Thursday 17 November 2016

கம்யூனிஸ்ட்டுகள் தவறும் போது....

கம்யூனிஸ்ட்டுகள் தவறும் போது
பாசிஸ்ட்டுகள் உருவாகிறாா்கள்....!
--------------------ரோசா லக்ஸம்பர்க்
உண்மை நிலைமையும் இதுதான் ..!

இந்திய கம்யூனிஸ்டுகளின்
அதி மேதாவி முட்டாள்த்தனத்தால்
தமது தளத்தை இழந்து இப்போ விழி பிதுங்கி
இங்கே நிற்கிறார்கள் .

ஜோதி பாசு மத்திய அரசில் பிரதமர் பதவி ஏற்கவேண்டுமென்று
இந்திய நாட்டில் உள்ள அரசியல் வாதிகள் ஒத்த குரலில்
சொன்னபோது ....?சிபிஎம் அப்போ இவர்களின் சித்தரகுத்த புத்தகத்தின்
( கட்சி திட்டம் , ) கடேசி பக்கங்கள் இடித்தது .அவர்கள் ஏற்கவில்லை .
அதனால் ஒட்டு மொத்த இடதுசாரிகளுக்கு உள்ள எதிர்காலத்தை
இழந்தார்கள் .


" இது இமாலய தவறு " என்று தோழர் ஜோதிபாசு சொன்னார் .
அது அப்போது எவர் காதிலும் விழவில்லை .

அதன் பிறகு அவர்களின் ( சி பி எம் )தங்களின் திட்டத்தை திருத்தி
சாரி மேம்படுத்தி ( வார்த்தை போடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே )
மத்திய மாநில அரசில் கிடைக்கும் வாய்ப்பை நிலைமைக்கேற்ப அங்கம்
வகிப்பது என்று திருவநநதபுரத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் ஏற்றுக்கொண்டனர் .

இப்படி மாநாடு நடத்தி கிழே சொல்லி முடிக்கும் வரை
அரசியல் என்ன அங்கே நிற்குமா...? என்ன ...
இப்போ மாநாடு கூடி ஒரு முடிவு எடுத்தாலும் ,
சென்ற மாநாட்டில் எடுத்த முடிவு அமலாக்கமுடியவில்லையே ...? .
.இதான்இன்றைய இடதுசாரிகளின் நிலைமை .பலமும் அதுதான் ...
அவர்களின் பலகீனமும் அதுதான் ...!

சிங்கூர் ,நந்திகிராம் பிரச்சனையில் முதலில் சிபிஎம்-கு அடிகொடுத்தது இவர்கள் சொல்லும் இடது சாரிகள் தான் ...! நெக்ஸலைட் ,டியூப் லைட் எல்லாம் மமதாவின் முந்தானையின் மறைவில் நின்றுகொண்டு சிபிஎம்மை அடித்து நொறுக்கினார்கள் . அது கண்டிக்கத்தக்க நடவடிக்கை என்றாலும் அது ஒட்டு மொத்த இடது சாரிகளுக்கு ஏற்பட்ட தடைக்கல் .திரும்ப இடதுசாரி ஒற்றுமை ,ஐக்கியம் .இதெல்லாம் வேற்று கோஷம் . சிபிஐ - சிபிஎம் இணைப்பு ...அதை இருவருமே சொல்கிறார்கள் .உண்மையிலே அது தேவை ...நல்லது ... நாம் அதை வரவேற்போம் .


ஆனால்....சமீபத்தில் சிபிஎம்-ன் முதுபெரும் தலைவர் பிரகாஷ் காரத் சொன்னார் ... "தங்கள் பலத்தை உயர்த்திக்கொண்டு இரு கட்சிகளும் இணைவதாம் ...? " இதுதான் உலக மகா ஜோக் ...!

எதிரியை வீழ்த்த போதிய பலம் இல்லாததால்தான்.....
இரு கட்சிகளும் பலகீனமாக இருப்பதால்தான் இரு கட்சிகளும் ஒன்றாக இணையவேண்டும் என்ற கோஷமே வருகிறது ...? இருவரும் பலம் பெற்றால்...? ஏன் இணையவேண்டும் ...? இது சிறுபிள்ளைக்கு கூட தெரியும் அவ்வளவு  பெரிய தலைவருக்கு தெரியவில்லையா ...?


முடிவாக இன்றைய தேவை ...இடது சாரி ஐக்கியம் ! ...
இது தனி நபர்களின் அபிலாஷையல்ல ...
கொள்கையற்ற பதவிக்கான ஆசையல்ல ...
இன்றைய அவசிய அவசர தொழிலாளிவர்கத்தின் தேவை .
இரு கட்சிகளும் உணரவேண்டும் .


அப்படி அது நடைபெற ஒவ்வொரு கட்சியின் பெரியண்ணன்
மனோபாவம் தூக்கி எரிந்து விட்டு ....! ஆக்கபூர்வமான விவாதத்தை
மேற்கொண்டு ஐக்கியத்துக்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்பதே முற்போக்குவாதிகளின் எதிர்பார்ப்பு . ...!


No comments:

Post a Comment