Tuesday 13 August 2013

தமிழ்ச்செல்வியின் . ".குமரி "



எழுத்தாளர். தமிழ்ச்செல்வி அவர்களுக்கு ! வணக்கம் !
                                                       " குமரி "நல்ல சிறுகதை சொல்லப்பட்டவிதம் மிக அருமை .எண்பதுகளில் எழுத்தாளர்.சு .சமுத்திரம் அவர்களின் "வாடாமல்லி " என்ற நாவல் முதன்முதலில் படிக்க வாய்ப்புகிடைத்தது .படித்து முடித்த பின்பு பலநாட்கள் என்னால் தூங்க முடியவில்லை . அப்போழுதான் அரவாணிகளை பற்றிய என் கண்ணோட்டம் எவ்வளவு மோசமானதாகவும் ,கேவலமான புரிதலும் இருந்தது என்பதை நினைத்து வேதனைப்பட்டேன் .
                                                                         அதன்பிறகு அரவாணிகள் ( மனிக்கவும் இப்பொழுதான் திருநங்கை என்று குறிப்பிடுகிறோம் ) சம்மந்தமாக நிறைய தேடுதல் எப்பொழுது மனித சமூகம் தோன்றியதோ அப்பொழுதே ...ஆண் --பெண் ---அரவாணிகள் என மூன்றாம் இனமும் தோன்றி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன் .மகாபாரதத்தில் விராடபருவத்தில் அக்கியாதவாசத்தில் ஓர் ஆண்டுகாலம் அர்ஜுனன் அரவாணியாக வாழ்க்கை நடத்துவதும் ,அரவானுக்கு மனைவியாக மாறும் கிருஷ்ணன் அரவாணியாகமாறி திருமணம் செய்த அன்றே தாலி அறுப்பு நிகழ்வும் செவி வழி இலக்கியம் எழுத்துவடிவில் மகாபாரதமாக பரிணமித்த பின்னும் அதில் பதிவு செய்யபட்டிருக்கிறது . இது அரவாணிகள் பற்றிய அரிச்சுவடி துவக்கம் என்றாலும் ,அரவாணிகளின் நடப்பு அவர்களின் பிறப்பு .எப்படி ?. எங்கு ? தேடினேன் ........... எங்கோ நகரத்தில் ,பெருந்துகளில் ,சந்தைகளில் ,இரவு நேர கைதட்டல்களில் அவர்களை என்னால் மறக்க முடியவில்லை 
                                                            . ஏன்னென்றால் வளரிளம் பருவத்தில் இருக்கும் என் பையன் அரவாணியாக மாறமாட்டான் என்பது என்ன நிச்சயம் ? தன் மனைவியிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியவில்லை . இதுபற்றி... யாராவது இவர்கள் பற்றி எழுத மாட்டார்களா ? என்ற தேடுதலில் இருந்த பொழுதுதான் அரவாணிகள் பற்றி எழுத்தாளர் .அ .பிரேமா அவர்கள் நேரடி உரையாடல் கொண்ட சிறு பிரசுரம் வெளி வந்தது .அதில் ஆணாக பிரசவித்த அந்த ஜீவன் குரோமோசோம்கலின் மாற்றம் அவர்களின் அங்கத்தில் உள்ளதைக்கூட அகற்ற துடிக்கும் கொடுமையும் ,அவர்கள்உயிர் படும் அவஸ்த்தையும் பதிவு செய்யப்பட்டிருந்தது . 
                                                       அதன் பிறகு முற்போக்கு எழுத்தாளர்களின் சந்திப்பு எங்கள் ஊரில் நடந்தது ,அவர்களிடம் " என்னால் எழுத முடியாது நீங்கள் நிறைய இலக்கியங்களை கொடுக்கிறீர்கள் ,சாகித்திய அகாதமி விருதுகள் கூட பெறுகிறீகள் அரவாணிகள் பற்றி எழுதுங்கள் என்று கேட்டேன். இன்னும் ஒருபடி மேலே போய் தீண்டாமை பற்றியும் அதை போக்க போராடுவதாகவும் சொல்கிறிர்கள் ,உண்மையான தீண்டாமை அரவானிகள்தான் என்றேன் . ஒரு தாயே தான் பெற்ற பிள்ளையை தீண்ட மறுப்பது .....இந்த கொடுமை எங்கேனும் பார்த்ததில்லை என்றெல்லாம் சொன்னேன் .என் முயற்சிகளெல்லாம் வீணாகிபோனது . 
                                         பிச்சைகாரனுக்குகூட அவ்வளவு எளிதில் பிச்சை போடா மறுப்பேன் .ஆனால் எங்கேனும் கைதட்டல் கேட்டால் .........................? யாரோ ஒரு தாயின் ..தந்தையின் ...தன மகனை இழந்த அழு குரல் கேட்டுகொண்டே இருக்கிறது .அதனால் என் பாக்கெட்டில் இருக்கும் பணம் என்னையறியாமல் அவர்களின் கைகலில் திணித்து இருக்கேன் . ஒரு சராசரி மனிதனின் தவிப்பு ..அதற்க்கு உங்கள் சிறுகதை " குமரி " ஆறுதல் ! நன்றி ! !

    எழுத்தாளர் .தமிழ்ச்செல்வி எழுதிய " குமரி " சிறுகதைக்கு 27.1.2013 இல் எழுதிய விமர்சன கட்டுரை .

No comments:

Post a Comment