத்திருந்த அணுகுண்டை ஹிரோஷிமா -நாகசாகி மீதுசோதித்து பார்க்க வீசிய இடத்தில் மாண்டவர்களின் நினைவாக நடப்பட்டுள்ள நடுகல்லின் வாசகம் ! இது .
-----     




                  அப்சல் குருவின்   மகன் மற்றும் மனைவியுடன் தாய்
                                                                                                                                   


                                                                                                                       
                        

Saturday 9 February 2013

காதல் உடலல்ல ...அது உணர்வு !

   ,               எல்லா ஜீவராசியும் அதன் இனத்தை இனவிருத்தி செய்ய வேண்டும் என்பதுதான் ஜீவித கடமை ! அதை எல்லா உயிர்களும் செய்கின்றன அது அந்த உயிரின் விருப்பு -வெறுப்பின் படி நடப்பதல்ல ! இயற்கையின் கடமை அது நடந்தே தீரும் . அப்படித்தான் மனிதனும் தோன்றியதிலிருந்து இன்றுவரை ஆண் - பெண்ணையும் , பெண் -ஆணையும் ஈர்க்கப்படுகிறது ! அப்படி ஈர்ப்பு நடைபெறும்முன்பு இணக்கமான செயல்கள் நடைபெறும் அந்த செயல்களை மற்ற உயிரினங்கள் அதை அடையாளப்படுத்துவதில்லை !
                                  மனிதன் மட்டும் அந்த செயலை அடையாள படுத்துவதோடு அதற்கு "காதல் " என்ற பெயரும் வைத்துவிட்டான் . அது தவறென்றோ ? கூடாதென்றோ ? சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை ! அது அந்த இரண்டு உயிர்கள் சம்மந்தப்பட்டவை . இதில் எவரும் தலையிட கூடாது, இல்லை ...இல்லை ...தலையிடுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்று வாதிடுவோர் .. 18 வயதுக்கு குறைவானவர்களை சிறுவர்கள் என்று சட்ட வரம்பை காட்டுவதும் ,வயது வந்தவர்கலென்றால் சாதி -மதங்களையும் சாட்சிக்கு கூப்பிடுவதும் அதை காட்டி காவு வாங்குவதும் காலங்காலமாய் நடந்துவருகிறது . இவ்வளவு செய்தும் காதலர்கள் அழிந்தார்கலெயொழிய காதல் அழியவில்லை ! காதல் உடல் மட்டும் சம்மந்தப்பட்டதல்ல ...... ஆண் - பெண் உயிரின் உணர்வு  சம்மந்தபட்டது .அது ஒருபோதும் அழியாது !
                                     ஆதிகால ஆதிவாசி சமூகம் , ஆண்டான் அடிமை சமூகம் , நிலஉரிமை சமூகம் ,ஆலைஉடமை சமூகம் ,இன்றைய ஆன்லைன் சமூகம் வரை ..........."காதல்" அழியவில்லை ! இனியும் அழிய வாய்ப்பில்லை ! ஏனென்றால் காதல் உடலல்ல ...அது உணர்வு  !







Tuesday 5 February 2013

தோழர் .எட்வின் அவர்களின் "நோக்குமிடமெல்லாம் ..." செய்தி கோவைக்கு விமர்சன கட்டுரை ...............


                     நன்றி ......தோழர் எட்வின் நல்ல செய்தியை பகிர்ந்து உள்ளீர்கள் . . ஒன்றை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் ,நீங்கள் சொல்லும் எல்லா நிகர்ழ்வுகளிலும் தலித் ஒரு அணியிலும் தலித் அல்லாதோர் ஒரு அணியிலும் இருந்துதான் இந்த கொடுமைகள் , நிகழ்வுகள் நடந்து இருக்கின்றது என்பதை மறக்க கூடாது . சாதியம் வெட்கமின்றி அம்மணமாக வருகிறது என்ற கோபாவேசம் மட்டுமே ஆறுதலையோ ,தீர்வையோ எட்ட முடியாது .தலித் அல்லாதோர் என்ற பட்டியல்தான் மிக ஆபத்தானது சாதிய மோதல் வரும்போதெல்லாம் தலித் மக்கள் மீது எந்த பகுதியில் எந்த சாதி பலமானதாக உள்ளதோ அந்த சாதிதான் மோதலைஉருவாக்கும் மற்ற சாதியினரை இணைத்துகொள்வார்கள் .
                                  1968-69ல் கீழ் வெண்மணியில் 42 உயிர்களை பலி கொண்ட நிகழ்வில் கூட சாதியைவிடவும் ஆண்டான் -அடிமை என்ற நிலபிரபுவத்துவ கோரமுகம்தான் வெளிப்பட்டது ஆனால் தருமபுரி உணர்த்தும் படிப்பினை வேறுவிதமானது இங்கே ஆண்டான் -அடிமையோ ,பெரும் முதலாளியோ இல்லை ஆனால் நிலபிரத்துவ குணம்... அதை நிலை நிறுத்தியது தலித் மக்களையொத்த உழைப்பாளிகள்தான் என்பது வேதனையிலும் வேதனை ! அவர்களை அரசியல் ஆதாயத்துக்காக சாதிய அரசியல்வாதிகள் திட்டம் போட்டு பயன்படுத்திகொண்டார்கள் அவர்களின் நிகழ்ச்சிநிரலை அனைத்து சாதியினரும் கலந்து கொண்டு அந்த கொடுமையை செய்துள்ளனர் .அப்படியானால் இந்த அனைத்து சாதியினரில் அனைத்து கட்சியினரும் இருந்தார்களா ? இல்லையா ? ......... இருக்கிறர்கள் ! அப்படி அனைத்து சாதியினரும் அங்கே கட்சி பாகுபாடிலாமல் தலித்தை எதிர்ப்பதற்கு..... ஒன்ரிணைவதால்தான் தமிழகம் முழுவதும் உள்ள சாதிய தலைவர்களை அவர்களால் ஒன்றிணைக்க முடிகிறது .
                இதில் கவனிக்க வேண்டியதும்,காரியமாற்ற வேண்டியதும் இவற்றை கருத்தில் கொண்டுதான் ........ எப்படி தேடியும் பதில் கிடைக்காத இந்த புதிரை உடைக்காமல் பட்டிமன்றமோ , கருத்தரங்கமோ ,கவியரங்கமோ நடத்தி பயனில்லை !இவற்றை அனைத்து கட்சியினரும் உணருவார்களா ? இதை போக்க அவர்கள் உடன்படுவார்களா ? இதுதான் நம்முன் இருக்கும் சவால் ! கருத்தரங்கம் நடத்தும் கட்சியிலிருந்து சாதிவெறியை தூண்டி அனைத்து சாதி தலைவர்களையும் ஒரே மேடையில் அமர்த்தும் கட்சி வரை அந்த தகுதி இல்லை ! கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் இதை கையில் எடுக்க முடியும் இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் , 
                                   கலப்பு மணம் புரிவோரும் ,சாதி மறுப்பவரும் ..சாதி மறுப்பு திருமணங்கள் நடந்து முடிந்த பிறகு தனக்கு பிறக்கும் குழந்தைக்கு சாதி இல்லைஎன்றோ, சாதி அடையாள மற்றவராகவோ வாழ முடிகிறதா ? என்பதை யோசிக்கவேண்டும் ! அதனால் அகமண முறை சரியென்று அர்த்தமல்ல ....அதை கடை பிடிப்பதற்கும் ,அதை எதிர்த்த போராட்டத்தை நடத்துவதற்கு ஒரு சாத்திய வட்டத்துக்குள் இருக்கும் சாதிய கட்சிகளால் நடத்த முடியாது , அதுவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே சாத்தியம் ! தர்மபுரி ,சேத்தியாதோப்பு சென்னிநத்தம் ,சிறுவத்தூர் இந்த வன்முறைகளுக்கும் கோகிலா --கார்த்திகேயன் வேறானது ! ஒடுக்கப்பட்ட சாதிக்குள்ளும் சாதிய படிமம் ஒருங்கமைக்கபட்டுள்ளது அதில் ஆட்டம் காணும்போது சாதி இந்துக்களிடம் என்ன விளைவுகள் ஏற்படுகிறதோ அதே விளைவுகள் ஒடுக்கப்பட்ட சமூக்கத்துக்குள்ளும் நடக்கிறது அதில் ஒரு எள்ளளவும் வித்தியாசமில்லை என்பதுதான் ,
                           பள்ளிநேலியனூர் நமக்கு உணர்த்தும் பாடமாகும் ! "எதையுமே படிக்காத பாமரத் தலித்துகள் ஜாதி பார்ப்பதில்லை எனவும், தங்களுக்கு யார் வேண்டுமானாலும் பெண் தரலாமென்றும் தங்களிடமிருந்து யார் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்று வீர வசம் பேசுவதை விட்டுவிட்டு கம்பீரன் போன்றோர் தங்கள் தளத்தில் தலீத் மக்கள் களத்தில் இறங்கிமாற்றம் காண போராடவேண்டும் .திராவிட இயக்கங்களோடும் ,இடதுசாரிகளோடும் இணைத்து கை கோர்த்து போராடுவதுதான் இன்றைய அவசிய அவசரம் ! 
                                                 நன்றி ! 

                                                                                                  க. மணிவண்ணன் . புதுச்சேரி