Saturday 10 August 2013

ஈழ விடுதலை ....!


                                                                                 சர்வதேசியம் ,தேசிய இன விடுதலை பேசுபவர்களே தமிழ அரசியல் ,இந்திய அரசியல் என்று இந்தியாவில் சுருங்கி சுருண்டு கிடக்கும்போது தமிழகமுதலாளித்துவ அரசியல்வாதிகள் அவர்களுக்கான அரசியல் செய்கிறார்கள் அது தமிழகத்தில் மொழி ,இலக்கியம் ,நாடகம் ,நடிப்பு என்று அவர்களுக்கான அரசியல் அதில் ஈழ விடுதலை என்பது வெறும் வெளி வேஷம் .அவர்களிடம் உலகளவில் மானுட விடுதலையையோ ? தேசிய இன விடுதலையையோ பேசுவதில் நம்மைத்தவிர வேறு முட்டாள்கள் உலகில் இருக்க மாட்டார்கள் .இருந்தாலும் பற்றியெரியும் நெருப்பை அணைக்க சாக்கடை நீரையும் பயன்படுத்துவது சாமர்த்தியம்தான் ஆனால் அதுவே எல்லாவற்றையும் சரி செய்யும் சரியான பாதையல்ல ! சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவைதான் அதற்காக இந்திய பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகளிடம் மண்டியிடுவது முறையுமல்ல ...... சரியுமல்ல .........

.                                       இலங்கையில் இருக்கும் .வடகிழக்கு .. மலையக தமிழின மக்களின் ஒருங்கிணைப்பு .... அடுத்து தமிழ் தேசிய இனவிடுதலைக்கான தேவை உணர்ந்த ஜனநாயக (சிங்கள )சக்திகளின் ஆதரவு அதன் பிறகுதான் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இவைகள்தான் இன்றைய தேவை ! இவைகளை திரட்ட பேரினவாத ராஜபக்ஷே அரசை எதிர்த்த போராட்டத்தை ஒன்றுபட்ட ஜனநாயக சக்திகளை இணைத்த ஜனநாயக போராட்டமாக இலங்கையில் நடத்துவதற்கான முயற்சிகள் மட்டுமே சரியானது !

                             தமிழகத்தில் உள்ள தேசிய - மாநில கட்சிகளில் யார் தேசிய இன விடுதலையை ஏற்கிறார்களோ அவர்களின் வழியில்தான் தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டோர் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை நடத்த முடியும் ! இந்த புரிதல் இல்லாமல் புலம்புவதில் பலனில்லை .....




      

No comments:

Post a Comment