Friday 21 April 2017

ஆணாதிக்க சமூகம் என்பது.....?y


ஒரு ஆண் தப்பு செய்வது
பற்றியோ, ஒரு பெண் தப்பு
செய்வது பற்றியோ, இங்கு
பேசப்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக
எந்த சமூகம் அடக்கப்பட்டு,
ஒடுக்கபட்டு, இருக்கிறது
என்பதே இங்கு விவாதப் பொருள்.

ஆண் சமூகம்தான் பெண்
சமூகத்தை அடக்கி,ஒடுக்கி
வைத்து இருக்கிறது. அதை
தொடர்ந்து கடைபிடிக்க அவளது உடல் மீது புனிதத்தை புகுத்தி ஆதிக்கத்தின் நுகத்தடியில்
பிணைத்து இருக்கிறது.

பெண் சமூகம்
எந்த விதத்திலும் உடைத்து கொண்டுதன்னைவிடுவிக்க இயலாத வகையில்
ஆனாதிக்கம் சமூகம்,
பெண் உடல் மீதும்,
அவள் சிந்தனை மீதும்
கட்டுவரம்புகளை எழுப்பி
சிறையிட்டு வைத்து
இருக்கிறது.

அதை நியாயப்படுத்த கடவுள்
மதம்,சாதி, சம்பிரதாய
சடங்குகளை நிறுவி
ஆணாதிக்க சமூகமாக
கட்டமைத்து இருக்கிறது.

அதையும் மீறி விடாமல்
இருக்கவே புனிதம்
யோனியில் இருக்கிறது
என்று பாடம் நடத்தும்
ஆணாதிக்க சமூகம்,
அந்த புனிதத்தை
அவர்களே
வன்புணர்ச்சியால்
மீறுவதும்,அதை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்
பெண்களே என்றும் ,
 அதை காக்க
பெண்கள்தவறியதாகவும்
குற்றம் சுமத்துவதும்
ஆண்டாண்டு கால
ஐயோக்கியத்தனம்.

இதை தெரிந்து கொள்ள,
புரிந்து கொள்ள, இன்றைய
சமூக அமைபில் இருந்து
கொண்டு தெரிந்து கொள்ள
இயலாது.

மனிதன் தோன்றிய வரலாறு,
சமுதாயம் மாறிய வரலாறு,
போன்றவற்றை படிக்க வேண்டும்.

அதை விட்டு ...
இதிகாசங்களையும்,
புராணங்களையும் மேற்கோள்
காட்டுவதும், பேசுவது
சிறுப்பிள்ளைத்தனமானது

No comments:

Post a Comment