Saturday 17 August 2013

முகம் கிழிக்கும்....முகநூல் !


                             


இது கனவு உலகம் ! நிஜம் வேறு .......!
இதில் உங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் !
என்ற தங்களின் வழிகாட்டுதலையும் , வாழ்த்தினையும் , பெற்றதன் விளைவாக இணையத்தில் தனக்கான பாதையை வகுக்க முயற்சிக்கிறேன்.  
 இது புகழ்ச்சியல்ல ...மனம் திறந்த உண்மை ! 
                        உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் நண்பர்களாக கிடைத்து இருகிறார்கள் ...நட்பு என்றால் எதையும் எதிர்பார்த்து இணைவதல்ல ..
.என்பதை நிஜமாக்கவே முயல்கிறேன் .இன்றைய நுகர்வு கலாச்சாரம்  
 " உனக்காக ஓடு ! உனக்காக எதையும் மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள் !
பெண்ணென்றால்...... அவளை உடல் தேவைக்காய் எடுத்துக்கொள் அல்லது முயற்சி செய் ! ஆணென்றால் நட்பென்று ஒன்று இல்லை
.நாசுக்காய் பேசி எதையாவது அவர்களிடமிருந்து பிடிங்கிக்கொள் !
என்ற வக்கரத்தை வாழ் நிலையாய் திணித்துக்கொண்டிருக்கிறது ! இவற்றிலிருந்து தலை தப்பினாலும் ........,என் நட்பு வட்டத்தை தாண்டி  
புத்தி ஜீவிகளும் , நேர்மைவாதிகளும் , பெண்ணியவாதிகளும் போராடிவருகிறார்கள்  யாரையும் எதிர்பாக்காமல் என்று உணர்கின்றபோது...   ஓராயிரம் சுத்திகளால் என் கர்வம் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. 
முயன்று வருகிறேன் ....... நட்பு ...! நட்பாகவே இருக்கவும் . நாம் பிறருக்காக இருக்கவும் ...... முயன்று பார்ப்போம் ! !

நண்பர் .மகேந்திரனுக்கு.......நன்றி ! 

No comments:

Post a Comment