Thursday 31 August 2017

மாதவிடாய் கறை....!





பாளையங்கோட்டை பள்ளியில் படித்த
12 வயது குழந்தையின் ஆடையில்
மாதவிடாய்உதிரப்போக்கின் கறை
படிந்ததை கண்டு ஆசிரியர்
அவமானப்படுத்தியதால்
தற்கொலை செய்து செத்துப்போனாள்.

இந்த செய்தி பெரிய அளவில் மக்களின்
கவனத்துக்கு வரவில்லை , உப்பு சப்பில்லா
பிரச்சனையை கூட ஊதி பெரிதாக்கும்
ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாமல்
போனது ஆணாதிக்க மனோபாவத்தில
அன்றாடசெய்தியோடு ஒன்றாக மறைத்து
இரட்டடிப்பு செய்துவிட்டது கண்டனத்துக்கு
உரியது .

பெண் குழந்தைகளின் இயற்கை
உபாதைகாலங்களில் அவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி அணுக
வேண்டும் என்று கூட ஆசிரியர்களுக்கு தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத குற்றமே.அதோடு பாதிக்கப்பட்டது தன்
 குழந்தையாக இருந்தால் ...?அதே ஆசிரியர் இப்படித்தான் நடந்துகொண்டு இருப்பாரா..?


ஆண் , பெண் குழந்தைகளின் வளரிளம் பருவ மாற்றங்கள் ,மூன்றாம் பாலினம் பற்றிய
விஞ்ஞான பார்வை , பெண் குழந்தைகளின் மாதவிடாய் பராமரிப்பு போன்றவை பள்ளி பாடத்திட்டதில் சேர்க்கப்பட வேண்டும்.
அதுபற்றி வெளிப்படையாக ஊடகங்களில்
பொது விவாததை ஏற்படுத்தவேண்டும்.

அண்ட வெளியில் ஆய்வு என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி
அழும் அரசுகள், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு. சேனட்டரி நாப்க்கின்ஸ்
கொடுப்பது பற்றிய அடிப்படை அறிவே
இல்லையே என்பது பரிதாபத்துக்குரியது.

பெண் குழந்தைகளை பாதுகாக்க இனியும் தாமதிக்காமல் மன ரீதியாக ,உடல் ரீதியான
 அணுகு முறையை கடைபிடிக்க
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க
வேண்டும்.

"கறை நல்லது" என்று விளம்பரபடுத்தி
வியாபாரம்செய்யும் யுக்தியை வியாபாரியும்
அதன் மூலம்கோடிகளை குவிக்கும் ஊடகங்கள் "மாதவிடாய் கறையும் மனிதர்களுக்கு நல்லது..!
என்பதை காட்ட வேண்டும்.












1 comment:

  1. எதை பற்றியெல்லாம் பேச வேண்டுமோ அல்லது எதை பற்றியெல்லாம் விழிப்புணர்வு வேண்டுமோ அதை வைத்துதான் இங்கு வியாபாரமே நடக்கின்றது

    ReplyDelete