#வைரமுத்துமீதுசின்மயி
மட்டுமல்ல இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொது வெளியில் சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது
சொல்கிற்றார்கள்.
பெண்கள் அப்படி சொல்வது அவ்வளவு
எளிதானது அல்ல..!
அதோடு பாலியல் பாதிப்புக்குள்ளான நபரின் சாதியையும்,பாலியல் தொல்லை
கொடுத்தோரின் சாதியையும்
வைத்தும் விவாதிப்பது முறையும் அல்ல..
சரியுமல்ல..
அது வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டன் என்ற குருட்டு குரலை
போன்றதாகும்.
எல்லா ஆண்களுமே வாய்ப்பு கிடைக்கும்
போது பாலியல் அத்துமீறல் செய்கிறார்கள்
என்பதே உண்மை. இதில் எந்த வரையறை யும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை.
பாலியல் வன்முறை நடந்ததா..?
இல்லையா...? என்று விவாதித்து
விசாரிக்கப்பட வேண்டும்.
இங்கே...
இந்த விவகாரம்
பொருத்த வரையில்...
ஆண்கள்,பெண்களை
எது வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும்
செய்யலாம் என்ற ஆணாதிக்க
நிலையில் இருந்து சமூக ரீதியாக ,சட்ட ரீதியாக விசாரணை வளையத்துக்குள்
கொண்டு வருவதையே ஜீரனிக்க முடியவில்லை. என்றஆணாதிக்கத்தின் அகங்காரமே வானுக்கும் ,பூமிக்குமாய் துள்ளிக் குதிக்கிறது.
இந்த விவாதத்தில் எதிர்த்தும்,ஆதரித்தும்
தற்போது பேசிக்கொண்டு இருக்கும் ஆண்களுக்கும் இது பொருந்தும் என்பது தெரியாமலில்லை.
No comments:
Post a Comment