Monday 19 December 2016

வெற்று வார்த்தையில் ....

வெற்று வார்த்தையில்
நன்றி சொல்ல மனம் வரவில்லை ...!
---------------------------------------------------------


ஆண்டுகள் கடந்தால்...?
மரம் கூட வைரமாகிறது .ஆனால் ... மனிதன் .
மனிதனாக மாறவே இல்லை .

​சிந்தனையிலும் ,செயலிலும் ...நானும் அப்படித்தான்
மனிதனாக மாற முயற்சிக்கிறேன் .
எந்த ஜீவராசியும் ரத்ததானம் செய்வதில்லை .
எந்த விலங்கும் உறுப்பு தானம்
செய்த தில்லை .​

மனிதனாக முயன்றேன்
14 முறை ரத்ததானம் கொடுத்து ...
முழுமனிதனாக மாற முயல்கிறேன் .
உடல்தானம் செய்து ....

மண்ணில் மக்கும் உடலை
மாணவர்கள் ஆய்வுசெய்யட்டும் .
மாற்றத்திற்காக போராடியவனின்
உடலும் உயிரும் மரித்துப்போவதில்லை .

என் மீது பாசமும்,நேசமும் வைத்து
வாழ்த்திய உள்ளங்களுக்கு ...
வெற்று வார்த்தையில்
நன்றி சொல்ல மனம் வரவில்லை .

வாழும்போது ரத்ததானம் ,
வாழ்வுக்கு பின் கண்தானம் மட்டுமல்ல ...
உடலையும் தானமாக வழங்குங்கள் .
மற்ற உயிர்களிடமிருந்து வேறுபட்டு
மனிதன் என்பதற்காக ..
.


No comments:

Post a Comment