Friday 19 April 2013

கசப்பான சிகப்பு ..!


  
                                                                    

                                                                           

                                                                            சிகப்பு கொடியும் கையுமாய் வீதியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களை பார்க்கும் பொது இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா ? இச்சே ! ...ஆ ஊ இன்ன கொடியை பிடித்து கொள்ளவது கையை உயர்த்தி கத்துவது இதானா ? இவர்கள் கேட்டுத்தான் நடக்கப்போகிறதா? தேவையில்லாமல் கத்திக்கொண்டிருகிரார்கள் .. அதில் கொடுமை என்னான்னா ...இவர்களுக்கு மழையானாலும் கத்தறாங்க ...வெயிலானாலும் ...கத்தறாங்க ..அப்படி என்ன இவர்களால்முடிகிறது ? அதனாலேயே என்னமோ சிகப்புன்னா ....கடும் கோபமும் ...எரிச்சலும் வந்து வந்து போகும் !

                                             உண்டி கண்டு பிடித்ததே இவர்களுக்குத்தான்பா ! பின்ன என்னங்க ,இவங்க போராட நாம காசு கொடுக்கணுமா ? நம்ம காச வாங்கி கிட்டு நம்மளையே திட்றாங்க .......! இதுக்கெல்லாம் ஒரு கட்சியா ? இந்த லட்சணத்துக்கு இவங்க தேர்தலில் வேற நிக்க போறாங்களாம் ?

                                                     இப்படியெல்லாம் பேசிகொண்டிருந்த மக்களோடு மக்களாய் நானும் இருந்து இருக்கேன்.ஒரு முறை ஊர் பஞ்சாயத்தில் நிறு த்தப்படிருந்த ......சலவைக்கு போட்ட துணிய தொலைத்துவிட்ட அந்த பெண் . அவளை ஆளாளுக்கு அடித்தனர் . ,சுருண்டு விழுந்தவளுக்கு தண்ணீர் கொடுக்க கூட ஆளிலில்லை. அப்போது அங்கே வந்த நாற்பது வயதுக்காரன் " ஏன் அடித்தீர்கள் ...கேட்க ஆளிள்ளையா ? என்று துணிச்சலாய் கேட்டார் . கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் கோபம் வந்து ஆளாளுக்கு குதித்தனர் . கொள்ளாத அவன் இனி அவள் மேல் யாரவது கையை வைத்தால் நடப்பட்பதே வேறு என்றான் சற்று அமைதிக்கு பிறகு வேகமாய் வெளியேறினான்

                                                சிறுவனாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்த எனக்கு பேராச்சரியம் ! யார் அவர் என்றேன் .அவர் கம்யூனிஸ்ட் என்றார்கள் ...
எப்படி இவரால் முடிகிறது ? போலிஸ் கேட்காததை எப்படி இவரால் கேட்க முடிகிறது ............. புரியவில்லை ! அப்போ ........
என்னை பற்றி கேட்கிறார்கள் இப்போ ! புரியவில்லை என்ன சொல்வதென்று ? சிகப்பு மட்டும் அப்படியே .............கைகள் மட்டும் வேறு !





No comments:

Post a Comment