Thursday 24 November 2016

புதுச்சேரி முதல்வருக்கு மனம் திறந்த மடல் ...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
என்ற வாக்கின் படி பெற்ற வெற்றியை
வாழ்த்துகிறேன் .

இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான்
வெற்றிபெறும் என்ற அனுமானம் சரியாகிப்போனது
என்று எல்லோரும் சொல்வதுபோல நானும்
சொல்லப்போவதில்லை.

அதிகாரத்தை கைப்பற்ற எல்லா பலத்தையும்
பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குள்
தள்ளப்படீர்கள் என்பதை உங்களை எதிர்த்த
கூட்டணி கட்சியினரின் பலத்திலிருந்து
அதுதெளிவாகிறது .

எந்த திறமையும் இல்லாமல் சாதியத்தை
மட்டுமே நம்பி ஆட்சி செய்து அதிகாரத்தை இழந்த
ரெங்கசாமியும் .அம்மா பாசறை அன்பழகனும் ,
மதவெறி பிஜேபியும் ஓரணியில் நின்று எதிர்த்தார்கள் .
அது வலுவான கூட்டணி என்பதை எவரும் மறுக்க முடியாது .

திமுக உங்களோடு நின்றாலும் அவர்களின்
பலம் எல்லோருக்கும் தெரியும் , தமிழகத்தில்
உங்களோடு இல்லாத சிறுத்தைகள் இணைந்தார்கள்
மதவெறி பிஜேபி ஆதரவாளர்கள் வென்று காலூன்ற
கூடாது என்பதற்க்காக ... மார்சிஸ்ட்டுகளின் கடுமையான
எதிர்ப்பையும் மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சி உங்களுக்காக
தனது தளத்தை மதச்சார்பற்ற சக்தி வெல்லவேண்டும் என்ற
தேசிய காணோட்டத்தில் நின்று களமாடியிருக்கிறார்கள்
என்பதை மறந்துவிடக்கூடாது .

வெற்றிபெற்றது பகீரத முயற்சியாக இருந்தாலும் ...
கடந்த கால ஆட்சிக்கு மாற்றாக இந்த ஆட்சி
இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு புதுச்சேரி மக்களின்
நீண்டகால எதிர்பார்ப்பு அதை நிறைவேற்றுங்கள் .

ராஜாவை மிஞ்சிய விசுவாசியாக ...மக்கள் பிரதிநிதிக்கு
இல்லாத ராஜமரியாதை தனக்கு இருப்பதாக அனைத்து
சட்ட மீறலையும் செய்து வரும் துணைநிலை ஆளுநரின்
தான்தோன்றித்தனத்தை பொதுவிவாதத்துக்கு முன்வையுங்கள் .

மாநில அந்தஸ்து, கடந்த கால மத்திய அரசு கடன் தள்ளுபடி ,
மத்தியஅரசின் மாநில அரசுக்கான மானியம் , மத்திய ,மாநில அரசு
நலத்தித்திட்டங்கள்,முறையான வேலைவாய்ப்பு , காலால் வரி வசூல் ,
வாராக்கடன் என அவசிய அவசரமான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது .

சீர்கெட்டு கிடைக்கும் அரசு நிர்வாகத்தை சரிபடுத்துவதன் மூலமே
உண்மையான மக்களுக்கான ஆட்சிமலரும் .அதற்க்கான முதற்படியாக
இந்த வெற்றியை கருதவேண்டும் என்பதே எமது மனம் திறந்த வேண்டுகோள்.
 .

No comments:

Post a Comment