Saturday 19 November 2016

சிரிப்பு மன்னன் 23- ம் புலிகேசியின் ஆட்சியில் ...

முகேஷ்ஜி அம்பானியின் ஜியோ நிறுவனம் இலவசமாக
தன்னோடைய சேவையை தொடங்கி இருக்கு... இலவசமாக
எந்த முதலாளியாவது மக்களுக்குசேவை செய்ததாக கேள்வி
பட்டு இருக்கிறீர்களா ...?அந்த இலவச சேவைக்கு மக்களிடமிருந்து
ஆதார் அட்டையும் அதோடு கைக்குறியும் வாங்கி இருக்கிறார்கள் .
இதெல்லாம் எதற்க்காக ...?

தன்னிடம் இருக்கும் பணத்தை வெள்ளை நோட்டாக
மாற்றும் முயற்சியே இந்த இலவச சேவையின் பின்னால்
மறைந்து இருக்கும் நிஜம் . கொஞ்சம் பொறுத்து பாருங்கள்
எத்தனை ஆயிரம்கோடிகள் அந்த நிறுவனத்துக்கு வெள்ளை
பணமாக மாற்றப்பட்டு வரப்போகிறது என்று தெரியும்.

அதோடு கோடீஸ்வரர்கள் எவரும் வங்கிக்கு வரவில்லையே ...?
அவர்களிடம் பணம் இல்லையா ...? இல்லை இதற்குமுன்பே
அவர்கள் மாற்றிவிட்டார்களா ...? இந்த இரண்டு கேள்விகளுக்கு
பதில் உங்களுக்கு தெரியுமானால் என்னிடம் கேள்வி கேட்பதை
விட்டு விடுவீர்கள் .

நவம்பர் 8ந்தேதியன்று பிரதமர் 500 ரூபாய் ,
1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த அன்றைய தினம்
காருக்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் டெல்லி உள்ளூர்
பாஜக கிளையின் சார்பில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டு
இருக்கிறது .

நாட்டில் புழக்கத்தில் உள்ள 1,418 லட்சம் கோடியில்
வெறும் 0.028 சதவீதம் அல்லது 400 கோடி ரூபாய் தான்
கள்ள நோட்டுக்கள் ஆகும் இதை நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில்
அறிவித்து இருக்கிறார். 80 சதவீதம் அமைப்புசாரா தொழிலாளர்களை
கொண்ட இந்திய தேசத்தின் உயிரோட்டமே பண பொருளாதாரத்தில்தான்
இருக்கிறது .அப்டி இருக்கும் பொது பணமில்லாத பொருளாதாரத்துக்கு
எப்படி தாவி குதிக்க முடியும்...?

இந்தியாவில் வாழும் மக்களில் 46 சதவீதம் பேருக்குத்தான்
வங்கியில் கணக்கு இருக்கிறது . இணைய இணைப்பு
22 சதவீதம்பேருக்கத்தான் சென்றடைந்து இருக்கிறது .
எப்படி எல்லோரையும் கிரடிட் கார்டு ,டெபிட் கார்டுகளை கொண்டு
பண பரிவர்த்தனனை செய்ய சொல்ல முடியும் ...?

500 ரூபாய்களாக ,1000 ரூபாய்களாக பதுக்கி வைத்து இருக்கும்
பழைய முதலாளிகளுக்கு புதிய 2000 நோட்டுகளை கொடுத்து
பதுக்க வைக்கும் திட்டமேயொழிய வேறொன்றுமில்லை.

No comments:

Post a Comment