Thursday 24 November 2016

அரிச்சுவடி .



ஊரெல்லாம் விஷக்காச்சல் வந்தால் ...?
அது நம்மையும் விட்டுவைப்பதில்லை.
அப்படித்தான் ஆணாதிக்க சமூக அமைப்பில்
அங்கும், இங்கும் , எங்கும் கட்டி அமைக்கப்பட்டுள்ள
பெண்ணடிமைத்தனம் விஷக்காச்சலைப்போல
எல்லோரிடமும் பரவி கொல்லுகிறது .


அதன் அடிப்படை ஆணிவேர் 
குடும்பத்திலிருந்து
தொடங்குவதால் அங்கிருந்தே 
அதை பிடுங்கி எறிந்திட
முயலவேண்டும் . 
பாலின சமத்துவத்தை பற்றி 
பேசுவதத்திற்கு முன்பு 
ஆணாதிக்க சமூகம் கட்டி அமைத்துள்ள 
ஆணாதிக்க வரம்புகளை 
உடைத்தெறிய வேண்டும் .

தன்னுடைய மகனுக்கு 
பெண் குழந்தைகளை பற்றி
சொல்லிக்கொடுப்பதும் , 
பெண்களின் பிறப்போடு
பின்னிப்பிணைத்திருக்கும் 
ஆண்டாண்டுகால 
ஆணாதிக்கஅடிமைத்தனத்திலிருந்து 
விடுதலை பெற தனது மகளுக்கு 
கற்றுக்கொடுப்பதும் 
பாலின சமத்துவத்துக்கான அரிச்சுவடி .


No comments:

Post a Comment