எதையும் இழக்காமல்
எதையும் பெறமுடியாது.
ஆனால் ...
மாணவர்களும் -இளைஞர்களும்
இழந்ததுதான் அதிகம்.
அதிகார வர்க்கம் அப்பட்டமாக
அவமானப்பட்டு போனதால்
அதற்கு ஈடாக காவல் நிலைய
தீவைப்பை காரணம் காட்டி
காட்டுமிராண்டி த்தனத்தின்
உச்சகட்ட அரங்கேற்றத்தை
நடத்தி இருக்கிறது.
மாணவர்களுக்கு கிடைத்த பெற்றி
காலத்தால் அழியாமல்
வரலாற்றின் பக்கத்தில் பொறிக்கப்பட்டு விட்டது.
அதற்கு அரசு கொடுத்த வலியும்
மாறாத வடுக்களாகி விட்டது.
இந்த வலிக்கான பிரதிபலிப்பாக
இனி வரும் காலங்களில்
அதிகாரத்தையும் போட்டி இட்டு கைப்பற்றலாம். அதை காலம்
தீர்மானிக்கும்.
இந்த போராட்டத்தின் வீச்சு
உலகலாவிய தமிழர்களுக்கும்
இந்திய தமிழனுக்கும் இணைப்பு
பாலத்தை போராட்டத்தின் மூலம்
இணைத்து இருக்கிறது.
குட்டித்தீவில்...
ஆயுதம் போராட்டம் நடத்திய
தமிழனின் தோல்வியை
அறப்போராட்டத்தின் மூலம்
மீண்டும் தமிழன் என்ற அடையாளம் நிறுவப்பட்டு இருக்கிறது என்பதே
போராட்டத்தின் குறியீடு.
No comments:
Post a Comment