இன்னும்..நெருங்கிய படி
காற்றுக்கு மட்டுமல்ல ...
கனவுக்கும் இடமில்லை.
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஒலிகளை ...
காதுகள் கவ்விக்கொண்டன.
போர்த்திகொண்டது...இருள் ..!
எதுவும் தென்படவில்லை .
அடர்ந்த ரோமங்களை தவிர.....
ஆட்டுகிடாக்கள்
முறுக்கி விடுவதில்லை .
அடர்ந்து கிடப்பவையை...
அம்புகள்
அயர்ந்து கிடக்கின்றன .
அம்பூராதூனியில்..
வெற்றியும் இல்லை
தோல்வியும் இல்லை
விதைப்புகள் ....
No comments:
Post a Comment