1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு தொப்பியும், அங்கியும் அடையாளப்படுத்தபட்டு இருக்கிறது .அரசியலுக்காக ............. இந்த தேசத்தில் இவைகளை அணிந்த அவர்களெல்லாம் அந்நியர்கள் என்றும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது . இடித்தவர்கள் அத்வானியின் வாரிசுகள்........! மோடியின் பங்காளிகள் ! என்பது யாரும் மறுக்க முடியாது . இதற்கு ஆதரவு கரமாகவும்,அடிகொலியவர்கள் அன்றைய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் என்பதையும் மக்கள் மறக்க வில்லை .
ஏறக்குறைய 21 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் அது நீறு பூத்த நெருப்பாக தொடர்கிறது .அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்த வேளையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருக்கும்போது மீண்டும் ஜாதிய தீயும் ,மத பேயும் மீண்டும் கிளப்பி விடுவதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது . அதுமட்டுமல்லாமல் வரப்போகும் நாடாளுமன்றதேர்தலுக்கான கருத்து பிரச்சாரத்தையும் இன்றே வலைதளத்தில் தொடங்கி விட்டார்கள் .
வேட்பாளர்கள் முதற்கொண்டு வாக்கு சேகரிப்பும் வலைதளத்தில் ஆள் தேர்வு செய்து அவர் மீது படிந்துள்ள கரையை அகற்றி ...ரத்தவாடை வராமல் இருக்க புனுகு பூசுகின்ற வேலையும் நடந்து கொண்டிருக்கிறது . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் " நல்லவர் " "நல்ல ஆட்சி " அதை தரப்போறவர் குஜராத் மோடி என்றும் சமூக வலைதளத்தில் வரிந்து கட்டிக்கொண்டு வாய் கிழிய பேசி வருகிறார்கள் . நரகலில் எப்படி நல்லரிசி போருக்க முடியும் ? எட்டிச்செடியில் எப்படி இலந்தன் பழுக்கும் ? எருமை மாடு ஏரோப்பிளான் ஓட்டுன்ன ...ஓட்டுமா ? ஆறறிவு படைத்த நாம் ஆராய வேண்டாமா ?
காங்கிரசும் - பிஜேபி அவர்களிடம் நாம் கேட்கும் கேள்வி !அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிற்பவர்கள்தானா ? வால் மார்ட்டை எதிர்ப்பவர்களா ? FDI-என்னும் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்ப்பவர்களா ? இவைகளுக்கெல்லாம் இந்த இரண்டு கட்சிகளின் ஒரே பதில் " இல்லை ! "என்பதுதானே ? இந்த நிலைமையில்தான் மோடி ! நல்லவர் வல்லவர் என்றெல்லாம் வலைதளத்தில் பரப்புரை ...... பஞ்சாயத்து ..!...
ஒரு கட்சி என்று சொன்னால் அதன் தலைமை அந்த கட்சியின் உயர் மட்ட தலைமையாக இருக்க வேண்டும் அப்படி இந்த இரண்டு கட்சிகளுக்கு இருக்கிறதா என்ன ? காங்கிரசுக்கு சோனியா ! பி ஜே பி க்கு அதன் தலைமை ஆர் எஸ் எஸ் தான் ! இதை யாராவது மறுக்க முடியுமா ? இல்லை மூடி மறைக்கத்தான் முடியுமா ?
இந்திய நாட்டை பற்றி அந்நிய நாட்டை சேர்ந்தவருக்கு என்ன தெரியும் ? இந்திய நாட்டை பற்றி காந்திஜியை கொன்ற கோட்சேவை .... பயிற்றுவித்த ஆர் எஸ் எஸ் க்கு என்ன தகுதி இருக்கு ?
இன்நிலையில்தான் நாட்டின் எந்தோ ஒரு மூலையில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் மத சாயமும் , குல்லாவும் அங்கியும் அணிவித்து குறுக்கு சால் ஓட்டுகிறார்கள் !
சமீப காலமாக வலைதளங்களில் வருகின்ற செய்தியும் , சொல்லப்படுகின்ற கதைகளும் ,சம்பவங்களும் இஸ்லாமியர்களையும் , ,கிருத்துவர்களையும் கொடுமையானவர்களாக , ஈவு இறக்கமற்றவர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் , சித்தரிகின்ற செய்திகளையும் ,பதிவுகளையும் வலைதளத்தில் பரப்பப்படுகின்றன . அதற்கு விபரமில்லாத ,அரசியலற்ற ஒரு சில இஸ்லாமியனோ ? கிருத்துவனோ ? வக்காலத்து வாங்கிவிட்டால் ? ஒட்டுமொத்த இஸ்லாமியனின் குரலாக ,கிருத்துவனின் குரலாக ஊதி பெருதாக்கப்பட்டு வருகிறது .!!
கடந்த காலத்தைவிடவும் நவீன வலைதளம் இந்திய நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்துவோரைவிடவும் ,சீரழிப்போரிடமே அதிகம் கையாளப்படுகிறது . அதற்கெல்லாம் அறிவு ஜீவிகள் என்ற படிப்பாளிகள் வாய் மூடி மௌனியாய் இருப்பதுவும் அபத்தம் !
ஒரு சில சம்பவங்களில் ஒரு இஸ்லாமியனோ ? ஒரு கிருத்துவனோ ? சம்மந்தபட்டு இருக்கலாம் அதுஅந்த தனி மனிதனின் ஒழுக்கம் சார்ந்தது ! அந்த சமூகம் சார்ந்தது அல்ல ! குற்றம் செய்தவன் எவனாக இருந்தாலு அவன் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்துக்கும் இடமில்லை !
குற்றத்தை காட்டி பெரும்பான்மை " நாம்" என்று சொல்லி ஓட்டு பொறுக்குவது எந்த வகையில் நியாயம் ? நன்றாக படித்தவர்கள் கூட இந்த சின்ன புரிதல் இல்லை என்று நினைக்கும் போது மதத்தை சொல்லி கொலை செய்யும் குற்றவாளியைவிடவும் மிக கொடூரமானவர்களாக தெரிகிறார்கள் !
மோடியல்ல ...எந்த தாடிக்கு கூட ஓட்டுகளை மிரட்டி ,பயமுறுத்தி ............பொறுக்கிகொள்ளுங்கள் . அதற்காக அண்ணன் - தம்பிகளாக - உறவுகளான வாழும் ஒரு சமூகத்தின் மீது கொலை பழி போடுவதற்கு ! நவீன அடிமைகளாக்க எந்த ஜனநாயகவாதியும் ஏற்க மாட்டான் !
---க . மணிவண்ணன் .. புதுச்சேரி .