Tuesday 21 August 2018

தலீத்...!

#தலீத்என்றவார்த்தையில்ஒளிந்துகொள்ளும்ஐயோக்கியத்தனம்...!

பறையர், பள்ளர் இனத்தவர்கள்
"தலீத்" என்ற வார்த்தைக்குள்
ஒளிந்து கொண்டு "அருந்ததிய
மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அதை ஊடகங்களும், அரசியல்
கட்சிகளும் மூடி மறைக்கி்ன்றன.
அதற்கு காரணம் அதில் பணியாற்றும் பறையர், பள்ளர்
சாதியை சேர்ந்தவர்கள் செய்து
வருகிறார்கள்.

பிற சாதிகளைப்போல
பறையர், பள்ளர் இன மக்களும்
தனக்கும் கீழே இருக்கும் சக்கிலியர்
என்ற அருந்ததிய மக்கள் மீது
சாதி வெ்றியை,  தீண்டாமை கொடுமையை அரங்கேற்றி
வருகிறார்கள்.

கண்டமங்கலத்தில் அருந்ததிய
இளைஞன் பறையர் வீட்டு
பெண்ணை காதலித்து திருமணம்
செய்துகொண்டார் அதனால் அவர்கள் அடித்து கொல்லப்பட்டனர்.

திட்டக்குடியில் அருந்ததியர்கள்
வீடுகள் மீது பறையர் இனத்தவர்கள் தாக்குதல்..

மதுரை சந்தையூரில் அருந்ததிய
மக்களுக்கு எதிரான தீண்டாமை
சுவர்...!

இப்போது...?
திருச்சி சிறுகனூரில் அருந்ததிய
இளைஞர் வாயில் சிறுநீர்
பாச்சி குடிக்க வைத்த
காட்டுமிராண்டித்தனம்.

இதையும் வெளி உ்லகிற்கு தெரியாமல் மூடி மறைக்க எவ்வளவோ முயன்றார்கள்
ஆனால் முடியவில்லை.

இப்போது "தலீத்"என்ற பொந்துக்குள் ஓடி ஒளிந்து
கொண்டார்கள்.

இந்த தீண்டாமை கொடுமையை ஒரே சமூகத்துக்குள் நடக்கும்
குற்றமாக மார்க்சிஸ்ட் கட்சியும் பார்ப்பது வேதனை.

இந்த ஒடுக்கு முறையும் "தீண்டாமை கொடுமை" தான் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியும் ஏற்க மறுக்கிறது என்பது இதன் மூலம்
அம்பலமாகிறது.



No comments:

Post a Comment