Saturday 8 August 2015

முகநூலில் .....!



நண்பர்கள் ...
நண்பர்களாக இருக்கவேண்டும் ..!
------------------------------------------

பரபரப்பு....
அரசியல்..பற்றியோ...
ஆட்சி மாற்றம் பற்றியோ...
அன்றாட நிகழ்வு பற்றியோ...
 தமது பக்கத்தில் பதிவிடும்  போதும்..

அதிகமாக...
உணர்ச்சிவசபடுகிறார்கள் ..!
அது அவர்கள்  மனதுக்கு மட்டுமல்ல ...
உடலுக்கும் நல்லதல்ல ...
இது  கிண்டல் அடிக்க அல்ல...!
உண்மை ...
இது ஏதோ ஒரு சிலர் மட்டுமல்ல ...
இவர்களைப்போல பலர் இருக்கிறார்கள் .

உண்மையாக ...
ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறவர்கள்
அப்படி பேசுவதாலேயே...
அவர்கள் நினைப்பதலேயே ....
 அத்தனையும் சரியென்று நினைக்கிறார்கள் .
அவர்கள் காட்டும் பாதையில்
பயணிக்கவேண்டும் என வாதிடுகிறார்கள் .

மாற்று கருத்துக்கோ ...
மாற்று சிந்தனைக்கோ ...
இடமில்லை என்பது போல பேசுவதும்,
சமூக விரோதியைப்போல சித்தரிப்பதும்
சகிக்க முடியவில்லை .

மாற்று கருத்துக்கு காதுகொடுப்பதும்,
மாற்று சிந்தனையை ஆக்கபூர்வமாக
எதிர்கொள்ளும், விவாதிப்பது
 சரியான பார்வை ..!
இவைகள் ....முகனூலில் உள்ள
படித்தவர்களிடமும் கூட இல்லை.

விஞ்ஞான ரீதியாக எல்லாத்துக்கும்
இரண்டு பக்கங்கள் இருக்கிறது ..
என்பதை ஏற்க மறுக்கிறார்கள் .....

ஒரு கருத்தின் மீதோ..
நிகழ்வின் மீதோ எதிரும் புதிருமான கருத்து
வந்தால்தானே...?
எது சரி என்று ஆய்வு செய்ய முடியும் .

 நான் நினைப்பதைத்தான்
மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதும் ,
நான் எழுதுவதைத்தான மற்றவர்களும்
எழுத வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்...? சமமாகும் ...?....

நம்மோடு ...
ஓரளவுக்கு ஒத்துபோகிறவர்களோடு தான்
ஒத்து போகமுடியும் .மறுப்பதற்கில்லை .
அதற்காக....
நமக்கு சரி நிகர் சமானமாக
யாருமே இல்லை.....என்ற முடிவில் பேசுவது
எழுதுவது முறையற்றது .

இவையெல்லாமே
முக நூல் நட்பை வளர்க்காது.
என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறோம் .
கண்மூடித்தனமாக ...
எனக்கு அது பற்றி கவலை இல்லை
என்போரை எதில் சேர்ப்பது...?
விடுவிப்பதே ....நலம்


No comments:

Post a Comment