Tuesday 6 August 2013

விமர்சனங்கள்........!


                               


                    .விமர்சனங்கள்....... வைரத்துக்கான பட்டைதீட்டலாக இருக்கவேண்டும் என்பது உண்மைதான் ! சில நேரங்களில் கண்ணாடிகளின் மீதும் விழுந்துவிடுகின்றன ! நாம் நேசிக்கும் நண்பர்கள் சமூக அழுக்குகளை தன் மீது சுமந்து வந்து சக நட்புக்கெல்லாம் சரியானவை என்று விற்கும்போது.............. விமர்சனத்தை முன்வைப்போரின் கோபம் தவிர்க்க முடியவில்லை ! 
                                           இன விடுதலை..... மனித நேயம் ..... பெண்ணிய பார்வை ....மதம் கடந்த நல்லிணக்கம் ....சுய மரியாதை..... தன்னொழுக்கம் என தன் நட்பிடம் தாம் எதிர்பார்த்த சமூக் அக்கறை இல்லையே ? என்றுணரும்போதும் ,இவைகயெல்லாம் கேளிகூத்தாக்கும்போதும் யோக்கியவானாக அல்ல .....அவர்களை யோசிக்க வைக்கவே விமர்சனகள் ஈட்டியகிவிடுகின்றன .                                                               எவ்வளவு மக்கட்டை வார்த்தைகளை போட்டாலும் வேகமாக வீசுவதால் வலித்துவிடுகிறது அவர்களுக்கு.... ! எப்படித்தான் கண்களை மூடிக்கொண்டு காதுகளை திறந்து வைத்தாலும் நாராசார வார்த்தைகளை எப்படி சகித்துக்கொள்ள முடியும் ? 
                                                உண்மைதான் நம்மீது அக்கறையுள்ள ,இதுநாள் வரை நம்மை நேசிக்கும் நட்பாயிற்றே ? என்று நினைக்கிறோம் ஆனால்.... அப்படி விட்டுவிடவும் முடியவில்லை ! தன் விரலேயானாலும் விழிகளில் படும்போது தடுக்கின்ற தன்னெழுற்சி தப்பாகுமா ? தப்பென்று நினைத்தால் அவர்களை தவறவிடுவதைத்தவிர வேறு வழி இல்லை !

No comments:

Post a Comment