இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள்என்ற பெரும்பகுதி மக்கள் ஓட்டு போடுவதற்கு வருவதில்லை ...என்ன ஏதுன்னு விசாரித்தால் யாருமே சரியானவர்கள் இல்லை அதனால் நாங்கள் ஓட்டுபோட விரும்பவில்லை என்று சொல்கிறார்கள் . அப்போதுதான் அரசு இந்த முடிவுக்கு வருகிறது ஓட்டு உரிமை ஜனநாயக உரிமை அந்த உரிமையை எப்படியாவது பயன்படுத்தட்டும் என்றுதான் இதை கொண்டுவந்தார்கள் . வந்த பிறகும் அந்த மேதாவிகள் அந்த 49 o வை 99 சதவீதம் பயன்படுத்துவதே இல்லை என்பதுதான் உண்மை ! இனி வரும் காலங்களில் அப்படி பயன்படுத்திவிட போகிறார்கள் என்ற அச்சத்தில்தான் என்னுடைய பதிவு ! அப்படி வாக்காளர்கள் பயன் படுத்தி வேட்பாளர்களைவிடவும் 49 ஓவை பயன்படுத்தி 49 ஓ க்கு அதிக ஓட்டுகள் போட்டு இருந்தாலும் வேட்பாளர்களில் யார் அதிகம் ஓட்டுகள் வாங்கி உள்ளனரோ அவரே வெற்றி பெற்றவராக தேர்தல் துறை அறிவிக்குமாம் .
செல்லாத ஓட்டுக்கும் இந்த 49 ஓ க்கும் என்ன வித்தியாசம் ? அப்போ எதற்குத்தான் இந்த 49 ஓ என்று கேட்கிறீர்களா ? வாக்கு பதிவின் எண்ணிக்கையை கூட்டுவதற்குத்தானாம் ! இந்த கூத்தெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும் . நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த தேர்தல் முறை தவறானது ..... அதை மாற்றவேண்டும் ! அதை மாற்ற போராடவேண்டும் .... அதுவரை அதற்காக தேர்தலில் பங்கேற்கமாட்டேன் என்று சொல்வதும் தப்பு . இப்போ நடை முறையில் இருக்கிறது அதில் பங்கேற்று அதை நிர்மூலமாக்கவேண்டும் !
இன்றைக்கு பாராளுமன்ற அமைப்பு ஆளும் வர்கத்துக்கும் ,பெருமுதாளிகளுக்கும் ஆதரவாகத்தான் இருக்கிறது இதில் மாற்று கருத்து இல்லை . அதை நாம் எப்படி பயன்படுத்தப்படவேண்டுமேன்றால் அதும் ஒரு போராட்டக்களமாக ,அது ஒரு பிரச்சார மேடையாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறக்ககூடாது !
No comments:
Post a Comment