Friday 20 January 2017

தோழர். பாலனுக்கு ....


தோழர். பாலனுக்கு மனம் திறந்த மடல்...
----------------------------------------------------------------
தோழர்.பாலபாரதியை ஜல்லிக்கட்டு
எதிர்ப்பாளர்கள் பேச விடவில்லை
என்ற காரணத்தால் தங்களின் கண்டன
பதிவை படித்தேன்.

நீங்கள் கேட்பதில்
நூறு சதவீதம் நியாயம் இருக்கலாம்...!
தோழர். பாலன் போன்றோர் ஆத்திரத்தில்
எதை வேண்டுமானாலும்
பேசுவது முறையன்று...!

அதும் ஒரு எழுத்தாளர்.
மேடை பேச்சாளர். அவர்
வாயிலிருந்து " என்னத்த போராடி
என்னத்த கிழீக்கப்போரீங்க...?
என்று கேட்பது....அனுபவம் இல்லை
என்று எடுத்துக் கொள்வதா....?
அவர்கள் போராட்டத்தை பற்றிய
பார்வை இல்லை என்று எடுத்து கொள்வதா...?   என்று புரியவில்லை.

அரசியல் வேண்டாம் என்பதே
ஒரு அரசியல் என்பது தோழர்
பாலனுக்கு புரியாமல் போனது
என்ன...?

அவர்களின் பின் புலத்தில்
யார் ...யார்...இருக்கிறார்கள்
என்ற கேள்வி மேல் கேள்வி
கேட்கும் புத்திஜீவிகள் ஒன்றை
புரிந்து கொள்ள வேண்டும்.

மோடியின் அரசியலை
டாரு டாராக கிழிக்கிறார்கள்.
கார்பிரெட் நிறுவனங்களின்
ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்.
அதிமுகவின் இரட்டை வேடத்தை
அம்பலப்படுத்துகிறார்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு
அரசியலற்ற தன்மை இருக்கிறது
என்பதை அடித்து நொருக்கி இருக்கிறார்கள்.
இது மட்டுமே இப்போதைக்கு போதுமானது.
இது நீடிக்குமா...?
தொடருமா...? தெரியாது .அது அவர்களுக்கு
தேவை இல்லாமலும் இருக்கலாம்

தோழர். பால பாரதியை
பேச வேண்டாம் என்று
சொன்னதில் கோபப்படும்
நீங்கள் ஸ்டாலினையும்
பேசவிடவில்லை என்பது
உங்களுக்கு தெரியாதா...?
உங்களுக்கு வேண்டுமானால்
இருவரும் ஒன்றல்ல...
அவர்களுக்கு....?

 ஆனால்...
அவர்கள் சொல்வது
"அப்பட்டமான அரசியல்
சாயம் பூசியவர்கள் வேண்டாம்..!
என்று சொல்கிறார்கள்.
அது சரிதானே....?

வெகுஜன அமைப்பை எப்படி
நடத்துவது என்று கரைத்து
குடித்த சிபிஎம்- க்கு தெரியாமல்
போனது என்ன...?
அவர்கள் வெகுஜன அமைப்பாக
நடத்தியதால் குழப்பம் ஏற்பட்டுவிட்டதா...? என்ன...!

கூடங்குளம் அணுமின் நிலையம்
எதிர்ப்பு போராட்டத்தை உதயகுமார் நடத்திய போது
சி பி எம் நிலை என்ன....?
வேண்டாம் என்பது....!
த மு எ க ச நிலை வேறு
என்று சொல்லி ஆதவன் தீட்சண்யன் தலைமையில்
ஒரு குழு போய் ஆதரிக்கவில்லையா...?
கோட்டை விட்டது நீங்கள்
குறை அவர்கள் மீது அல்ல...





No comments:

Post a Comment