என் மீது ஒரு போதும்
பாவப்படாதே..!
அது இயலாதவனுக்கு
செய்யும் இறுதி அஞ்சலி.
என்னோடு ...
என் மீது உன் கோபத்தை
காட்டு..
உன் கோபம் தீரும் வரை
அவமானபடுத்த...
என் முகத்தில் காரி துப்பிவிடு...!
இன்னும் தீரவில்லை
என்றால்....?
நீண்ட இடைவெளி
விட்டுவிடு.
உனக்கு இனி வேலை இல்லை
அது கொன்று விடும்.
No comments:
Post a Comment