Tuesday 6 August 2013

பெண் விடுதலை கெஞ்சி பெறுவதல்ல ......!

                                                            

                                                 குடும்ப சிதைவுக்கு யார் காரணம் என்ற காரணம் தேடுகின்றனர். ஏன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களே புரிந்து கொள்வதில்லை என்ற வாதம் வலுவாகிகொண்டிருகிறது . உண்மையோ வேறுவிதமானது ...... காதலித்தாலும் ,காதலிக்காவிட்டாலும் ஆண் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு நடக்கும் வரை எந்த பிரச்சனையும் பெண்ணுக்கு வருவதில்லை .ஒரு சில இடங்களில் பெண் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு நடக்கும்வரைஅந்த குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வருவதில்லை...ஆனால் பெண் சொல்வதை கேட்பதாக தெரியவில்லை .ஆகவே சமூகத்தில் பெரும் பகுதி ஆணே ஆதிக்க சக்தியை இருகின்றான் . பெரும்பாலும் பெண்கள் ஆதிக்க சக்தியாய் இருப்பதில்லை .. ஏனென்றால் இது ஆணாதிக்க சமூகம் .

                                                         இந்நிலையில் ஒரு பெண்ணை .ஆண் திருமணம் செய்துகொண்டு பெண் வீட்டோடு மருமகனை போவது சுயமரியாதை குறைவானதாகவும் ,பெண்தான் ஒரு ஆணை திருமணம் செய்துகொண்டு அவள் பிறந்த வீட்டைவிட்டு கணவன் வீட்டுக்கு வரவேண்டும் ! அப்படி வருவது மரபு என்றும் இந்த ஆணாதிக்கசமூகம் காலங்காலமாய் கற்பித்துள்ளது . அதனால் "அவள் " அவளாக இருக்க முடிவதில்லை .

                                                       ஒரு ஆணைப்போல் அவளும் அவளாகவே இருக்க முயலும்போது ஒடுக்கப்படுகிறாள் . அந்த ஒடுக்குமுறையிலிருந்து வெளியேற அத்தனை மரபுகளையும் உடைத்தெரிகிறாள் . அதை ஏற்கும் மன நிலையில் இன்றைய ஆணாதிக்கம் இல்லை . அதற்காகபெண் விடுதலை கெஞ்சி கேட்டு பெறுவதல்ல... .இவைகளை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் பெண் விடுதலை என்பது வெற்றி பெற்றே தீரும் !

No comments:

Post a Comment