இன விடுதலை..... மனித நேயம் ..... பெண்ணிய பார்வை ....மதம் கடந்த நல்லிணக்கம் ....சுய மரியாதை..... தன்னொழுக்கம் என தன் நட்பிடம் தாம் எதிர்பார்த்த சமூக் அக்கறை இல்லையே ? என்றுணரும்போதும் ,இவைகயெல்லாம் கேளிகூத்தாக்கும்போதும் யோக்கியவானாக அல்ல .....அவர்களை யோசிக்க வைக்கவே விமர்சனகள் ஈட்டியகிவிடுகின்றன . எவ்வளவு மக்கட்டை வார்த்தைகளை போட்டாலும் வேகமாக வீசுவதால் வலித்துவிடுகிறது அவர்களுக்கு.... ! எப்படித்தான் கண்களை மூடிக்கொண்டு காதுகளை திறந்து வைத்தாலும் நாராசார வார்த்தைகளை எப்படி சகித்துக்கொள்ள முடியும் ?
உண்மைதான் நம்மீது அக்கறையுள்ள ,இதுநாள் வரை நம்மை நேசிக்கும் நட்பாயிற்றே ? என்று நினைக்கிறோம் ஆனால்.... அப்படி விட்டுவிடவும் முடியவில்லை ! தன் விரலேயானாலும் விழிகளில் படும்போது தடுக்கின்ற தன்னெழுற்சி தப்பாகுமா ? தப்பென்று நினைத்தால் அவர்களை தவறவிடுவதைத்தவிர வேறு வழி இல்லை !
No comments:
Post a Comment