Tuesday 1 November 2016

மயிர்பிளக்கும் விவாதம்...




முக நூலில் நிறைய பெண்கள் இருந்தாலும்
ஒரு சில பெண் தோழர்களே பெண்ணியம் ,
ஆணாதிக்கத்தை எதிர்த்த பதிவுகளை பதிவிடுகிறார்கள் .
அவர்களிடம் ஒரு சிலர் இன்பாக்சில் போய்
கீழ்த்தரமாக பேசுவதாக ஒரு சிலர்
அவர்களின் பக்கத்தில் பதிவு செய்கிறார்கள் .

அப்படி இன்பாக்சில் கேவலமாக நடந்துகொள்பவர்கள்
எவராக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது .
அவர்களை பற்றி ரிப்போர்ட் அடிக்க முடியும் .
இல்லையென்றால் அவர்களை ஒரேயடியாக
நண்பர் பட்டியலிலிருந்து நீக்க முடியும் .
சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்க முடியும் .
அதை செய்யுங்கள். அதுதான் சரியாக இருக்கும் என
நினைக்கிறேன் . அதை விடுத்து வீணர்கள் செய்த
அநாகரீகத்தை மீண்டும் பதிவிட்டு காலத்தை
வீணடிக்கின்றனர் .

இப்படி சொல்வதால் ஆண்களுக்கு வக்காலத்து அல்ல .
எருமை மாடு சேற்றில் படுத்து உருண்டுவிட்டு
வழியே செல்லும் நம் மீது வாலில் உள்ள சேற்றை
வீசினால் ...? நாமும் சேற்றைவாரி அதன் மீது
வீசுவதல்ல . ஏன் இதை சொல்கிறேன் என்றால்
முற்போக்கான பெண்கள் ஒரு சிலரே முக நூலில்
இருக்கிறார்கள் .அப்படிப்பட்டவர்களின் சிந்தனையை
வேறு பக்கம் திருப்புவதற்கு இப்படிப்பட்ட வேலைகளை
அவர்கள் திட்டமிட்டு செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது .

வீணர்களிடம் வெட்டி,ஒட்டி மயிர்பிளக்கும் விவாதத்தை
நடத்துவதைக்காட்டிலும் பெண்ணிய ஒடுக்குமுறைக்கு
எதிரான கருத்து பிரச்சாரத்தை சமூக வலைதளத்தில் 
செய்ய வேண்டிய அவசர அவசிய தேவை இருக்கிறது 
என்பதை அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு 
வருகிறேன்.

No comments:

Post a Comment