Friday 11 November 2016

பெண்ணுரிமை பேசும் மூடநம்பிக்கைவாதிகள்...




உலகில் பிறக்கும் எவரும் ,
பிறக்கும்போதே சமத்துவ சித்தாந்தத்தை
உள்வாங்கிக்கொண்டு பிறப்பதில்லை .
இந்த ஆணாதிக்க சமூகத்தில் எல்லாமே
ரத்தத்தில் இரண்டற கலந்துவிட்டது .


அதை உடனடியாக சுத்திகரிப்பு பண்ணி
எடுத்துவிட முடியாது . அதை செய்யவேண்டும்
என்பதைத்தான் பொதுவுடைமைவாதிகள்
முயல்கிறார்கள் .சீர்திருத்தவாதிகளும் அதற்க்கான
செயற்பாட்டில் இயங்குகிறார்கள் .




பெண்ணுரிமை பேசுவபவர்கள்
எல்லோரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று
ஒரு மீட்டர் வைத்து பரிசோதனை செய்யமுடியாது .
அதனால் பேசுவது ஒன்றும் செயலில் ஒன்றுமாக
இருங்கள் என்று சொல்ல வரவில்லை .
பேச்சும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும்
என்பது சரிதான் ...!

அதுக்காக ஆண்கள் எல்லோரும்
சுத்தமில்லை .ஆண்கள் பேசினால் அது சுத்தமான
பெண்ணுரிமையாக இருக்காது என்ற தொனியில்
பேசுவதும்,எழுதுவதும் சாடுவதும் பித்துக்குளி நிலை
என்பதை இப்படி பேசும் ஒரு சில பெண்ணியவாதிகள்
உணரவேண்டும் .

பெண்ணாக பிறந்து பெண்ணுரிமை பேசுவோர்
மட்டுமே சுத்தம் சுயம்பிரகாசம் என்று நினைக்கும்
மூடநம்பிக்கைவாதிகளுக்கு பொருந்தும் .


No comments:

Post a Comment