Sunday 4 August 2013

காட்டுமிராண்டிகள் ........!


                தஞ்சை பெரிய கோவிலில் புத்தபிசுகளை சிலர் தாக்கியதை கண்டு மனவேதனை அடைந்தேன் ! ஒரு தப்புக்கு ....ஒருதப்பு சரியல்ல ! இதை முட்டாள்தனமென்றனர் சிலர் .. இது முட்டாள்தனமல்ல ..............காட்டு கூச்சல் போடும் காட்டுமிராண்டித்தனம் ! தன் சட்டையை தானே கிழித்துகொள்ளும் பைத்தியக்காரத்தனம்..!....

இந்த காட்டு மிராண்டிகளும் ,பைத்தியங்களுமா ? ஈழத்தமிழர்களின் உரிமையை பெற்றுத்தரப்போகிறார்கள் ? அது ஒன்றுமில்லை .............அதைவிட கூத்து புத்த பிச்சை அடிப்பதை தடுக்கும் இளைஞனை பார்த்து " நீயெல்லாம் ஒரு அப்பனுக்கு பொறந்தவனா ? " என்று கேட்கிறான் .அதையும் அந்த பைத்தியங்கள் பதிவு செய்திருகின்றனர் .இவையெல்லாம் அரசியலுக்கு , விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுமேயொழிய வேறு எந்த பயனுமில்லை !

                  இந்த காட்டுமிராண்டித்தனத்தை படித்தவர்களும் ,பண்பாளர்களும் கண்டிக்கின்றனர் .. பத்திரிக்கையாளர் மனுஷிய புத்திரனுக்கு என்ன ஆச்சு?..........அவரை நல்ல விபரம் தெரிந்தவராகத்தானே பார்க்கிறோம் ! ச்சே .. .என்ன முட்டாள்தனம் ? அவரா இப்படி .உதாரணத்துக்கு .ஒரு சென்னைகாரர் தன் உறவினரை கொன்றுவிட்டார் என்பதற்காக ...... சென்னைலிருந்து வரும் அத்துணை பேரும் மோசமானவர்கள் என்றோ ? கொலைகார்கள் என்றோ தண்டிக்க முடியுமா ? இவயெல்லாம் பார்க்கும்போது ... என்ன இவர்கள் பத்திரிக்கையாளர்களா ? என்று என்ன தோன்றுகிறதே !

                 ஒரு பத்திரிக்கையாளன் என்பவன் நிர்வாகி போன்றவன் , ஒரு பத்திரிக்கையாளன் அமைப்பாளனை போன்றவன் , ஒரு பத்திரிக்கையாளன் புரட்சியாளனைப்போன்றவன் ........என்னென்றால் அவனிடம் இந்த சமூகத்தின் முக தோற்றத்தையே மாற்றக்கூடிய வலிமையான எழுதுகோல் என்ற ஆய்தம் இருக்கிறது . அந்த ஆயுதத்தை பிடித்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படலாமா ? அப்படி இல்லையென்றால் இந்த சமூகத்தை பின்னோக்கி செல்லத்தான் அவரின் அறிவும் ,ஆற்றலும் பயன்படுகிறதா? படித்தவர்களே இப்படி புரிந்துகொண்டால் .....படிக்காதவர்களின் நிலை என்ன ?
 
"படித்தவன் வாதும் சூதும்செய்தல் போவான் ,போவான் ஐயோவென்று போவான் !" என்று மகாகவி .பாரதி சொன்ன வரிகள்தான் நினைவுக்கு வருகிறது !





No comments:

Post a Comment