Sunday 22 December 2013

மரியாதைக்குரியவர்களுக்கு ....!



சில கருத்துக்கு பதில் சொல்லாமல் விட்டுவிடவே
நினைகின்றேன் .அப்படி விட்டுவிடுவதும் உண்டு ..
அப்படியே விட்டுவிட்டாலும் ...பதிவைபோட்டவர்கள்
விடுவாதாய் இல்லைஎன்பதுபோல...
தொடர்ந்து பதிவைப்போட்டுக்கொண்டே இருக்கும்போது வேறு வழியின்றி ,
அதற்கு மறுமொழி சொல்லவேண்டி இருக்கிறது !

அதுவும் ....
என் மரியாதைக்குரியவர்களே
இப்படி செய்யும் போது ....
என்ன செய்வதென்றே புரிவதில்லை ! 
என்னுடைய பதிவால் அவர்களின்
மனம் புண்பட்டு ... நட்பு வட்டத்திலிருந்து வெளியே
போய்விடுவார்களோ ?
இல்லை தம்மை இழிவு படுத்துவதாக நினைப்பார்களோ ? என்ற
மனப்போராட்டத்துக்கு பிறகே இதை பதிகிறேன் .

எது ஆனாலும்
சரியானதை சொல்லியே தீரவேண்டும் !
என்ற தீர்மானகரமான முடிவின் படியே இதை
பதிவு செய்கிறேன் .

குறிப்பாய் பெண், பெண்ணியம் பற்றி ....
பெண்ணுரிமை பற்றி ....
ஒரு சில ஆண்கள் எழுதும்
கண்ணியக்குறைவான செய்திகளைபதிவிடும்போது ....

மதம் சார்ந்து முட்டாள்தனமான வக்காலத்தும் ,
அதீதமான மதகட்டுப்பாடுகளை அரசியலாக்கவேண்டும்
என்ற மத வெறி குறித்த செய்திகளை பகிரும்போதும் ....

மூன்றாம் பாலினம் தொடர்பாக அடிப்படை
விஞ்ஞான அறிவு கூடஇல்லாமல் ...வாய்கிழிய
வசைபாடி பதிவுகள் பகிரும்போது ....

குடிப்பதும் ,கும்மாளமிடுவது பொதுமைபடுத்தி ,
பிறரின் மதிப்பீடுகளை கேட்பதுப்போல
மறைக்கப்பட்டிருக்கும் அசிங்கத்தை  கிளறி,
தமது தப்புக்களுக்கான அங்கீகாரத்தை பெற
முயலும் ...பதிவுகளை பதிவிடும்போது .....

முதலாளிகளின் ...விவசாயிகளின் பாதிப்புக்கு
தொழிலாளியின் கூலிதான் காரணம் என்று
கோணியில் கல்லைக்கட்டி அடிக்கும் ....
கோமாளித்தனமான பதிவுகளை பதிவிடும்போது ....
சகித்துக்கொள்ள முடிவதில்லை !

எல்லாவற்றிற்கும் வக்காலத்தல்ல,
நான் சொல்வதே வேத வாக்குமல்ல ...
எல்லாவற்றிக்கும் விடை இருக்கிறது
விஞ்ஞானத்தில் ......
விஞ்ஞான கண்ணோட்டத்தில்
இந்த சமூகத்தை பார்க்கும்போது
எல்லாம் புலப்படும் ...எளிதில் புரியும் !

அதுவரை ...
எல்லாமே புரியாத புதிர்தான் !

1 comment:

  1. அருமை... எனது பக்கத்தில் பகிர்கிறேன்...

    ReplyDelete