வீட்டில் 4 கறவை மாடுகள்
அதற்கு புல் அறுக்க வயலுக்கு
போகவேண்டும்.
அந்த மாடுகள் போடும்
சானியயை ஒரு இடத்தில்
அள்ளிப்போட வேண்டும்.
குமித்து வைத்த சானியை
ஒரு நாள் காலால் மிதித்து பக்குவமாக
கையால் உரண்டை பிடிக்க வேண்டும்.
அதை சானித்தட்டில் போட்டு
தலையில் சுமந்து மாடியில் தட்டி வராட்டி ஆக்க வேண்டும்.
மறு நாள் அந்த வராட்டியை
எடுத்து திருப்பி இன்னொரு
பக்கம் காய வைக்க வேண்டும்.
ஏன்னா...
வெறும் விறகு மட்டும் அடுப்பு எரிக்க போதாது.அடிக்கடி விறகு வாங்க முடியாது...
அப்போதெல்லாம் விறகு கடையில் வாங்க
வேண்டும்.
விறகு அடுப்பும் புகையுமாய்
வாழ்ந்து முடிந்து போனா
அம்மாவின் முகம் மட்டும்
கேஸ் அடிப்பில் வந்து மறைக்கிறது.
No comments:
Post a Comment