இன்டெர் நெட்டில்
இன்றைய உலகம்
இயங்கி கொண்டிருந்தாலும் ,
இன்றும் ....
எங்கள் ஊரில்
எல்லோருக்கும்
ஊருக்கு பொதுவான
தகவல் சொல்லுவது
சில்லான் என்ற
தலீத் ....!
சமூகத்தில்
இழி தொழிலாக
கருதும் எதையும்
செய்யக்கூடாது
என்பதுதான்
என்னுடைய
ஆழ்ந்த கருத்து ...!
ஆனால்....
சில்லான் அப்படியல்ல
அப்படி சொல்வதை
'நான் ஏற்கமாட்டேன் '
என்னை யாரும்
இழிவாக பார்க்கவில்லயே..?
என்று வாதிடுவார் .
சில்லானை பொறுத்தவரை
அது உண்மையும் கூட
தன்னை தாழ்வாக அணுகினால்
எவராக இருப்பினும் ...
உயர்ந்தவர், தாழ்ந்தவர்
பேதமில்லாமல்..
கிழித்தெரிந்து விடுவார் .
பேதமில்லாமல்
அண்ணன் என்றே
கூப்பிடும் எனக்கு
நீண்ட காலத்துக்கு பிறகே
தெரிந்து கொண்டேன் ...
அவர் பெயர் சுப்பராயன்
என்று......!
No comments:
Post a Comment