Wednesday 2 November 2016

மறதியே உன்பேர்த்தான் " தமிழனோ ..? "

 



          கடந்த ( 2016 ) செப் - 22 ல் கோவையில் உள்ள சுப்ரமணியபாளையத்தில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று கொலை செய்து விட்டு ஓடிவிட்டதாக சொன்னார்கள் . மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ, தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என கூறியிருந்தார்.

              ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டன . முஸ்லீம் செல்போன் கடை அடித்து உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது . 20 க்கு மேற்பட்ட பஸ்கள் உடைத்து, எரிக்கப்பட்டன.துடியலூர் மகாலட்சுமி பேக்கரிக்குள் நுழைந்தும் சூறையாடினர். முஸ்லீம் பிரியாணி கடையை உடைத்து பிரியாணி குண்டானை காலி செய்தனர் .
முடிவில் அதே இந்து முன்னணியை சேர்ந்தவர்களே சசிகுமாரை வெட்டிக் கொன்றது அம்பலமானது .

           அரசு பஸ்சும் , முஸ்லீம் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டதில் பல கோடி ரூபாய்சேதமடைந்ததோடு வெறியாட்டத்தை நடத்தினார்கள் .இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்றார்கள் ..? மதவெறி பிடித்த இந்து முன்னணி மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ...? எல்லாவற்றிக்கும் சர்வரோக நிவாரணி நீதிமன்றம் என்று ஊடகங்கள் பறை சாட்டுகிறதே ...?

           இந்த கலவரத்துக்கு பொறுப்பான இந்து முன்னணி மீது அவர்களின் தலையீடு என்ன ...? காலம் கடந்தால் எல்லாம் மறந்துபோகும் என்ற கீழ்த்தரமான
நம்பிக்கைக்கு இன்னும் எத்தனை காலம்தான் தமிழன் உயிர் கொடுக்க போகிறானோ தெரியவில்லை.



No comments:

Post a Comment