Sunday 23 June 2013

.முகமூடிகளின் முகநூல்.....!



ஆட்சியில் இருப்பவர் அம்மாவா ?
ஆயாவா ? என்பதல்ல பிரச்சனை ......
செய்திருப்பது சரியா தப்பா ?
என்பதுதான் இன்றைய தேவை !

இலவசத்திட்டங்கள் ,
உணவு , காய்கறிகள் ,குடிநீர் !
இவற்றையெல்லாம் கிண்டலடித்து
அரசியலாக்கும் மனோ நிலை
எழைகளுடையது அல்ல ......

எனக்கு தெரிந்து ஏழை எவரும்
முக நூலில் இருப்பதாக தெரியவில்லை !
அப்படி இருநதால் ....?
இப்படிப்பட்ட பதிவுகளுக்கு
பதில் கிடைத்து இருக்கலாம் !

அரசியல் என்றால்
கண்ணை மூடிக்கொண்டு
எதிர்ப்பதல்ல ...........
மாறாக கிண்டலடிப்பதுமல்ல !....
மக்களுக்கான நல்லதை ஏற்பதும்
தவறுகளை சுட்டிக்காட்டுவதுமே !

மது விலக்கு வேண்டும் !
மக்களுக்கான வேலை வேண்டும்
என்பதில் மாற்று கருத்தில்லை !
அதற்காக .................

ஏதும் நடக்கவில்லை என்பதும்
நடப்பவை கூட அரசியல் நாடகமென்று
நையாண்டி செய்வதும் நல்லதல்ல !
நாகரீக அரசியளுமல்ல ..........

நானா ? ஆளும் கட்சிக்காரனுமல்ல...
ஆதரித்து கொடிபிடிப்பவனுமல்ல !
அடிபணிந்து கிடப்பவனுமல்ல ........
தமிழன் !

வார கடைசியை வரவேற்பதும்
வாய்க்கு ருசியாய் உண்டு
வாழ்த்து பரிமாறி கொள்வதல்ல
முக நூல் !

எழைகளுக்கான அரசியலை
எவரும் படிக்கவில்லையே ?
ஏகடியம் பேசுவது
எல்லோருக்கும் தெரியும் !

முக்காடுபோட்ட முகனூலீல்
முகம் தெரியாமல் இருக்கலாம்
முக மூடி கிழிந்து ..........
முடை நாற்றம் மூக்கறுக்கிறதே !








No comments:

Post a Comment