Sunday 4 August 2013



காதல் நாடகமா ? அரசியல் நாடகமா ?

              "எது கிடைத்தாலும் அதை பயன்படுத்து ! என்ற தாரக மந்திரத்தைத்தான் அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள் .அதில் பழைய ஆயுதம் ஊழல் ! புதிய ஆயுதம் காதல் !

                                         ஊழலையும் ,காதலையும் பொதுவாய் பார்த்தால் ஏதோ நியாயவாங்களின் நேர்மையான நீதி போதனை கதைகளைப்போல் தெரியும் ,ஆனால் உண்மை அதுவல்ல என்பது உற்றுநோக்குபவர்களுக்கே புரியும் ! " "எல்லா நதிகளும் கடலை நோக்கியே "என்பதைப்போல அரசியல் வாதிகளின் எல்லா செயல்பாடுகளும் வாக்குவங்கியைநோக்கியே இருந்துவருகிறது.

                                       ஒரு காலத்தில் தேசிய அரசியல் என்றால் மதமும் ,மாநில அரசியல் என்றால் இனமும் என்ற செயல்திட்டத்தை முன்வைத்து நடத்திய தேர்தல் பந்தயத்தில் அவர்களுக்கான முழு வெற்றியை பெறமுடியவில்லை என்பது உண்மை .ஆனால் மத அரசியலும் ,இன அரசியலும் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாவிட்டாலும் ,முற்றிலும் தோல்வியடையவில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை .இந்நிலையில்தான் தன்னுடைய செயல் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் .

                             தேசிய அரசியலில் "ஊழலற்ற நிர்வாகம் "என்ற கொஷமும் , மாநிலத்தில் இனமல்ல ,மொழியல்ல..... ஜாதி ! அதை பாதுகாப்போம் என்று சொல்லி சரித்திரத்தை தோண்டியெடுத்து தூக்கிலிடுகிறார்கள் !

                                         

No comments:

Post a Comment