Sunday 2 June 2019

மாடுகளை கட்டி போடுங்கள்...!

அடியேய் ...!
பெண்ணே...

உன் மூடிய மார்பகத்தை துப்பட்டாவைப் போட்டு இன்னும் மூடிக்கொள்...! என்று சொல்லும் வன்மம் உனக்கு புரியவில்லையா...?

பெண்கள் மட்டுமே மூடிக்கொள்ள வேண்டும்
ஆபாசத்தை பாதுகாக்க...

எப்பொழுதும் மூடப்படாத ஆண்களின் மேனி ஆபாசத்தை தடுத்துவிடுமோ...?

கற்பு பற்றி பேச வந்தால் அஃது இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்..! என்றான் பாரதி.

கடிவாளமற்ற ஆண்களின் குரூர பார்வையை செருப்பால் அடித்து முடக்கிப்போடாமல் ...
சின்ன துப்பட்டா எதை மறைத்து விடும்...?
எப்படி தடுத்துவிடும்...?

அழகும் , ஆபாசமும்
பார்வையில் இருக்கிறது..!
எல்லாமே ஆணுக்கானது என்ற ஆணாதிக்க சிந்தனையில் இருக்கிறது

வேலி தாண்டி மேயாமல் இருக்க மாடுகளை கட்டி போடுங்கள்...!
பயிர்கள் பாதுகாப்பாய் இருக்கும்...! என்று துணிந்து சொல் .
... மணிவண்ணன் மணி...

1 comment:

  1. துப்பட்டா பற்றி பேசிய தாங்கள் புர்க்கா பற்றியும் பேசி இருக்கலாமே

    ReplyDelete