Wednesday 28 December 2016

கிள்ளி விட்டு...



சத்தமில்லாமல்
சந்தடியில்லாமல்...

கிள்ளி விட்டு
கிட்டே நிற்கிறாய்.

அரவமற்ற இருட்டை போன்ற
வலைதளம் ஒன்றில்...


Monday 19 December 2016

வெற்று வார்த்தையில் ....

வெற்று வார்த்தையில்
நன்றி சொல்ல மனம் வரவில்லை ...!
---------------------------------------------------------


ஆண்டுகள் கடந்தால்...?
மரம் கூட வைரமாகிறது .ஆனால் ... மனிதன் .
மனிதனாக மாறவே இல்லை .

​சிந்தனையிலும் ,செயலிலும் ...நானும் அப்படித்தான்
மனிதனாக மாற முயற்சிக்கிறேன் .
எந்த ஜீவராசியும் ரத்ததானம் செய்வதில்லை .
எந்த விலங்கும் உறுப்பு தானம்
செய்த தில்லை .​

மனிதனாக முயன்றேன்
14 முறை ரத்ததானம் கொடுத்து ...
முழுமனிதனாக மாற முயல்கிறேன் .
உடல்தானம் செய்து ....

மண்ணில் மக்கும் உடலை
மாணவர்கள் ஆய்வுசெய்யட்டும் .
மாற்றத்திற்காக போராடியவனின்
உடலும் உயிரும் மரித்துப்போவதில்லை .

என் மீது பாசமும்,நேசமும் வைத்து
வாழ்த்திய உள்ளங்களுக்கு ...
வெற்று வார்த்தையில்
நன்றி சொல்ல மனம் வரவில்லை .

வாழும்போது ரத்ததானம் ,
வாழ்வுக்கு பின் கண்தானம் மட்டுமல்ல ...
உடலையும் தானமாக வழங்குங்கள் .
மற்ற உயிர்களிடமிருந்து வேறுபட்டு
மனிதன் என்பதற்காக ..
.