Saturday 15 April 2017

1...அம்பேத்கர் ...!

அம்பேத்கர் ....!
ஒரு தலைவரா...?
----------------------------
ஆமாம் என்றோ
இல்லை என்றோ
ஒரு வார்த்தியில்
சொல்லிவிட்டு சென்று விட
முடியாது..

அப்படி செல்ல ஒருவரால்
முடிகிறது என்றால்...?
அந்த இருவருமே வெவ்வேறு
வெவ்வேறு திசைகளில்
பயணிப்பவர்கள்.

அப்படித்தான் நானும் ,
 கடந்த காலத்தில்
இடதுசாரிகளும் கடந்து
போனார்கள் என்பதையே
என்னால் அறுதியிட்டு
சொல்ல முடியும்.

எவரும் துணிந்து தலித் மக்களுக்காக நிற்காத போது....
இடதுசாரிகள்
நாடுமுழுவதிலும் ஒடுக்கப்பட்ட ,
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது
சமூக ரீதியாகவும் ,
பொருளாதார ரீதியாகவும்
தொடுக்கப்பட்ட தாக்குதலை
தடுத்து நிறுத்த போராடினார்.
ஆனால் அம்பேத்கர் என்ற
தத்துவத்தை நிராகரிதார்கள்.

அம்பேத்கர் என்பது பெயரல்ல
அது ஒரு தத்துவம் என்பது
படித்தும் அதை சமூகத்தோடு
பொருத்தி பார்த்தும் அனுபவத்தோடு அதை தாமும்
அமலாக்க வேண்டும் என்று
உணரும் போது மட்டுமே
அந்த விஞ்ஞானத்தோடு
கைகோர்க்க முடியும்.

இந்த அடிப்படையான புரிதலில்
பொது உடமைவாதிகளுக்கு மாற்றம் வரவில்லை.
இந்த அடிப்படையான கல்வியை
மூத்த தலைமுறைக்கு பயிற்றுவிப்பதோடு,
இளம் தலைமுறைக்கு
பாடமாக்கவேண்டும்.
அதை செய்யாமல்
லால் சலாமும் ,ஜெய் பீம்மும்
இணைய வேண்டும் என்று
எழுதுவதும் ,பேசுவதும் ,
விழலுக்கு நீர் வார்ப்பதற்கு
ஒப்பாகும்.
....................


No comments:

Post a Comment